ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கண்ணாளா… எனை ஆளவா… கதைத்திரி

Status
Not open for further replies.

Madhusha

Well-known member
Wonderland writer
_4a1af806-ff11-498d-a575-70283a6d4ea3.jpeg

அத்தியாயம் 6

நிரோ பிருந்தாவை தனியாக விட்டுச் சென்று ஒரு மணி நேரத்தை கடந்திருந்தது..

தனியாக இருந்த பிருந்தா, ஒரு ஆங்கில நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள்..

படுக்கையில் அமர்ந்திருவளின் வயிறு கீழ்நோக்கி தாழ்வதை போன்ற உணர்வு..

குழந்தை உருண்டு வருகிறது.. இது சாதாரண வலி தான் என மனதுக்குள் சொல்லிக் கொண்டே, எழுந்து நின்றாள்..

கால் தரையில் ஊன்றியதும் தான் தாமதம் சுருக்கென்ற வலி அடிவயிற்றில்..

“அம்மாஆஆஆஆ..” என அலறியபடி கீழ் வயிற்றை பிடித்துக் கொண்டவளுக்கு,. இரண்டு அடி எடுத்து வைக்க முடியவில்லை..

சுருக் சுருக்கென்ற வலி அதிகமாகிக் கொண்டே போனது..

“அம்மாஆஆஆ” என்றவளின் கைகள் நேராக போனை தான் எடுத்தது.. நிரோஷாவிற்கு அழைத்தாள்..

ரிங்க் போய்க் கொண்டேயிருந்ததை தவிர, அதை எடுப்பதற்கான வழியைத் தான் காணவில்லை..

“நிரோ.. நிரோ.. பிக்கப்.. பிக்கப் த கால்..” என மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே, மெல்ல எழுந்தவளின் கண்களோ திரையில் தெரிந்த அவ்வியக்தன் என்ற கான்டக்ட் நம்பரிலேயே நிலைத்திருந்தது..

அவனின் நம்பர் தான் அது.. போன முறை செக்கப்க்கு செல்லும் போது, அவ்வியக்தனும் உடன் வந்தான்..

குழந்தையின் உடல்நிலையைப் பற்றி டாக்டரிடம் விசாரித்தவன், அவளின் போனில் தன் நம்பரை ஷேவ் பண்ணி விட்டே சென்றான்..

அவன் சேமித்த நம்பரை விட்டேற்றியாக நினைத்தவள், அந்த நிமிடமே மறந்து விட்டாள்.

ஆனால் இன்று, கைகள் ஏனோ தானாக அவன் நம்பரை தான் அழுத்தியது..

முழுதாக ஒரு நிமிடம் ரிங்க் போய்க்கொண்டேயிருந்தது..

எதிர்முனையில் யாருமே எடுக்கவில்லை என்றதுமே சட்டென்று போனை கட் பண்ணி விட்டாள்..

“இனி என்ன செய்வது?.” என யோசித்துக் கொண்டிருந்த பிருந்தாவின் போன் நம்பர் அலறியது..

அவ்வியக்தன் தான் அழைத்திருந்தான்..

எடுக்கலாமா? வேண்டாமா? என தவித்தபடி அமர்ந்திருந்தவளின் கைகளோ தானாக போனின் அழைப்பை எடுத்தது..

அழைப்பை எடுத்தவளுக்கு பேசத் தான் மனமின்றிப் போனது..

“ஹலோ.. பிருந்தா?..” என்ற குரலில், வயிற்றில் இருக்கும் குழந்தை.. தந்தையின் குரலைக் கேட்டு சந்தோஷத்தில் உதைத்ததா? இல்லை தான் உலகைக் காணும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து உதைத்ததா? என அறிவதற்கு முன்பாக..

குழந்தை உதைத்த உதையில் பிருந்தா தன்னை மறந்து, “அம்மாஆஆஆ” என அலறியே விட்டாள்..

முன்பெல்லாம் குழந்தை உதைக்கும் போது சிறு வலி மட்டுமே தோன்றும்.. ஆனால் இந்த வலி உயிர் போய் உயிர் வந்தது..

அவளின் அழுகையோடு கலந்த குரலைக் கேட்டவனுக்கு உடல் தூக்கிவாரிப் போட, வேகமாக எழுந்து அமர்ந்தான்..

இரண்டு நாட்களாக குடியின் பிடியில் இருந்தவன், காலை வேளையில் தான் உறங்க ஆரம்பித்திருந்தான்..

“பிருந்தா.. பிருந்தா..” என அவளை அழைத்துக் கொண்டே, காதில் ப்ளூடூத்தை எடுத்து மாட்டியவன், வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கினான்..

“டேய்ய்ய். எங்கே டா போற?..” என மிதுனை அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை..

வேகமாக ஓடியவன், “பிருந்தா. பிருந்தா.. நான் பேசுறது கேட்குதா?.. நான் வந்துட்டே இருக்கேன்.. கொஞ்சம்.. கொஞ்சம் பொறுத்துக்கோ..” என்றவனுக்கு தெளிவாக கேட்டது பிருந்தா அழும் அழுகை.

நிச்சயமாக அது குழந்தை பிறப்பதற்கான அறிகுறி என்பதை அவனும் அறிந்துக் கொண்டான்..

ஒரு மணி நேரத்தில் கடந்து வர வேண்டிய தொலைவை அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான் அவ்வியக்தன்..

நேராக உள்ளே வர, சோபாவில் அழுகையுடன் அமர்ந்திருந்தாள் பிருந்தா..

அவளின் கண்களில் அவ்வளவு கண்ணீர். ஏனோ அவளின் கண்ணீர் உயிர் வரை சென்று தாக்கியது அவனை..

“பிருந்தா.. பிருந்தா..” என அழைத்துக் கொண்டே வந்தவன், நொடி தாமதிக்காமல் அவளை கையில் ஏந்திக் கொண்டான்..

காரில் ஒழுங்காக உட்காரக் கூட முடியவில்லை அவளால்.. வலியில் உயிர் போனது அவளுக்கு..

அத்தனை வேகத்தில் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தான்..

பிருந்தாவை செக் செய்த டாக்டர். கர்ப்பப்பை வாய் இன்னும் சரியாக திறக்கவில்லை.. குழந்தை பிறப்பதற்கு இரவு நேரமாகும் என சொல்லி விட, அதிர்ச்சியில் வாயை பிளந்து விட்டாள் பிருந்தா..

“என்ன நைட்டாகுமா?..” என மைனாக்குஞ்சு வாயைப் பிளந்தபடி வைத்திருந்தவளை சிறு சிரிப்புடன் பார்த்தான் அவ்வியக்தன்..

“பின்னே உடனே குழந்தை பிறந்திடுமா?.. உனக்கு வந்திருக்கிறது டெலிவரி பெயின் தான்.. பட் குழந்தை பிறக்கிறது எல்லாம் சொல்ல முடியாது..” என்றவனை வலியுடன் ஏறிட்டுப் பார்த்தாள் பிருந்தா..

5 நிமிடம் வலியே இல்லாததை போல் உணர்ந்தாள்.. ஆனால் அதற்கடுத்த 10 நிமிடம் வலியில் துடித்து அழுதாள்..

வலியில் துடிக்கும் பொழுதெல்லாம் அவ்வியக்தன் கை தான் அவளுக்கு பலமே..

அவன் கையைப் பிடித்தவளின் கரங்களோ, அநியாயத்திற்கு நடுங்கியது..

“என்னடா இவ இப்படி பயப்படுறா?.. ” என நினைத்த அவ்வியக்தனுக்கு, அவளின் பயம், அழுகை இரண்டுமே இவனை மிரட்டியது..

“கொஞ்சம் ரிலாக்ஸா இரு பிருந்தா.. அப்போ தான் குழந்தையை நல்லபடியா பெத்துக்க முடியும்”

“ஓஹோ.. அப்போ தான் நீ குழந்தையை தூக்கிட்டுப் போக முடியும்.. போடா நான் என் குழந்தையை யாருக்கும் தரமாட்டேன்.. உன்னை யாருடா கூப்பிட்டது?..”

“ஏது டா வா?..”

“அம்மாஆஆஆ..” என அதற்குள் வலியில் கத்தினாள்..

ஒரு நிமிடம் நன்றாக பேசினாள்.. மற்றொரு நிமிடம் அவனை மானாவாரியாக திட்டித் தீர்த்தாள்..

பிரசவ வலியில் அவளுக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை.. அடிக்கடி பார்த்தீபனையும் திடடித் தீர்த்தாள்..

சில நிமிடம் ஏதோதோ சொல்லி அழுதாள்.. அவள் ஏன் அழுகிறாள் என புரியாவிட்டாலும், அவளின் கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தான் அவ்வியக்தன் உற்ற துணையாக..

ஒரு கட்டத்தில் தாள முடியாமல் வாய் விட்டு கதறியழுதவளை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றனர் தாதியர்கள்..

அழைத்துச் சென்ற பின்னரும், பிருந்தாவின் அழுகைக் குரல் மட்டுமே வெளியில் கேட்டது..

“அம்மாஆஆஆஆ.. அம்மாஆஆஆ..” என்றவள் யார் யாரையோ அழைத்தாள்..

ஆனால் அவர்கள் யாரும் வந்து அவள் வலியை தாங்கிக்கப் போவதில்லையே..

குழந்தை என்ற பொக்கிஷம் தங்கள் கைக்கு கிடைக்க வேண்டுமாயின் வலி என்ற சாவியால் மட்டுமே முடியும்..

வலியில் ஒரு வித மயக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்தாள் பிருந்தா..

அவளை மயக்கத்தில் இருந்து விடுவிக்க எவ்வளவோ போராடினார்கள் தாதியர்கள்..

ஆனால் யாராலையும் அவளை மயக்கத்தில் இருந்து விடுவிக்க முடியவில்லை..

“சார்.. சார்..” என நர்ஸ் ஒருவர் வேகமாக அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

“என்னாச்சி சிஸ்டர் எனி ப்ராப்ளம்?..” என அவ்வியக்தனை முந்திக்கொண்டு வந்து நின்றாள் நிரோஷா..

இப்பொழுது தான் தகவல் அறிந்து வந்திருக்கிறாள்..

“அவுங்க புருஷன் யாரு?..” என்றதும் திருதிருவென முழித்தனர் இருவரும்..

“சார் சொல்லுங்க பேஷன்டோட புருஷன் யாரு?..” என்றார்..

இருவரின் அமைதி அவரைக் கடுப்பேற்றியதோ என்னவோ?.. “என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க?.. புருஷன் எங்கே ம்மா?. புருஷன் இல்லாமலா புள்ளை வந்தது?..”

“அந்தக் குழந்தையோட அப்பா நான் தான்..” என ஓரடி முன்னே வந்த அவ்வியக்தனை ஒரு மார்க்கமாக பார்த்தார் நர்ஸ்..

“ஏன் இதை சொல்ல இவ்வளவு நேரமா?. நான் எவ்வளவு நேரம் கேட்கிறேன்.. புருஷன் யாரு?.. புருஷன் யாருன்னு.?” என சலிப்பாக சொன்னவர், அவன் முன்னால் ஒரு பார்மை நீட்டினார்..

