ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 21

Nithyapoovi

Member
Wonderland writer
பொம்முக்கு.. உடைக்கிறதுக்கு யார் மண்டையும் கிடைக்கல போல..:unsure::unsure::unsure: ஆனா.. ஊனா.. இதுல போன போட்டு உடைக்கிறது... 🤪 🤪 🤪
 
"போன் எடுத்தா எடுக்க மாட்டியா?" என்று அவளுக்கும் திட்டினான்...

"குளிச்சிட்டு இருந்தேன் வசி, என்னாச்சு?" என்று கேட்டாள்.

ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, "பாரதி அங்கே வந்தாளா?" என்று கேட்க, அவளோ, "நரேன் கூட கார்னிவேல் போய் இருக்கா... உன் கிட்ட சொல்லலையா?" என்று கேட்டாள். அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது...

"ஆஹ் சொன்னா மறந்துட்டேன்" என்றபடி போனை வைத்து விட்டான்...

சற்று முன் இருந்த பயம், பதட்டம் எல்லாம் இப்போது கோபமாக மாறி இருந்தது...

இதே சமயம் பாரதியோ, "எத்தனை மணி?" என்று கேட்டபடி போனை எடுத்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"ஐயையோ ஆறு மணி தாண்டிடுச்சா? இங்க இருந்தா இருட்டுனது கூட தெரியலையே" என்று நரேனிடம் சொல்ல, "ஆமா இதுக்குள்ள இருந்தா தெரியாது" என்றான்...

அவளுக்கு போனில் இருந்த வசிஷ்டனின் அழைப்பை பார்த்ததுமே அதிர்ச்சி தான்...

'முப்பது கால் ஆஹ்?' என்று நினைத்தபடி மெசேஜை பார்க்க, "வேர் ஆர் யூ?" என்று பத்துக்கும் மேற்பட்ட மெசேஜ் வேறு...

"ஆத்தி" என்று நெஞ்சில் கையை வைக்க, "என்னாச்சு?" என்று கேட்டபடி பில்லுக்கு பணம் கொடுத்தான் நரேன்...

"ஒண்ணும் இல்லை... கால் பண்ணி இருக்கார் அவர்" என்றாள்.

"ஓஹ் ஷீட்... அத மறந்துட்டேன்ல, இப்போ உன்ன காலேஜ்ல விடணுமா? இல்லை வீட்லயா?" என்று கேட்க, "வீட்டுக்கு போய் இருப்பாருன்னு நினைக்கிறன்... வீட்ல விடு" என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறியவள் வசிஷ்டனுக்கு போன் மேல் போன் பண்ணினாள்.

அவன் முறை இப்போது... எடுக்கவே இல்லை...

குளித்து விட்டு வந்தவன் அடித்துக் கொண்டு இருந்த போனை வெறித்துப் பார்த்தான்...

அவனுக்கு அடக்க முடியாதளவு கோபம்...

கட்டுப்படுத்த நினைக்கின்றான்...

முடியவில்லை...

இதே சமயம் வீட்டுக்கு வந்து சேர்ந்த பாரதியோ நரேனை அனுப்பி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்...

அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்துக் கொண்டே நாடியை நீவிக் கொண்டு இருந்தவன் கதவு தாழிடும் சத்தத்தில் மெதுவாக கண்களை விரித்தான்...

அவளோ, "முறைச்சு முறைச்சு பார்க்க போறார் பாரதி... அப்படியே பார்க்காம குளிக்க போயிடு" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு பையையும், போனையும் மேசையில் வைத்தாள்.

அப்படியே சென்று டவலை எடுத்து இருப்பாள்...

அறையே அதிரும் வண்ணம் ஒரு சத்தம்... திரும்பி பார்த்தால் நரேன் வாங்கி கொடுத்த அவளது புது போன் டிஸ்பிளே நொறுங்கி இருந்தது...

இல்லை வசிஷ்டன் நொறுக்கி இருந்தான்...

அதிர்ந்து போய் அவனை திரும்பி பார்க்க, "போன் அடிச்சு எடுக்கலன்னா இந்த போன் எதுக்குடி" என்று அவன் சீற, "அதுக்கு என் போனை உடைப்பீங்களா?" என்று பதிலுக்கு அவள் எகிறியபடி அவன் அருகே வந்தாள்.

மாதங்கள் கடந்து பேசி இருந்தார்கள்...


காதலாக இல்லை... கோபமாகவும், சண்டையாகவும்…
Super sis
 
Top