“என்னதிது?..” என கேட்டாள் நிரோஷா..

“பேஷன்ட் மயங்கி விழுந்தட்டாங்க சார்.. நாங்க எவ்வளவு ட்ரை பண்ணியும் மயக்கத்துல இருந்து வெளியே கொண்டு வர முடியலை.. அதான் ஆப்ரேஷன் பண்ணலாம்னு இருக்கோம் சார்.. கையெழுத்துப் போடுங்க..” என்றதும் அவ்வியக்தனுக்கோ, இனம் புரியாத பயம் ஏற்பட்டது..

“ஆப்ரேஷன் பண்ணா அவளுக்கு ஏதும் ஆகாதுல்ல..” என நிரோஷா கேட்டாள்..

“குழந்தைக்கு ஏதும் ஆகாதுல்ல..” என கேட்ட அவ்வியக்தனை தீயாக முறைத்தாள் நிரோஷா.

“சார் நீங்க கையெழுத்துப் போட்டா, நாங்க சிக்கீரமாக ப்ரோசிஜர் ஸ்டார்ட் பண்ணிடுவோம்.. போடுங்க சார் ப்ளீஸ்..” என்றவர் நீட்டிய பார்மில் தயங்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்..

ஆப்ரேஷன் முடியும் வரை அறை வாசலிலேயே காவலாய் கிடந்தனர் நிரோஷாவும், அவ்வியக்தனும்..

பல போராட்டத்திற்கு பிறகு மண்ணில் வந்து உதித்தான் அவ்வியக்தன் - பிருந்தாவின் தவப்புதல்வன்..

குழந்தையின் அழுகையை கேட்டவனுக்கு அவனையும் அறியாமல் சந்தோஷம் அவன் முகத்தில் வந்துப் போனது..

“சார் டவல் கொடுங்க..” என தாதி ஒருவர் வெளியே வந்து கேட்க, அவ்வியக்தன் திருதிருவென முழித்தான்..

நிரோஷா தான் கொண்டு வந்த பையில் இருந்து உடனே எடுத்துக் கொடுத்தாள்..

சிறிது நேரத்தில் அழகிய பேபி பிங்க் கலர் டவலில் புத்தம் புது ரோஜாய் மலராய், கருவறை விட்டு மண்ணகம் வந்து பூவை பார்த்து கண்களோடு சேர்ந்து உதடுகளும் மலர்ந்தது அவ்வியக்தன்..

“என் பையன்..” என உதடுகள் மெல்ல முணுமுணுக்க.. நிரோஷாவின் கைகளில் இருந்த குழந்தையின் முகத்தை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனின் கண்களில் தெரிந்த ஆசையில், “தூக்குறீங்களா?..” என நிரோஷா கேட்டாள்..

“இல்லை.. இல்லை எனக்கு குழந்தையை தூக்க எல்லாம் தெரியாது?..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாதி ஒருவர் ஆப்ரேஷன் அறையில் இருந்து வெளியே வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்..

குழந்தையின் எடை, குழந்தை பிறந்த நேரம் எல்லாவற்றையும் எழுதி குழந்தையின் கையில் மாட்டி விட்டிருந்தனர்..

சிறிது நேரத்தில் பிருந்தாவை நார்மல் வார்டிற்கு மாற்றியிருந்தனர்..

இன்னும் மயக்கம் தெளியாமல் தான் இருந்தாள் பிருந்தா..

சில மருந்துகள் மெடிக்கலில் வாங்கி வரச்சொல்லி நிரோஷாவிடம் தாதியர் சொல்லியிருந்ததால், அவள் மருந்து வாங்க சென்றிருந்தாள்..

அவ்வியக்தன் குழந்தையை தூக்கிச் சென்று விடலாம் என அறைக்குள் சென்றான்..

குழந்தையை தாயின் அருகிலேயே படுக்க வைத்திருந்தனர்.. மயக்க நிலையிலும் குழந்தையை வலது கரத்தால் அணைத்தபடி படுத்திருந்தாள்..

அவளின் முகத்தில் அவ்வளவு சோர்வு.. வேகமாக குழந்தையை தூக்கச் சென்றவனின் போன் அலறியது..

அங்கிருந்த நர்ஸ் ஒருவர் அவனை திரும்பிப் பார்க்க, சட்டென்று போனை எடுத்துப் பார்த்தான்..

அவனின் க்ரேனி திரிபுர சுந்தரி தான்..

சட்டென்று நெற்றியை நீவிவிட்டு போனை எடுத்தான்..

“எப்படியிருக்க அவ்வி?..” என்றவரின் பார்வை சற்று கூர்மையாகியது..

“எங்கே இருக்க அவ்வி?.. பார்க்க ஹாஸ்பிட்டல் மாதிரி இருக்கு?..” என்றவரைக் கண்டு தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு..

“அது வந்து க்ரேனி.. க்ரேனி..” என இழுத்துக் கொண்டிருந்தான்..

“சார் பையனைக் கொஞ்சம் பிடிங்க..” என நர்ஸ் ஒருவர், பூங்குவியலை அவன் கையில் கொடுத்து அவன் போனை வாங்கி விட்டார்.. எதிரில் வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் விழிகளில் விரிந்தது..

“யார் குழந்தை அவ்வி இது?.. பார்க்க உன்னை மாதிரியே இருக்கு..” என்றவரை மேலும் அதிர்ந்து பார்த்தான்..


"என் குழந்தை தான் க்ரேனி.." என்றான்..

"அப்போ என் பேத்தி எங்கே டா?.." என்றவருக்கு, அந்த நர்ஸே படுக்கையில் இருந்த பிருந்தாவை காட்டினார்..

நர்ஸ் செய்தது அதிகபட்சம் என அவனுக்கே தோன்றியது.. அவரை அடித்து நொறுக்கிவிடும் வேகம் கூட வந்தது..

"சிஸ்டர் என்ன பண்றீங்க?.." என அவ்வியக்தன் நர்ஸை அதட்டினான்..

போனை அணைத்து விட்டு அந்த நர்ஸ் அவ்வியக்தனை திரும்பிப் பார்த்தவர், "சார் உங்க ஒய்ப் மேல நீங்க எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு நான் பார்த்துட்டு தான் சார் இருந்தேன்.." என்றவர் அவ்வியக்தன் கைகளில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார்..

இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருந்தாள் பிருந்தா..

அவளின் அருகில் சென்ற அவ்வியக்தன் அவனையும் அறியாமல், பிருந்தாவின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் நிரோஷா..

அவளின் கண்களுக்கு தப்பாமல் பட்டது இந்தக் காட்சி..

குழந்தை பிறந்து முடியாமல் கிடப்பவளிடம் தன் இச்சையை தீர்க்கப் பார்க்கிறானே, என்பது போல் தான் பார்த்து வைத்தாள் நிரோஷா..


 
Last edited:

Madhusha

Well-known member
Wonderland writer
_1b5c9ed6-9369-4073-a310-f831349d272b.jpeg
அத்தியாயம் 7

அவளின் பார்வையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் என்ன நினைக்கிறாள் என்று..

“என்ன அப்படி பார்க்கிற?. கிஸ் தானே பண்ணுனேன்? மருத்துவ முத்தம்னு நினைச்சிக்கோ.” என்றவனை மேலும் கீழும் ஏற இறங்க பார்த்தவள், “ச்சீ.. பே..” என உதட்டை சுழித்தாள் நிரோஷா..

அவளின் உதட்டுச் சுழிப்பை பார்த்தவனுக்கு சுர்ரென்று கோபம் உச்சந்தலைக்கு ஏறியது..

“சார் கொஞ்சம் வெளியே போறீங்களா?.. அவளுக்கு சிலது செய்யணும்..” என நிரோஷா சற்று அதட்டினாள்..

“என்ன பண்ணப் போறீங்க?..” என ஆர்வமாக கேட்க,

“நாப்கின் மாத்தப் போறேன்.. இங்கேயே இருக்கீங்களா?..” என்றவளின் கேள்வியில் அடித்து பிடித்து வெளியே ஓடி வந்தான் அவ்வியக்தன்..

அப்பொழுது தான் வந்தான் மிதுன்..

“என்னடா குழந்தை பிறந்திடுச்சா?..” என அறையை லேசாக எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“ஆமா டா பையன்..” என வாயெல்லாம் பல்லாக சொன்ன நண்பனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் மிதுன்..

“சூப்பர் மச்சான்.. எப்போ குழந்தையை நம்மக்கிட்ட கொடுப்பாளாம்?..”

“தெரியலை மச்சான்.. எப்படியும் நாளைக்கு குழந்தையை நம்மக்கிட்ட கொடுத்துடுவா.. இல்லைன்னா கொடுக்க வைப்போம்” என திமிராக சொன்னவன் அறியவில்லை..

நாளை அவனை ஒட, ஓட அவள் விரட்டப் போகிறாள் என்று..

“வா டா.. எனக்கு பையன் பிறந்ததை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுவோம்..” என அவ்வியக்தனும், மிதுனும் ஹாஸ்பிட்டலில் இருந்த அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஸை அள்ளிக் கொடுத்தான்..

இருவருமே மகிழ்ச்சியின் உச்சத்தில், ல லா.. லலா.. ல லா என முத்து படத்தில் ரஜினி பாடுவதைப் போன்று பாடிக்கொண்டே வீட்டை வந்தடைந்தனர்..

நாளை அவர்கள் மகிழ்ச்சிக்கெல்லாம் ஒருத்தி சங்கு ஊதப் போகிறாள் என்பதை அறியாமல்.

அடுத்த நாள் காலை, பல்லு கூட விளக்காமல் ஓடி வந்திருந்தனர் அவ்வியக்தனும், மிதுனும்..

ஆனால் அவர்கள் அடித்த சென்ட்டின் ஹாஸ்பிட்டலில் பல பேரை மயக்கமடைய வைத்திருக்கும்.. அவ்வளவு அடித்துக் கொண்டு, இல்லையில்லை சென்ட்டில் குளித்துக் கொண்டு வந்திருந்தனர்..

அறைக்கதவின் முன்னால், ஸ்கூல் படிக்கும் பையன் போன்று இருவரும் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தனர்..

“கதவை தட்டு அவ்வி?..” என மிதுன் சொல்ல,

“இல்லை, குழந்தை தூங்கிட்டு இருந்தா, கதவு தட்டுற சத்தத்துல டிஸ்டர்ப் ஆகிடாது?..” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தான் மிதுன்..

“ஏன்டா இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்க?.. இங்கே பாரு குழந்தை பிறந்து 1 நாள் தானே ஆகியிருக்கு.. மேக்ஸிமம் குழந்தை 20 மணி நேரம் தூங்கும்.. நான் நெட்ல படிச்சேன்.. சோ நீ கதவை தட்டு..” என மிதுன் அவனை ஊக்குவிக்க,

“நீயே தட்டேன், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..”

“நீயே தட்டு..”

“நீ தட்டு..” என இருவரும் மாறி மாறி சண்டை, படாரென்று கதவு திறக்கப்பட்டது..

கதவு திறக்கும் சத்தத்தில் இருவரும் திருதிருவென விழிக்க.. அங்கு நின்றிருந்த நிரோஷா இருவரையும் கண்டு கண்களை சுருக்கினாள்..

“நீங்க இங்கே என்ன பண்றீங்க?..” என்றவளை பார்த்து,

“குழந்தையை தூக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்..” என மிதுன் உளறிக் கொட்ட,

“ஏது..” என நிரோஷா அலறினாள்..

“இல்லை.. இல்லை அவன் விவஸ்தை கெட்டவன், குழந்தையை பார்த்துட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்..” என்றவர்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, அங்கு சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்க, மணி 5.15 என காட்டியது..

அவளுடன் சேர்ந்து, அவர்களும் தலையை சரித்து கடிகாரத்தை தான் பார்த்தனர்..

“அய்யய்ய்யோஓஓ.. நாம சிக்கீரம் வந்துட்டோம் போல மச்சான்..” என மிதுன் கேட்க,

“ஆமா டா குழந்தை மேல உள்ள பாசத்துல நேரம் காலம் தெரியாம வந்துட்டோம்..” என சமாளித்து வைத்தான் அவ்வியக்தன்..

“ரொம்ப ரொம்ப சிக்கீரமா வந்துட்டீங்க?.. இப்போ எல்லாம் குழந்தையை பார்க்க முடியாது.. நீங்க காலையில 8 மணிக்கு போல இங்கே வாங்க..” என்ற நிரோஷாவை அதிர்ந்து பார்த்தனர் இருவரும்..

ஏது எட்டு மணிக்கு வரணுமா?. என்னை விளையாடுறீயா நீ? என சண்டைக்கு நின்றது என்னவோ மிதுன் தான்..

“ஆமா உன் கூட விளையாடுறதுக்கு நீ என் மாமா பையன் பாரு.. அவளே இப்போ தான் தூங்கியிருக்கா.. நீங்க காலையில வாங்க..” என டமாரென்று கதவை அடித்துச் சாத்தி விட்டாள் நிரோஷா..

“பார்த்தீயா டா இந்த நெட்டைக் கொக்குக்கு எவ்வளவு திமிருன்னு?..” என அவ்வியக்தன் கறுவிட,

“ஆமா மச்சான், கொஞ்சம் அழகா இருக்காங்கிற திமிரு..” என்றான் மிதுன்..

“அவ அழகா இருந்தா உனக்கென்ன இப்போ?..” என தன் நண்பனை ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான் அவ்வியக்தன்..

“இல்லை மச்சான் பார்க்க, கண்ணுக்கு குளிர்ச்சியா, பனிக்கட்டியாக உருகுற ஐஸ்கீரிம் மாதிரி அழகா இருந்தாளா?..” என்றவனை முறைத்துக் கொண்டு நின்றான் அவ்வி..

இங்கே பாரு மச்சான், பார்த்தீபனுக்கு செருப்படி விழுந்த வீடியோவை நீ எதுக்கும் பார்த்துக்கோ மச்சான், அடுத்த பார்த்தீபன் நீயாகிடாதே.. என இருவரும் கேன்டீன் நோக்கி தான் சென்றனர்..

காலையில் இருவருமே சாப்பிடவில்லை.. அதனால் காலை காபி குடித்து விட்டு, மீண்டும் வந்து கதவை தட்ட, இம்முறை கதவை திறந்தது நிரோஷா அல்ல பிருந்தா தான்..

அப்பொழுது தான் வாஷ் ரூம் சென்று விட்டு நடக்க முடியாமல் நடந்து வந்தவள், நிரோஷா அங்கில்லாததால் அவளே சென்ற கதவை திறந்தாள்..

நிற்க முடியாமல் தள்ளாடியபடி சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்றவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது..

தலையெல்லாம் கலைந்து, கண்களோ அநியாயத்திற்கு தூக்கத்திற்கு கெஞ்சியது..

ஒரே நாளில் அவளின் ஒட்டு மொத்த ரத்தத்தையும் யாரோ உறிஞ்சி எடுத்தாற் போன்று, முகமெல்லாம் வெளிறிப் போயிருந்தது..

அவளால் அதிக நேரம் நிற்க முடியாமல், கால்கள் தள்ளாட, சட்டென்று கீழே விழப் போனவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டான் அவ்வியக்தன்..

அவளை தோளோடு அணைத்தவாறே, கட்டிலில் அமர வைத்தவன், தொட்டிலில் கிடத்தியிருந்த குழந்தையை தான் பார்த்தான்..

சுத்தமாக துடைத்து எடுத்து, பார்ப்பதற்கே பால்வண்ண நிறத்தில், பனியில் மலர்ந்த ரோஜா போன்று படுத்திருந்தான் அவன் மகன்..

“குழந்தை அழகா இருக்குல்ல டா..” என்ற மிதுன் சொல்லி முடிப்பதற்குள், அவன் வாயிலேயே ஒரு அடி விழுந்தது நிரோஷாவால்..

“ஏய்ய்ய்..” என அவன் கத்த,

“அறிவிருக்கா உனக்கு?.. பச்ச புள்ளையை பார்த்து அழகா இருக்கேன்னு சொல்லுறீயே, திருஷ்டி படாது.. அப்புறம் குழந்தைக்கு ஏதாவது பண்ணும்..” என்றதும் மிதுன் சற்று அமைதியாகினான்..

குழந்தை என்ற வார்த்தை அவனை கட்டுப்படுத்தியது.. ஆனாலும், தன்னை அடித்த நிரோஷாவை சும்மா விட முடியுமா?, அவள் கைகளில் நறுக்கென்று கிள்ளி விட்டான்..

“ஆஆஆ.. வலிக்குது டா” என கத்தியவளை கடைக்கண்ணால் ஒரு மார்க்கமாக பார்ததான்..

அவனின் பார்வையில் நிரோஷாவிற்கு தான் சற்று பயம் தான் கொடுத்தது..

“எதுக்கு சார்? காலையில இருந்து இங்கேயே டேரா போட்டுட்டு இருக்கீங்க?..” என நிரோஷா கத்திக் கொண்டே, ப்ளாஸ்க்கில் கொண்டு வந்த பாலை ஆற்றிக் கொண்டே கேட்டாள்..

“குழந்தையை எப்போ கொடுப்பீங்கன்னு கேட்டுப் போகலாம்னு வந்தோம்..” என அவ்வியக்தன் பிருந்தாவை பார்த்துக் கொண்டே கேட்டான்..

அதுவரை வலியில் சுருங்கியிருந்த முகம், சட்டென்று ஏளனமாக புன்னகைத்தது..

“எந்தக் குழந்தையை அவ்வியக்தன்?..” என வலியைப் பொறுத்துக் கொண்டு கேட்ட பிருந்தாவை அழுத்தமாக பார்த்தான் அவ்வியக்தன்..

“எந்த குழந்தைன்னா, வாட் யூ மீன்.. என் பையன் எனக்கு வேணும்..” என பல்லைக் கடித்துக் கொண்டே கேட்டவனைக் கண்டு, இகழ்வாக புன்னகைத்தாள் பிருந்தா..

அவளின் புன்னகை அப்படியொரு எரிச்சலைக் கொடுத்தது அவனுக்கு..

“உங்க பையனா?.. அது யாரு சார்?..” என்றாள் நக்கலாக..

“என்ன விளையாடுறீயா நீ?.. என் குழந்தை இதோ இருக்கானே இவன்தான்..” என தொட்டிலை கை நீட்டினான் அவ்வியக்தன்..

“கொடுக்க முடியாது..” என நிமிர்வாக சொன்னாள் பிருந்தா..

“கொடுக்க முடியாதா?.. ஏன்?.. ஏன் கொடுக்க மாட்ட நீ?.. அது என் குழந்தை..” என்றவனைக் கண்டு அந்த நிலையிலும் இகழ்வாக புன்னகைத்தாள்..

“அது உங்க குழந்தை தான். என் பையனோட பயலாஜிக்கல் பாஃதர் நீங்க தான். ஆனால் உங்களால அவன் மேல உரிமைக் கொண்டாட முடியாது.. நீங்க வாடைகத்தாய் மூலமா குழந்தை பிறக்க நினைச்சது பண்ணது சட்டத்துக்குப் புறம்பானது.. அந்தக் குழந்தை உருவாகணும்னா உங்களுக்கு கல்யாணமாகி 5 வருஷமாகியிருக்கணும் சட்டம் சொல்லுது.. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகலை..” என்றவளின் வார்த்தையில் முழுதாக அதிர்ந்தது அவ்வியக்தன் மட்டுமில்லை நிரோஷாவும் தான்..

இப்படியொரு வழியில் அவள் கூட யோசிக்கவில்லையே.

“டேய்ய்ய் மச்சான் இவக்கிட்ட என்னடா பேச்சு வேண்டிக்கிடக்கு, குழந்தையை தூக்கு நாம போயிட்டே இருப்போம்..” என மிதுன் திமிராக சொன்னான்..

“நீங்க குழந்தையை தூக்கிட்டுப் போனீங்கன்னா, போலீஸ் தான் உங்க வீட்டு முன்னாடி வந்து நிக்கும்.. பரவாயில்லையா?..” என்றவளை வன்மத்துடன் பார்ததுக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான்..

அன்று வன்மத்துடன் வெளியேறியவன் தான் அதன் பின் பிருந்தாவை பார்க்கவேயில்லை..

பிருந்தாவோ குழந்தை பிறந்ததில் இருந்தே, துணைக்கு அவர்கள் அடிக்கடி செல்லும் ஆசிரமத்தில் இருந்து, ஒரு முதியவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்..

குணவதி அவர் பெயர்.. அவர் தான் குழந்தையை குளிப்பாட்டி, அதை சீராட்டுவது.. குழந்தையை மட்டுமில்லாது, பிருந்தாவிற்கு தேவையான லேகியம், மருந்து கசாயம், எலும்புக்கு பலப்படும் உளுந்து, ஆட்டுக்கால் என அனைத்தையும் சென்றுக் கொடுப்பது..

கிட்டத்தட்ட அவர் இருப்பது தான் அவர்களுக்கு பலமே.. பிருந்தாவிற்கு தாய் என்ற இடத்தில் இருந்தது என்னவோ குணவதி தான்..

ஆயிற்று இன்றோடு குழந்தை பிறந்த ஆறு மாதத்தைக் கடந்திருந்தது..

அடுத்ததாக வேலைக்கு செல்ல வேண்டும் என்ற யோசனை தான் பிருந்தாவிற்கு..

குழந்தை பிறப்பு, இத்தனை நாள் வீட்டிலேயே இருந்ததால் அவளின் சிறு சேமிப்புக் கூட கரைந்துக் கொண்டே போனது..

பார்த்தீபனை திருமணம் முடித்ததில் இருந்து, தாய் தந்தையிடம் பணம் அனுப்ப வேண்டாம் என சொல்லி விட்டாள்.

இப்பொழுது அவள் கேட்டால் அவர்கள் பணம் அனுப்புவார்கள்.. ஆனால் கேட்கத் தான் இவளுக்கு நா எழவில்லை..

அவர்கள் பணம் இல்லாமலே, தன் குழந்தையை வளர்த்து நல்ல நிலைக்கு தாய்ப்பாசத்துடன் வளர்க்க வேண்டும் என விரும்பினாள்..

சில கம்பெனிகளுக்கு இன்டர்வ்யூ சென்று விட்டும் வந்திருந்தாள். ஆனால் அவளுக்கு தோதான நேரம் தான் கிடைக்கவில்லை..

குழந்தையை கிட்டத்தட்ட 8 மணி நேரம் பிரிய வேண்டியதிருந்தது.. அவ்வளவு நேரம் குழந்தையை பிரிய அவளால் நிச்சயமாக முடியாது..

என்ன செய்யலாம்? என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் அவ்வியக்தனிடம் இருந்து அழைப்பு வந்தது..

வேண்டா வெறுப்பாக தான் போனை எடுத்தாள்..

பிரபலமான காபி கஃபேயின் பேரை சொல்லி அங்கு வர சொன்னான்.

தன் முன்னால் இருந்த அக்ரிமெண்ட் பேப்பரை இதழ் கடித்துப் பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவின் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள்..

கண்களை சுருக்கி எதிரில் அமர்ந்திருப்பவனை அழுத்தமாக பார்த்தாள்..

“சோ உனக்கு அக்ரீமெண்ட் பொண்டாட்டியா நான் நடிக்க வரணும்?..”

“யா அப்கோர்ஸ்.. 10 டேய்ஸ்.. 1 டே க்கு 1 க்ரோ” என நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பீட்டர் விட,

“பார்றா.. துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது..” என மனதுக்குள் கலாய்த்தவளுக்கு, அவளின் மகன் ஞாபகம் தான் வந்தது..

பிறந்து 6 மாதம் ஆகப் போகிறது.. இன்னும் ஒரு வாரத்தில் அவள் வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயம்..

வேலைக்கு சென்றால் மகனைப் பிரிய வேண்டுமே என யோசித்தவளுக்கு, இவனின் 10 கோடி ஆஃபர் பம்பர் ப்ரைஸாக தான் பட்டது..

“சரி நான் வர்றேன்..”

“ஓகே. பட் சில கண்டிசன் இருக்கு..”

“என்ன கண்டிசன்?..” என அலட்சியமாக கேட்டாள்..

“பர்ஸ்ட்.. நீ எனக்கு பொண்டாட்டியா நடிக்க மட்டுந்தான்.. நிஜ பொண்டாட்டி கிடையாது.. என்னோட ரிலேஷன் மத்தியில் நீ எவ்வளவு நடிச்சாலும், ரூம்க்குள்ள எப்பவும் பத்தடி என்னை விட்டு தள்ளியே இருக்கணும்.. நான் வேற கொஞ்சம் அழகா இருக்கேனா” என்றவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தாள்..

அவளின் பார்வையில், இவனும் தன்னை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான்..

‘எதுக்கு இவ இப்படி பார்க்கிறா?.. ஜிப் ஏதும் ஓப்பன் ல இருக்கா என்ன?..” என தன்னை தானே ஆராய்ந்தவன், இப்பொழுது எதிரில் இருப்பவளை பார்த்தான்..

அப்பொழுதும் அவனை விடாது குறுகுறுவென பார்த்தாள்..

“ஏன்டி அப்படிப் பார்க்கிற?..” என்றவன் நெளிய ஆரம்பித்தான்..

“இல்லை உலகத்துல பொண்ணுங்களே இல்லாத மாதிரி என்கிட்ட வந்து இப்படி பேரம் பேசிட்டு இருக்கீயே?.. அதான் ஏன்னு பார்த்தேன்..” என்றவளின் குரலில் அவ்வளவு நக்கல்..

“என்ன பண்ணித் தொலைக்கிறது எல்லாம் என் தலையெழுத்து.. என் க்ரேனி.. உன்னையும், பையனையும் அன்னைக்கு வீடியோ கால்ல பார்த்துத் தொலைஞ்சிட்டாங்க.. இப்போ உன்னைத் தவிர்த்து வேற எவளையாவது கொண்டு போய் நிப்பாட்டுன்னா?..”

“என்ன என்னைக் கொன்னுடுவாங்களா?..”

“உன்னைக் கொல்ல மாட்டாங்க. என்னைக் கொன்னுடுவாங்க.. என்னைப் பத்தி தோண்டித் துருவ ஆரம்பிச்சிருவாங்க.. நான் வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்க நினைச்சது மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான்..” என சலிப்பாக கூறினான்..

“ஏன் சொத்துல ஒரு பைசா தரமாட்டாங்களா?..” என ஏளனமாக கேட்டாள்.

பணக்கார்களின் பிரச்சினையே இந்த சொத்துக்கள் தானே..

“மம்ம்.. மொத வேலையா என்னை ஜெயிலுக்குள்ள பிடிச்சிப் போட்டுருவாங்க..”

“இன்ட்ரெஸ்ட்டிங்.. இதுக்காகவே உங்க க்ரேனியை பார்க்கணும் போல இருக்கே.. நான் வர்றேன்.. ஆனா ஒன் கண்டிசன்” என்றவளை விழி விரித்துப் பார்த்தான்..

“என்ன சொல்லுற?. என் கூட வர்றீயா?.. என்றவன் இவ்வளவு ஈசியாக சம்மதிப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை..

“கண்டிப்பா வர்றேன்.. உன்னை உன் பாட்டியை வச்சே வச்சி செய்யுறேன் டா..” என கண்கள் மின்ன கூறினாள்..

“வாடி என் வீட்டுக்கு, என் பையனை என்னோட வச்சிக்கிட்டு, உன்னை மட்டும் வீட்டை விட்டு துரத்துறேனா இல்லையான்னு பாரு..” என மனதுக்குள் கருவிக் கொண்டே, வெளியே சிரித்தாற் போன்று முகத்தை வைத்திருந்தான்..
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 8

“ஏய்ய்ய.. அடிக்காதடி.. அடிக்காதடி..” என்ற கூக்குரலை தாண்டி, கையில் வைத்திருந்த புக்கை எல்லாம் பிருந்தாவின் மேல் வீசிக் கொண்டிருந்தாள் நிரோஷா..

“என்ன வேலை பார்த்துட்டு வந்திருக்க நீ?..” என வீட்டின் மூலையில் துடப்பத்தைக் கையில் எடுத்தவளைக் கண்டு அரண்டு விட்டாள் பிருந்தா..

அவ்வியக்தனை சந்தித்து வந்ததைப் பற்றி நிரோஷாவிடம் சொல்லி முடித்ததும் தான் தாமதம், அந்த நொடியில் இருந்து பிருந்தா அடி தான் வாங்கிக் கொண்டிருக்கிறாள்..

“அம்மாடி.. சத்தம் போடாத ம்மா, குழந்தை அழுகுது” என்ற குணவதியின் குரலிலும், குழந்தை அழும் சத்தத்தில் தான் சற்று நிதானமானாள் நிரோஷா..

“ஏன்டி இப்படி ஒரு டீலிங்க்கு ஒத்துக்கிட்டு வந்திருக்க?.. உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?..” என கேட்டவளின் கையிலிருந்த துடப்பத்தை லாவகமாக கைப்பற்றியவள், வேகமாக தூக்கி எறிந்தாள்..

“ப்ச்ச்ச.. புரிஞ்சிக்கோ நிரோ.. அவன் கொடுத்த ஆஃபர் அப்படி டி?..”

“அப்படியா?.. அவன் தான் 3 கோடி ஆஃபரும் கொடுத்தான்.” என்றவளைக் கண்டு எச்சில் விழுங்கினாள் பிருந்தா..

என்னவென்று சொல்வாள்? அவளுக்கு தேவையான பொருள் ஒன்று அவனிடம் இருக்கிறது என்று அதை எடுக்கத்தான் அவனின் கோட்டைக்குள் நுழைகிறாள் என்று சொல்ல முடியாமல் தவித்தாள்..

“ப்ளீஸ் நிரோ, நான் பினான்சியலா ரொம்ப டவுணா இருக்கேன்.. எனக்கு அவன் கொடுக்கிற 10 கோடி தேவைப்படுது.. குழந்தையை படிக்க வைக்க, என்னோட ப்யூச்சர்க்கு” என்றவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்த நிரோ,

“பச்சையா பொய் சொல்றேன்னு தெரியுது பிருந்தா.. என் ப்ரண்ட் பணப்பேய் கிடையாது.. நீ அவன் கிட்ட வேலைக்குப் போறேன்னு சொல்லியிருந்தா கூட கண்டிப்பா நான் ஷாக்காகியிருக்க மாட்டேன்.. ஆனா பொண்டாட்டியா நடிக்கப் போறேன்னு சொன்ன பார்த்தீயா?. அது தான் என்னால ஏத்துக்கவே முடியலை..

இதுக்கு மேல ஒன்னும் சொல்லுறதுக்கில்லை பிருந்தா.. ஆனா என் ப்ரெண்ட் அவன்கிட்ட தனியா மாட்டிக்கப் போறதை நினைச்சா, என்னால தாங்கிக்க முடியலை.. பயமா இருக்குடி.. உனக்கு துணையா தான் என்னால வர முடியுமே தவிர.. உன்னோட வாழ்க்கையோட முடிவுகளை நீ தான் எடுக்கணும்..

சரி நீ எப்போ கிளம்புற?..” என மனதில் இருப்பதை அப்படியே சொன்னாள் நிரோ..

அதுவரை வாடிப் போயிருந்த பிருந்தாவின் அகத்தோடு சேர்ந்து முகமும் மலர்ந்து சிரித்தது..

“கிளம்புற இல்லைடி.. கிளம்புறோம்…” என்றவளை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தாள் நிரோஷா…

“கிளம்புறோமோ?..” என கேட்டு முடிப்பதற்குள்,

“ஆமா, நான் மட்டும் அந்த அவ்வியக்தன் பேலஸ்க்கு போகப் போறதில்லை.. நீ, நான், அம்மா அப்புறம் நம்மளோட செல்லக்குட்டி ப்ரத்யூவும் வரப்போறான்..” என்றவளை அதிர்ந்து பார்த்தனர் நிரோவும், குணவதியும்..

“என்னம்மா சொல்லுற?. நான் வரணுமா?..” என அதிர்ந்துக் கேட்டார் குணவதி..

“ஆமா நீங்க வராம எப்படி?.. குழந்தையை பத்து நாள்ல பிரிஞ்சு நீங்க இருந்திடுவீங்களா? கஷ்டப்பட மாட்டீங்க?.. அதுனால நீங்களும் எங்கக்கூட வர்றீங்க… நிரோ பத்து நாள் எனக்காக வாயேன்.” என நிரோவின் கையைப் பிடித்து கெஞ்சோ, கெஞ்சு என கெஞ்சிக் கொண்டிருந்தாள் பிருந்தா..

நிரோவிற்கும் அவளை தனியாக அனுப்ப மனமில்லை. “சரி நாங்க வர்றோம்..” என்று தன்னறைக்கு சென்று விட்டாள்..

குணவதிக்கு இத்தனை நாள் இல்லாத ஒரு வித அழுத்தம் இருந்துக் கொண்டேயிருந்தது..

அதுவும் ப்ரத்யூமனை பார்க்கும் பொழுதெல்லாம், அவரையும் அறியாமல் ஒரு வித ஏக்கம் அவருக்குள் படர்ந்தது..

கண்களில் ஒரு வித கலக்கத்துடன் தனக்கென கொடுத்திருக்கும் சிறு அறையின் உள்ளே சென்றார்..

அதில் சிறு பெட்டி இருந்தது.. அதை திறக்கவும், அதனுள்ளே ஒரு பழைய போட்டோ இருந்தது.. 25 வருடத்திற்கு முன்பாக எடுத்த போட்டோ அது.. ப்ரேம் பண்ணியிருந்ததால், எந்த வித சேதாரமின்றி இருந்தது.

அதை எடுத்துப் பார்த்தவரின் விழிகள் கசிந்தது அழுகையில்.. அதில் அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தான்..

“கணவர் லக்ஷ்மணன் அன்பான கணவர் தான், குணவதியை கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டவர் தான். ஆனால் எல்லாமே ஒரு குழந்தை பிறக்கும் வரை தான்..

குழந்தை பிறந்த பின்பு குணவதியின் முழு நேரமும் குழந்தைக்கென்றே ஒதுக்க வேண்டியதாகிச்சி.. கணவனுக்கென்று ஒதுக்கும் நேரமுமு், அன்பும், அரவணைப்பும் கொடுக்க முடியாத சூழ்நிலை அவருக்கு..

9 மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், பிறந்த குழந்தையை கண்ணுக்குள்ளேயே வைத்துப் பார்த்துக் கொண்டார்..

எங்கே அவன் வீல் என்று அழுதாள் கூட பாத்ரூமில் இருந்து ஓடி வந்து விடுவார்.. அவ்வளவு பாசம் அவன் மேல்..

அதுவரை அவரின் மேல் அன்பை மட்டும் கொட்டிக் கொண்டிருந்த லக்ஷ்மணனின் பார்வை, தனக்கு கீழ் வேலை செய்யும் எலிசபெத்தின் மீது திரும்பியது..

கைம்பெண்ணாக இருந்த எலிசபெத்திற்கு அப்பொழுது லக்ஷ்மணன் தேவையாக இருந்தது..

முதலில் சாதாரணமாக பேசிய அவர்களின் பேச்சுக்கள், நாளடைவில் அந்தரங்க பேச்சில் வந்து முடிந்தது..

இறுதியாக லக்ஷ்மணன் தனக்கு மனைவி என்று ஒருத்தி இருப்பதைக் கூட மறந்து விட்டார்..

அவர்களின் ஊடலும், கூடலும் ஆபிசிலேயே நடக்கும் அளவிற்கு வந்து நின்றது..

அன்றும் இரவு பத்து மணியளவில் மகனுக்கு உடல் சரியில்லை என்பதால் ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றார் குணவதி..

செல்லும் வழியில் தான் ஆபீசில் இன்னும் விளக்கு எறிந்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார்..

“என்ன செக்யூரிட்டி இன்னும் ஆபீஸ்ல யாராவது இருக்காங்களா?.” என தன் கைகளில் கட்டியிருந்த வாட்சை திரும்பிப் பார்க்க இரவு 10 மணி என காட்டியது..

“நைட் 10 மணியாகுது, அப்படி என்ன வேலை?..” என தன் கணவனை கடிந்துக் கொண்டே படிக்கட்டில் ஏறிச் சென்றார்..

மூன்றாம் தளத்தில் தான் லக்ஷ்மணனின் அறை என்பதால், மூன்று மாடிகளை கடந்துச் சென்றவர், லக்ஷ்மண் அறையை திறக்க.. அங்கு யாருமே இல்லை..

யாருமே இல்லாத ஆபீஸ்க்கு இப்படி அலட்சியமாக, லைட்டை போட்டு வைத்திருக்கிறார்கள். அவர்க்கிட்ட இதைப் பத்தி சொல்லணும் என மனதுக்குள் சொல்லிக் கொண்டே நடந்துச் சென்றவரின் காதுகளில் அச்சரம் பிசகாமல் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்..

தன் காதுகளில் விழுந்த வார்த்தையை நம்ப முடியாமல் திகைத்து, அங்கேயே வேரூன்றி நின்றார் குணவதி..

“தான் கேட்டது சரிதானா?..” என மனதோடு சிறு பயம் கவ்வ, மெல்ல அங்கிருந்த சுவற்றின் அருகில் காதினை வைத்துப் பார்த்தார்..

இச்சை வார்த்தைகள் தான் அடுத்து அவரின் காதில் வந்து விழுந்தது.. ஆணும், பெண்ணும் இணையும் நேரம், வரும் அந்தரங்க வார்த்தைகளில் விதிர்விதிர்த்துப் போனார் குணவதி..

யாராக இருக்கும்? அதுவும் தன் கணவன் அறையில்? என நினைத்தவர், அந்நொடிக் கூட தன் கணவனை சந்தேகப்பட முடியவில்லை..

அப்பொழுது தான் ஒன்று கவனித்தார்.. அந்தச் சுவரினை.. சுவரின் மறுபுறம் சத்தம் வருகிறது.. ஆனால் அங்கு சுவர்மட்டுமே இருந்தது.. அதற்கு வலது புறம், ஒரு கபோர்ட் தான் இருந்தது..

கணத்த மனதுடன், அந்த கபோர்டை லேசாக நகர்த்தினார்.. அறைக் கதவை திறப்பது போன்று மிகவும் சாதாரணமாக திறந்துக் கொண்டது அந்தக் கதவு..

திறந்த கதவினுள் நுழைந்தவரின் கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றது..

எந்தக் கணவனுக்கும், இப்படியொரு நிலைமை வரவேக் கூடாது.. அப்படி ஒரு கோலத்தில் தன் கணவனைக் கண்டார் குணவதி..

அந்த எலிசபெத்துடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மணை பார்த்த குணவதியின் அப்படியே உடைந்து விட்டார்..

நெஞ்சில் சுருக்கென்ற வலி.. எங்கே தன் இதயம் இப்பொழுதே தன் நிறுத்தத்தை நிறுத்தி விடுமோ? என ஒரு கணம் அஞ்சித்தான் போனார்..

கதவு திறக்கும் சத்தத்தில் வேகமாக பிரிந்தனர்.. லக்ஷ்மணனும், எலிசபெத்தும்..

சத்தியமாக அங்கே குணவதியை எதிர்பார்க்கவில்லை லக்ஷ்மணன்..

“குணா?..” என்றவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார் குணவதி..

தன் கணவனின் நம்பிக்கைத் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

“மேடம்…” என எலிசபெத்தின் கன்னத்தில் தவறாமல் வந்து விழுந்தது அந்த அடி..

இருவருமே கன்னத்தைப் பொத்திக் கொண்டு நிற்க,

“உன்னைப் போய் நம்பி ஒரு பிள்ளையை பெத்திருக்கேன் பாரு..” என்றவர், லக்ஷ்மணன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டார்..

அருகில் நின்றிருந்த எலிசபெத்தை தீப்பார்வை பார்க்க, அவளோ, அறைகுறை ஆடையை, வேக வேகமாக மாற்றிக் கொண்டு ஓடி விட்டாள்..

“குணா..” என குணவதியின் கையைப் பிடிக்கச் செல்ல, சட்டென்று அவரின் கையை உதறித் தள்ளினார் குணவதி..

வேகமாக ஆபீசில் இருந்து வீட்டிற்கு வரும் வழியெங்கும் தான் அழுதுக் கொண்டே தான் வந்தார்..

அவரால் இப்படியொரு துரோகத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

நேராக வந்து நின்றது மாமியார் முன்பாகத் தான்..

தான் பார்த்த காட்சியை அப்படியே சொன்னவர், “எனக்கு உங்க பையன் வேண்டாம் அத்தை” என்பதை நிமிர்வாக சொன்னார்..

“என் பையனை விட்டா உனக்கு யாரு இருக்கா?.. அனாதை தானே நீ?..” என்ற வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தார் குணவதி..

தன் அத்தையிடம் இருந்து சத்தியமாக இப்படியொரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை..

ரணமாக குத்திக் கிழித்தது அந்த வார்த்தை..

எப்பொழுதும் மகனை விட தன்னை ஒரு படி மேலே வைத்து அன்பு வைத்த தன் அத்தையின் வார்த்தைகளில் துடித்துப் போய் விட்டார் குணவதி..

“அத்தை..” என்றவருக்கு நா தழுதழுத்தது..

அன்னை போன்று அன்பு காட்டியவரிடத்தில் அனாதை என்ற வார்த்தை அவர் எதிர்பார்க்காத ஒன்று தான்..

ஏனோ அங்கு இனி ஒரு நொடி நின்றாலும், தனக்கு மரியாதை கிடைக்காது என்பதை உணர்ந்த குணவதி, தோளில் போட்டிருந்த தன் மகன் கண்ணனுடன் திருப்பி நடக்க ஆரம்பித்தார்..

அவர் நடக்க ஆரம்பிப்பதற்குள், அவரை வழிமறித்தாற் போன்று வந்து நின்றார் அவரின் மாமியார்..

அவரைப் பார்த்ததுமே ஒரு நிமிடம் திடுக்கிட்டுத்தான் போனார் குணவதி..

“என்னஹ் அத்தை?..” என கேட்கும் பொழுதே அவரின் உதடுகள் பயத்தில் நடுங்கின..

அவர் தோளில் கிடந்த குழந்தையை வாரியெடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டார் அவரின் மாமியார்..

“அத்தைஹ்..” என விம்மி வெடித்து வந்த அழுகையில் கலங்கிப் போய் நின்றார் குணவதி..

“உனக்கு இந்த வீட்டை விட்டுப் போறதுக்கான முழுச்சுதந்திரத்தையும் நான் கொடுத்துருக்கேன்.. ஆனா கண்ணா, எங்க சொத்து. இந்த வீட்டோட ஒத்தை வாரிசு.. அவனை அழைச்சிட்டுப் போக உனக்கு எந்த உரிமையும் இல்லை..” என்றவர், வேகமாக கண்ணாவை தோளில் போட்டுக் கொண்டு தன்னறைக்குச் சென்று கதவை சாத்தி விட்டார்..

அதன் பின் எவ்வளவோ முயன்றும், குணவதியால் தன் மகனை பார்க்க முடியில்லை..

லக்ஷ்மணை அட்ஜஸ் செய்து அங்கேயே வாழவும் அவரால் முடியவில்லை.. அதன் முடிவு, வீட்டை விட்டு வெளியேறினார்..

தன் மகன் என்றாவது ஒரு நாள் தன் நிலை புரிந்து தன்னைப் பார்க்க வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார்.. காத்திருக்கிறார்.. இனிமேலும் காத்திருப்பார்..

அவரின் நம்பிக்கையின் நாயகமோ, ஒரு பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்..

 

Madhusha

Well-known member
Wonderland writer
330546020_1245390892713150_8975737669419460561_n.jpg

அத்தியாயம் 9

ஆம், அவரின் நம்பிக்கையின் நாயகமோ ஒரு பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்..

சல்லாபித்துத் தான் கொண்டிருந்தான் ஆனால் நேரில் அல்ல கனவில்..

நன்றாக ஆழந்த நித்திரையில் இருந்து அவ்வியக்தனின் காதுமடலில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு ஏற்பட, மெல்ல விழிகளை திறந்துப் பார்த்தான் அவ்வி..

அவனின் எதிரில் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள் பிருந்தா..

“பிருந்தாஆஆ..” என அதிர்ச்சியில் வேகமாக எழுந்தவனின், இதழ்களில் ஒற்றை விரலை வைத்து “ஷ்ஷ்ஷ்.. எழுந்து வா..” என கை நீட்டி அழைக்க.. அவளின் பின்னால் செல்ல ஆரம்பித்தான் அவ்வி..

தன்னை விட்டு முன்னே செல்பவளின் கையை அழுத்தமாக பற்றியிருந்தான் அவ்வி.

“நீ இங்கே என்னடி பண்ற?..” என கேள்வியாய் அவளை பார்த்தான்..

“உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்..” என்றவளின் கைகளோ, அவனின் கழுத்தை மாலை போல் கட்டிக் கொண்டது..

“என்னையா?..” என்றவனின் கழுத்தோடு உரசிச் சென்றது பிருந்தாவின் இதழ்கள்..

அவளின் தீண்டல்கள், இவனுக்குள் ஓராயிரம் உணர்வுகள் கொட்டி ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது..

அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது..

“பிருந்தா..”என மோகனமாய் முணுமுணுத்தவனுக்க, அவளின் செவ்விதழ்களோ இவனை வா என்று அழைக்க.. லபக்கென்று கவ்விக் கொண்டான் அவளின் பவள இதழ்களை..

“அய்யோஓஓஓஓ.. அம்மாஆஆஆஆ..” என அலறியபடி எழுந்தமர்ந்தான் மிதுன்..

அவனின் அலறல் சத்தத்தில் தான் நினைவுக்கே வந்தான் அவ்வியக்தன்.. இதுவரை கண்டது கனவு என்று..

“டேய்ய்ய்.. என்னாச்சிடா?..” என எழுந்தமர்ந்த அவ்வியின் கழுத்தை அப்படியே பிடித்து நெறித்திருந்தான் மிதுன்..

தன்னைப் பிடித்து நெறித்தவனை வேகமாக தன்னை விட்டு விலக்கி நிறுத்தினான் அவ்வி..

“டேய்ய்ய். நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுடா?..”

“நீ சொல்லுறதை நான் என்டா கேட்கணும்?.. மனுசனடா நீ?.. என் வாயை இப்படி கடிச்சி வச்சிட்டீயே?..” என மிதுன் தன் கீழுதட்டை பிதுக்க, அதில் சிறிது ரத்தம் வந்துக் கொண்டிருந்தது..

“என்னை ஏன்டா இப்படி டிராகுல்லா மாதிரி கடிச்சி வச்சிருக்க?..” என்றவனை திருதிருவென பார்த்து விழித்தான் அவ்வி..

என்னவென்று சொல்வான், பிருந்தா என நினைத்து இவனின் உதட்டை லபக்கென்று கவ்விக் கொண்டதை..

‘போயும்.. போயும் உன் உதட்டையா டா கவ்வணும். பரதேசிப் பய பல்லு விளக்குனீயா?..”

“ஆமா மிட்நைட்ல, பல்லு விளக்கிட்டு வந்து படுத்து, நீ எப்போ கிஸ் பண்ணுவேன்னு காத்திருக்க, நான் உன் பொண்டாட்டி பாரு.. போடா நாயே..” என அவ்வி இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டான் மிதுன்..

“டேய்ய்ய் ஏன்டா நாய் மாதிரி உதைக்கிற?..”

“நீ ஏன்டா என் உதட்டை கடிச்சு இழுத்த?.. ஸ்ஸ்ஸ்.. வலிக்குது டா..” என தன் உதட்டை பிதுக்கி பார்த்த மிதுனுக்கு வலியில் முகம் சுருங்கியது..

“சாரி மச்சான்.. நான் அவன்னு நினைச்சு, உன் மேல பாஞ்சிட்டேன்..” என்றவன் மேல்சட்டையில்லாத மிதுனை ஒரு பார்வை பார்க்க,,

“விட்டா கண்ணாலேயே கற்பழிச்சிடுவான் போல.. இதுக்குத் தான் பிரம்மச்சாரி பக்கத்துல படுக்கக்கூடாதுன்னு சொல்லுறது போல” என வேகமாக தன் டீசர்ட்டை எடுத்துப் போட்டு விட்டு அறையை விட்டு ஓடினான் மிதுன்..

அவன் ஓடிச் செல்வதை பார்த்த அவ்வியக்தனுக்கு நீண்ட பெருமூச்சு தான் எழுந்தது.

“ப்ச்ச்ச.. என்னை நிதம், நிதம் வந்து சாவடிக்குறேடி.. என் கையில மாட்டுன அப்போ உன்னை வச்சிக்கிறேன்..” என குப்புற கவிழ்ந்து படுத்தவனுக்கு உறக்கம் வருவேனா என அடம் பிடித்தது..

ஆனால் அங்கு குழந்தையை அணைத்துக் கொண்டு நல்ல நித்திரையில் இருந்தாள் பிருந்தா..

அதோ, இதோ என்று பிருந்தா அவ்வியக்தன் வீட்டிற்கு வரும் நாள் வந்து சேர்ந்தது..

அவள் எப்படியிருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டுமென்பதை ஏற்கனவே போனில் அழைத்து சொல்லி விட்டான் அவ்வியக்தன்..

அவர்களை பிக்கப் பண்ணுவதற்காக வந்தது என்னவோ மிதுன் தான்..

வேண்டா வெறுப்பாக நின்ற காண்டாமிருகத்தை பார்த்தை உதட்டை சுழித்தாள் நிரோ..

“இவன் ஏன்டி வந்திருக்கான்?..” என பிருந்தாவின் காதில் கிசுகிசுத்தாள் நிரோ..

“அவ்வி தான்டி அனுப்பி வச்சிருக்கார்.. அவருக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்காம். முடிச்சிட்டு அவர் அவுங்க வீட்டுக்கு வந்திருவாராம்.. நாம சேர்ற நேரமும், அவர் வந்து சேர்ற நேரமும் கரெக்டா இருக்கும்னு சொன்னார்.. பார்ப்போம்..” என்றவள் குழந்தைக்கு தேவையான அனைத்து பொருளையும் ஒரு முறை இருக்கிறதா? என பார்த்துக் கொண்டே திரும்பிட, அங்கு குணவதி இருப்பதற்கான அடையாளமே இல்லை..

“அம்மா எங்கேடி?..” என பிருந்தா, வேகமாக குணவதியின் அறைக்குள் செல்ல, அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த குணவதி வெறித்து எங்கேயோ பார்த்திருந்தார்..

“என்னாச்சி ம்மா?” என அவரின் அருகில் சென்று அமர்ந்தாள் பிருந்தா..

“பத்து நாள் தானே.. நான் இங்கேயே வீட்டை பார்த்துக்கிறேன்.. நீங்க போய்ட்டு வந்திடுறீங்களா?..” என குணவதியின் கைகளைப் பிடித்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டவள்,

“அம்மா, உங்களுக்கு நல்லாவே தெரியும்.. குழந்தையை தனியா சமாளிக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது.. குளிக்க வைக்கிறதுல இருந்து, குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்யுறது நீங்க தான்.. இப்போ நீங்களே வரலைன்னா..” என்றவளின் முகம் அப்படியே வாடி விட்டது.

அவளின் வாடிய முகத்தில் என்ன கண்டாரோ, “சரி டா நான் வர்றேன். நீ இப்படி முகத்தை தொங்கப் போட்டுக்காதே..” என்றவரின் கன்னத்தில் இச் என்று முத்தமிட்டு வெளியேற.. ஏனோ அவரையும் அறியாமல் அவரின் மகன் கண்ணன் தான் ஞாபகத்திற்கு வந்தான்..

“கண்ணாஆ..” என வாய் விட்டே அழைத்தார்..

ஆனால் அவரின் கண்ணனோ மீட்டிங்கில் பிசியாக இருந்தான்..

பிருந்தா, ப்ரத்யூமன், நிரோ, குணவதி என நால்வரையும் அழைத்துக் கொண்டு மிதுன் ஹைதரபாத்திற்கு தான்.

கார் உள்ளே சென்ற பின்பும் பல நிமிடங்களை கடந்த பின்பு தான் வீட்டை அடைந்திருந்தனர் அனைவரும்..

அவர்கள் உள்ளே வரும் நேரம், இன்னொரு கார் உரசிக் கொண்டு வந்து நின்றது..

மற்றவர்கள் திகைத்துப் பார்க்க, அந்தக் காரில் இருந்து இறங்கினான் அவ்வியக்தன்..

“வந்து லேட்டாகிடுச்சி” என நார்மலாக கேட்டுக் கொண்டே வந்தவனின் பார்வை, குழந்தையை கையில் ஏந்தியபடி நின்றிருந்த பிருந்தாவை பார்த்ததும் அப்படியே நின்றது..

ஏனோ இந்த நொடி, உலகின் அழகான பெண் யார் என்றால், அவன் கைகளை தானாக பிருந்தாவை நோக்கி மட்டுமே நீட்டும்..

அப்படியொரு பேரழகியாக மிளிர்ந்தாள் பிருந்தா..

அவன் சொன்னது போல, பார்த்தீபன் கட்டிய தாலியை கழற்றி எறிந்தவள், இவர்களின் முறைப்படியான கருப்பு பாசிமணியால் ஆன தாலியை தான் அணிந்திருந்தாள்..

அவளைப் பொறுத்தவரை அது ஒரு அணிகலன் என்பதால், ஈசியாக அவளே அணிந்து விட்டாள்

“அழகா இருக்க?..” என தன்னை மறந்து சொன்னவனை, விழி உயர்த்தி ஒரு பார்வை பார்த்தவள், “நான் அழகா இருக்கேன்னு எனக்கே தெரியும்.. ரொம்ப வழியாம உள்ளே போ..” என்றவளின் கைகளில் இருந்த குழந்தையை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்..

அவன் கண்களில் அவ்வளவு ஏக்கம்.. தன் குழந்தை, தன் உதிரம் என ஆசையோடு குழந்தையை வருடியபடி, பிருந்தாவை ஏறிட்டுப் பார்த்தான்..

அவள் கண்களில் அப்படியொரு அனல்..

அவள் போட்ட கண்டிசனே இது தானே.. அன்று ஹோட்டலில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவள் சொன்ன கண்டிசன் இது தான்..

குழந்தையின் மீது எந்த வித உரிமையும் அவனுக்கு இல்லையென்ற நிபந்தனை தான் அது..

அவள் பொண்டாட்டியாக நடிக்க வருகிறாள் அவ்வளவே, அதை சாக்காக வைத்துக் கொண்டு, குழந்தையின் மேல் உரிமைக் கொண்டாடினால், அடுத்த நொடியே உன் பணமும், நீயும் வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டுச் சென்று விடுவேன் என நிர்பந்தித்துத் தான் இந்த டீலிங்கிற்கே சம்மதித்திருந்தாள் பிருந்தா..

அவளின் நிபந்தனை அவனுக்கு அப்படியொரு வேதனையைக் கொடுத்திருந்தது.. ஆனாலும் எதுவும் பேசாமல், அமைதியாகத் தான் இருந்தான்..

தன்னிடம் குழந்தையைக் காட்டாமல், நெஞ்சோடு அணைத்தபடி நின்றவளைப் பார்த்தவனின் முகமோ அப்படியே வாடி விட்டது..

“வாங்க உள்ளே போகலாம்..” என பிருந்தாவோடு சேர்ந்தாற் போன்று உள்ளே நுழைந்தான் அவ்வி..

“நில்லுடா கண்ணா..” என்ற குரலில், அதுவரை இருந்த கலக்கம் மறந்து, சிறு புன்னகை உதட்டில் வந்து ஒட்டிக் கொண்டது..

“இது தான் என் பாட்டி திரிபுர சுந்தரி..” என பிருந்தாவின் அருகில் தலையை சரித்து மெல்ல கூறினான்..

“ம்ம்..” என ஒரு வார்த்தை தான் கூறினாள்..

“நில்லு கண்ணா.. ஆர்த்தி எடுத்ததுக்கப்புறம் உள்ளே போகலாம்.. குழந்தையோட முதல் முறையா உள்ளே வர்ற.. அதுவும் நம்ம வாரிசு..” என்றதும், பட்டென்று திரும்பி அவ்வியக்தனை முறைத்தாள் பிருந்தா..

“பாட்டி நீங்க ஆர்த்தி எடுங்க..” என்றவன், பிருந்தாவின் புறம் திரும்பினால் தானே..

மூவரையும் சேர்த்தாற் போன்று ஆர்த்தி எடுத்தவர், அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

உள்ளே நுழைந்த பிருந்தாவிற்கு அங்கு யாருமே இல்லாதது பேரதிர்ச்சி..

அவ்வளவு பெரிய மாளிகையில் இரண்டே இரண்டு பேர் தான் இருந்தனர்..

ஒன்று அவ்வியின் பாட்டி திரிபுர சுந்தரி.. மற்றொன்று, அவரின் வலது கையான மல்லிகா..

உள்ளே நுழைந்த பிருந்தா அப்பொழுது தான் கவனித்தாள், அங்கு குணவதி இல்லாததை..

தன்னருகில் நின்றிருந்த நிரோவின் புறம் திரும்பியவள், “நிரோ அம்மா எங்கே?..” என்றதும், அவ்வியக்தன் கண்களை சுருக்கிப் பார்த்தான்..

பிருந்தாவிற்கு யாரும் இல்லையென்பது தான் அவனுக்குத் தெரியும்..

வேறு எந்த அம்மாவை அழைக்கிறாள்?. என கண்களில் ஒரு வித தேடலுடன் நின்றுக் கொண்டிருந்தான்..

“இரு நான் அழைச்சிட்டு வர்றேன்..” என பிருந்தா, நிரோவின் கையில் குழந்தையைக் கொடுத்து விட்டு, வேகமாக வெளியே சென்றாள்..

“ஏய்ய்ய.. உங்க ரெண்டு பேருக்கும் தான் அம்மா கிடையாதே? அப்புறம் எந்த அம்மாவை தேடிப் போறா அவ?..” என மிதுன் நிரோவின் காதில் கிசுகிசுக்க.

“அவ உள்ளே வரும் போது அவக்கிட்டேயே கேட்டுக்கோ..” என முகத்தை சுழித்துக் கொண்டாள்..

“ரொம்பத் தான் பிகு பண்ணுறா?.. பெரிய வக்கீல்ங்கிற நினைப்பு?..” என மனதுக்குள் கருவிக் கொண்டே, திரும்பியவனின் விழிகள் பெரிதாக அதிர்ந்தது..

“அவ்வி.. அவ்வி..” என அவ்வியக்தனின் தோளை திருப்பிட, அவன் திருப்பிய திசையில் பார்த்த அவ்வியக்தனுக்கு தூக்கிவாரிப் போட்டது..

“அம்மாஆஆஆ..” என இதழ்கள் முணுமுணுத்தது..

அவ்வியக்தனின் அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்தார் திரிபுர சுந்தரி..

வாசலில் பிருந்தாவோடு சேர்ந்து உள்ளே நுழைந்த குணவதியைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது திரிபுர சுந்தரிக்கு.

“குணா..” என்றவர், அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டார்..

பிருந்தாவோடு உள்ளே நுழைந்த குணவதிக்கும் அதே அதிர்ச்சி தான்..

அதுவும் கண்களோ அவ்வியக்தனை விட்டு அகல மறுத்தது.. தன் கணவனின் மறுசாயலில் நின்றிருந்தவனைப் பார்க்க, பாரக்க பழைய நினைவுகள் அவரை அலைக்கழிக்க ஆரம்பித்தது..

 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 10

நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்த திரிபுரசுந்தரியை தாங்கிக் கொண்டது என்னவோ மிதுன் தான்..

“பாட்டி..” என அணைத்தவாறே, அங்கிருந்த சோபாவில் அமர வைத்து தண்ணீரும் கொடுத்தான்..

குணவதிக்கோ தன் மகனை அடையாளம் கண்டுகொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை..

அவன் தான் தகப்பனின் சாயலை உரித்து வைத்திருந்தானே..

“தன் மகனா?..” என மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் நின்றுக் கொண்டிருக்கும் வேளையில் தான் திரிபுரசுந்தரி மயங்கி கீழே விழுந்தது..

“பாட்டி..” என வேகமாக திரிபுரசுந்தரியின் அருகில் ஓடிச்சென்றான் அவ்வி..

“என்னாச்சி பாட்டி?..” என்றவனின் கேள்வியெல்லாம், அவரின் காதுகளிலேயே விழவில்லை..

எதிரில் நின்றிருந்த குணவதியின் மேல் தான் அவரின் பார்வை அழுத்தமாக பதிந்தது..

“குணா..” என காய்ந்த உதடுகளை ஈரமாக்கிக் கொண்டே, அவரை நோக்கி ஒற்றை கை நீட்டினார் திரிபுரசுந்தரி..

“குணா” என்ற வார்த்தையில் தான் விலுக்கென்று நிமிர்ந்து எதிரில் இருப்பவரை பார்த்தான் அவ்வி..

அவன் கண்களில் அவ்வளவு கோபம்..

“பாட்டி இவுங்க…?” என விடை தெரிந்த கேள்விக்கும், வினா எழுப்பினான்..

“உன் அம்மா டா.” என்றதும் தான் தாமதம், வேகமாக குணவதியின் அருகில் வந்து நின்றான் அவ்வி..

தன்னருகில் வந்து நின்ற மகனை ஏற இறங்க பார்த்தவரின் கண்கள் பாசத்தில் பனித்தது..

அதற்கு நேர்மாறாக அவ்வியக்தனின் கண்களோ கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது..

“கண்ணா..” என தன் மகனை வருடப் போனவரை விட்டு, இரண்டெட்டு பின் வைத்தவன், “கார் டிரைவரோட ஓடிப்போனவளுக்கு என் வீட்டுல இடமில்லை..” என சொல்லி முடித்த அடுத்த கணமே விக்கித்து நின்றிருந்தார் குணவதி..

“கார் டிரைவருடன் ஓடிப்போனவளா?.. எவ்வளவு அபாண்டமான குற்றச்சாட்டு” என நினைக்கும் பொழுதே, கண்ணீர் ஆறாய் பெருக ஆரம்பித்தது.

“கண்ணா…” என்றவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழ, சட்டென்று அவரை தாங்கிக் கொண்டாள் பிருந்தா..

“அம்மாஆஆஆ…” என கண்ணீர் மல்க நின்ற பிருந்தாவை பார்த்துக் கொண்டே இமைகளை மூடினார் குணவதி..

திரிபுர சுந்தரிக்கு வந்ததோ சாதாரண மயக்கம்.. ஆனால் குணவதிக்கு வந்தது ஹார்ட் அட்டாக்..

துரிதமாக செயல்பட்டது என்னவோ பிருந்தா தான்..

“மிதுன். காரை எடு..” என மிதுனை அவசரப்படுத்தியவள், அங்கிருந்த வேலைக்காரர்களை வைத்தே குணவதியை ஹாஸ்பிட்டலில் சேர்த்தாள்..

தீவிர சிகிச்சையில் இருந்தார் குணவதி..

பிருந்தாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை.. அவளுக்கு பல வருஷமாக குணவதியை தெரியும். ஆசிரமத்தில் ஓடி ஓடி வேலை செய்பவர்.. சிறிதுக்கூட யாரிடமும் முகம் சுழித்ததில்லை..

அவர் ஆண்களுடன் பேசிக்கூட யாரும் பார்த்ததில்லை.. அவரின் மேல் எப்படி இப்படியொரு பழியை இவன் போடலாம்? என தீராத கோபம் தான் எழுந்தது அவ்வியக்தன் மேல்..

“இவனைய்ய்ய்..” என நரநரவென பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவளின் அருகில் வந்து நின்றார் திரிபுரசுந்தரி..

கண்களில் கலக்கத்துடன் வந்து நின்ற திரிபுர சுந்தரியைப் பார்த்தவள், எள்ளும் கொள்ளுமாய் வெடிக்க ஆரம்பித்தாள்..

“யார் நீங்க?.. என் அம்மாவை பத்தி தப்பு, தப்பா பேசுறதுக்கு?...” என அவர் கேட்கும் பொழுதே, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தன் வயதை மறந்து ஓடி வந்தார்..

வேகமாக வந்து நின்றது என்னவோ பிருந்தாவின் முன்பு தான்..

“குணா எப்படிம்மா இருக்கா?..” என்றவரை ஏற இறங்க ஒரு பார்வை அழுத்தமாக பார்த்தாள்..

அவளின் பார்வையே கேளாமல் கேட்டது, “யார் நீ?..” என்பதை..

அவளின் பார்வையை உணர்ந்தாற் போன்று, “நான் தான் குணாவோட புருஷன்.. லக்ஷ்மணன்..” என்றவரை பார்த்து நக்கலாக புன்னகைத்தாள் பிருந்தா..

“புருஷனா?.. நீங்களா?.. என் அம்மாவை உறவுக் கொண்டாட நீங்க யாரு சார்?..”

“அவன் தான்மா குணா புருஷன்.. என் பையன்.. அவ்விக் கண்ணாவாேட அப்பா..” என லக்ஷ்மணனின் உறவைப் பற்றி அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தார் திரிபுர சுந்தரி..

“ஒஹோ.. இத்தனை நாள் கோமாவுல இருந்தாரா?..” என உதட்டை வளைத்து கேலியாக கேட்டாள் பிருந்தா..

தன்னை நிற்க வைத்துக் கேள்விக் கேட்கும் பிருந்தாவின் மீது அப்படியொரு ஆத்திரம் எழுந்தது லக்ஷ்மணனுக்கு..

“ஆமா என்னை வழி மறிச்சு, கேள்விக் கேட்க நீ யாரு?..” என சற்று அதட்டலாக சொன்னவரைக் கண்டு உதட்டை சுழித்தாள்..

“நான் அவுங்க பொண்ணு..” என்றவளை அழுத்தமாக பார்ப்பது லக்ஷ்மணன் முறையானது..

“பொண்ணா?..” என புருவம் சுருக்கிப் பார்த்தார்..

“பொண்ணுன்னா, தத்துப்பொண்ணு..” என்றவளைக் கண்டு கேலியாக புன்னகைத்தார் அவர்..

“தத்துப் பொண்ணா?..” என்றவர், அவளையும் மீறி குணவதியை பார்க்க உள்ளே செல்ல, அதற்குள் டாக்டரே வெளியே வந்திருந்தார்..

“ஏன் சார்? இங்கே இவ்வளவு சத்தமா இருக்கு?.”

“அம்மாவுக்கு எப்படியிருக்கு டாக்டர்?..” என அக்கறை நிறைந்த குரலில் கேட்டாள் பிருந்தா..

“இப்போ ஓகே மா.. நார்மல் வார்டுக்கு மாத்துனதும் நீங்க போய்ப் பாருங்க..” என்றபடி டாக்டர் சென்று விட்டார்..

நீண்ட நேரம் நீள்வரிசையில் காத்திருக்க, அங்கு வீட்டில் தான் இருந்தாள் நிரோ குழந்தையை கவனித்துக் கொண்டு..

இத்தனை நடந்தும் அவ்வியக்தன் ஹாஸ்பிட்டல் வாசலில் கூட வந்து மிதிக்கவில்லை..

நீள்வரிசையில் காத்திருந்த பிருந்தாவின் அலைப்பேசி அலறியது.. அழைத்தது நிரோ தான்..

அப்பொழுது தான் ப்ரத்யூமன் ஞாபகமே வந்தது..

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியிருந்ததால், ப்ரத்யூமன் பிருந்தாவை தேடி அழுவதேயில்லை..

அழைப்பை உடனடியாக ஏற்றவள், “சொல்லு நிரோ, பையன் அழுகிறானா?..” என சற்று படபடப்புடன் கேட்டாள் பிருந்தா..

“அதெல்லாம் அழலை.. சமத்துப் பையனா நல்லாத்தான் இருக்கான்.. நீ பயப்படாதே நான் அவனை பார்த்துக்கிறேன். அம்மாவுக்கு எப்படியிருக்கு?.. நல்லா இருக்காங்களா?..”

“ஆமா நிரோ. இப்போ நல்லா இருக்காங்க.. மைல்ட் அட்டாக். அதுனால பெருசா எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க..”

“தாங்க் காட்.. அம்மாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.. அம்மா சரியான உடனே, நாம நம்ம ஊருக்கு அழைச்சிட்டுப் போயிடலாம் பிருந்தா.. இந்த ஊரும் வேண்டாம்.. இந்த அவ்வியக்தன் சங்காத்தமே நம்மளுக்கு வேண்டாம்..” என சொல்லி முடிக்கவில்லை..

“இல்ல நிரோ, இப்போ நாம ஊரை விட்டுப் போனா, அம்மா மேல தான் தப்புன்னு அவ்வியக்தன் முடிவே பண்ணிடுவாரு.. அதுக்கு நாம விடக்கூடாது.. தப்பே பண்ணாத அம்மா ஏன்டி பழி சுமக்கணும்.. இதுக்கு ஒரு தீர்வு கிடைக்காம, நாம எங்கேயும் போகக்கூடாது.. பார்க்கலாம் நாமளா, இவுங்களான்னு..” என தீர்க்கமாக சொல்லி விட்டு போனை அணைத்தாள்..

அவளின் பார்வை இப்பொழுது திரிபுர சுந்தரியின் மேல் பதிந்தது..

அவளுக்கு நன்றாக புரிந்தது.. என்ன நடந்தது என்பதை இவரைத் தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது என்று..

ஆனால் அவ்வளவு எளிதில் அவர் சொல்வார் என்ற நம்பிக்கை பிருந்தாவிற்கு இல்லை..

“பார்க்கலாம்” என்ற ரீதியில் தான் அங்கு அமர்ந்திருந்தாள்..

குணவதியை நார்மல் வார்டிற்கு மாற்றியதும் குடுகுடுவென தன் வயதை மறந்து ஓடினார் லக்ஷ்மணன்..

அவள் அவரைத் தாண்டிச் செல்லும் போது அடித்த மதுபோதையின் வாசனையில் முகத்தைச் சுழித்தாள் பிருந்தா..

“இந்தக் கண்ட்ராவி பழக்கம் வேற இருக்கா?..” என அவளும் குணவதியின் அறைக்குள் சென்றாள்..

லக்ஷ்மணன் ஒரு வித தவிப்புடன் குணவதியின் முகத்தைப் பார்க்க, அவரோ மருந்தின் மயக்கத்தில் இருந்தார்..

“குணா.. குணா..” என சற்று தழும்பலான குரலில் அழைத்தவரின் கண்களில் சட்டென்று கண்ணீர் பெருகியது..

அவளின் கண்ணீரைக் கண்ட பிருந்தாவிற்கு, வெறும் நடிப்பாகத் தான் அனைத்தும் தோன்றியது..

அவர்களின் பின்னால் வந்து நின்றார் திரிபுர சுந்தரி..

“குணா..” என அழைத்தவர், குணவதியின் கைகளைப் பிடிக்க, வேகமாக அந்தக் கரத்தினை தட்டி விட்டாள் பிருந்தா..

சட்டென்று கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவரைக் கண்டு அலட்சியமாக, “அவுங்களைத் தொட்டா உங்க கை அழுக்காகிடும்… கார் டிரைவரோட ஓடிப்போனவங்க தானே..” சொல் என்னும் அம்புக் கொண்டு அவரை சாட்டையாய் சுழற்றி அடித்தாள்..

“நீ பார்த்தீயா?..” என சூடாக கேட்டார் லக்ஷ்மணன்..

“நீங்க தானே சார் அவ்வியக்தன் கிட்ட அப்படி சொல்லி வச்சிருக்கீங்க?..” என்றவளை பேரதிர்ச்சியுடன் பார்த்தார் லக்ஷ்மணன்..

“ந்நான்ன்… என் குணாவை பத்தி தப்பா சொன்னேனா?.. நிச்சயமா இல்லை.. என் குணா எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியும்?.. அவ்விக்கிட்ட யார் அப்படி சொன்னாங்கன்னு எனக்குத் தெரியாது?.. அவ்வளவு ஏன் இத்தனை நாள் அவன் ஏன் அவுங்க அம்மாவைப் பத்தி ஒரு வார்த்தை கேட்கலைங்கிறது கூட எனக்குத் தெரியாது?” என்றவரை

“என்ன மாதிரி தகப்பன் நீ?..” என்பதை போல் தான் ஒரு பார்வை பார்த்தாள் பிருந்தா..

அவளின் பார்வையில் அடிப்பட்டுத் தான் போனார் லக்ஷ்மணன்..

“இங்கே பாரும்மா, நீ யாரு என்னன்னு கூட எனக்குத் தெரியாது?.. ஆனா என் குணா..”

“அவுங்க என்னோட அம்மா.. உங்க குணா இல்லை..” என அழுத்தமாக சொன்னாள் பிருந்தா..

அவளால் குணவதியின் இருக்கும் அன்பின் வெளிப்பாடு அவளை அப்படி சொல்ல வைத்திருந்தது..

“சரி அவ உன்னோட அம்மாவாவே இருக்கட்டும்.. ஆனா அவளுக்காக நீ இப்படி பேசுறதை பார்க்கும் பொழுது சந்தோஷமா இருக்கு.. என்னை விட்டு அவ பிரிஞ்சாலும், நல்ல உறவுகளோட அன்புல தான் அவ வாழந்திருக்கா.. ஆனா நான் தான்..” என்றவர் வெட்கித் தலைகுனிய ஆரம்பித்தார்..

குணவதி பிரிந்ததில் இருந்தே அவருடைய ஒரே தேடுதல் குடி.. குடி.. குடி மட்டுமே..

அதைத்தாண்டி எதையும் அவர் யோசித்துக் கூட பார்த்ததில்லை.. பெற்ற மகனைக்கூட..

மனைவிக்கான கடமையையும் அவர் சரியாக செய்யவில்லை..

பெற்ற மகனுக்கான கடமையையும் அவர் சரியாக செய்ததில்லை..

தன்னைப் பெற்றவருக்கான கடமையையும் அவர் சரியாக செய்யவில்லை..

அவர் அவருக்காக வாழ்ந்தார்.. அவருக்காக மட்டும் தான் வாழ்ந்தார். அவரைப் பொறுத்தவரை அவரின் கஷ்டம் மட்டுமே கஷ்டம், மற்றவரைப் பற்றிய கவலையெல்லாம் அவருக்கு தேவையில்லாத ஆணி.. மனதில் ஏற்றிக் கொள்ளவே மாட்டார்..

“சார்..” என அழுத்தமாக அழைத்தாள் பிருந்தா..

“அவளை அம்மான்னு கூப்பிடுறீயே ம்மா?..”

“நான் உங்க பையனோட குழந்தையை வயித்துல சுமந்திருக்கேன்..”

“என் பையனுக்கு குழந்தை இருக்கா?..” என்றவரை அதிர்ந்து பார்ப்பது இப்பொழுது பிருந்தாவின் முறையானது..

அறைக்குள் நுழைந்த அவ்வியக்தன் ஒரு நிலையாக இல்லை..

தன் அம்மா எப்படி பிருந்தாவுடன் என நினைத்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..

அப்பொழுது தான் அவனின் போன் அடித்தது..

“ஹலோ, அவ்விக்கண்ணா..” என்றவரின் குரலைக் கேட்டதும், அவனையும் அறியாமல் நீண்ட பெருமூச்சு தான் எழுந்தது..

“சொல்லுங்க அத்தை..” என்றவனின் குரலில் அவ்வளவு சோர்வு..

“என்ன அவ்விக்கண்ணா, ஏதாவது பிரச்சினையா?”

“ஆமா அத்தை.. அந்த பொம்பளை இங்கே வந்திருக்கு?..”

“பொம்பளையா? யாரை சொல்லுற அவ்விக்கண்ணா..” என தேன் குரலில் கேட்டார் எதிரில் இருப்பவர்..

“அவ தான்.. கார் டிரைவரோட ஓடிப்போனாளே அவ தான்..” என்றவன், நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தார்..

எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்தவர் சற்று ஆடித்தான் போனார்..

“என்ன சொல்லுற அவ்விக்கண்ணா?.. அந்தப் பொம்பிளை எப்படி நம்ம வீட்டுக்குள்ள வந்தா?..” என்றவரிடம், ஏனோ பிருந்தாவை பற்றி இறக்கமாக கூற மனம் முரண்டு பிடித்தது..

“அது.. அது..” என இழுத்தானே தவிர, மேலே ஒரு வார்த்தை பேசவில்லை..

“சரி அவ்விக்கண்ணா, நான் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு வர்றேன்..” என போனை கட் பண்ணி வைத்து விட்டார் அவர்..
 
Status
Not open for further replies.
Top