உயிர் உங்களுடையது தேவி
by கிருத்திகா கிருஷ்ணன் (touchscreen writer)
அத்தியாயம் 1
காலை கதிரவன் அந்த மலையின் நடுவில் வீட்டிருக்கும் முருகப் பெருமானின் கோவிலின் எழில் அழகை உலகிற்கு காட்டிக் கொண்டிருந்த வேளையில் நம் நாயகன் ராமும் நாயகி தேவியும் அந்த மலைப்பின் அடிவாரத்தில் மணக்கோலத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் சில இளசுகளும் இருந்தனர்.
தேவி கணமில்லா பச்சைவண்ண பட்டுடுத்தி மிகை இல்லா அலங்காரத்தோடும் அபரணத்தோடும் ஒப்பனையோடும் மிளிர்ந்தாள்.
அவளை நெருங்கி நின்ற தேவியின் தாய்மாமன் மகள் ரேஷ்மா, "இன்னைக்கும் ஏண்டி சிம்பிளா மேக்அப்
போட்டு இருக்க, உனக்கு மேரேஜ் பைத்தியம்" கேட்டாள். இதையே வேறு விதமாக கேட்டாள் தேவியின் தோழி, கீர்த்தி
"இப்படி இருந்தா என்ன. மை கல்யாணம் மை ஸ்டைல்… அப்புறம் என் ஜாதகத்துலையும் ராம் ஜாதகத்துலையும், ஏக பிரச்சனை இருக்காம், அதனால நாங்க முருகன் கிட்ட ஒவ்வொரு படியா ஏறி அதுக்கு குங்குமம் வச்சி எங்க வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு வேண்டிகிட்டு, தாலி கட்டிக்கணும் சொல்லிருக்காங்க, நான் ஹெவி சாரி கட்டி, மேக்அப், ஹெர் ஸ்டைல் எல்லாம் போட்டு இந்த 100 படிய ஏற முடியுமா. சிம்பிள் இஸ் மை ஸ்டைல், எனக்கு இதான் பிடிச்சுருக்கு நீ ஏதாவது பேசி முட் அவுட் பண்ணாத ரேஷ்" தேவி நீளமாக விளக்கினாள். தன்னை ஒரு முறை போனில் சரிபார்த்துக் கொண்டாள்.
"இவகிட்ட எல்லாம் பேச முடியுமாங்க. தான் புடிச்ச முயலுக்கு மூனுகால்ன்னு நிப்பா அவகிட்ட ஆமாம் சாமி போட்டு போய்க்கிட்டே இருக்கனும். ஆனாலும் சிம்பிளா இருந்தாலும் நல்லாதான் இருக்கா விடுங்க" என்று சொல்லி முடித்தாள், தேவியின் சின்ன அத்தை மகளும் ராமின் சித்தி மகளுமான, சுஜா.
இத்தனை நேரம் ராமும் தேவியின் பெரியப்பா மகன் வினாயகத்திடம் தீவிரமாக பேசிக் கொண்டுதான் இருந்தான்.
"எல்லாரும் படியேறிதான் வரணும்ன்னு இல்லல்ல… மத்த எல்லாரும் கார் அண்ட் வேன்ல மலைக்கு வந்துடுவாங்கதானே அப்பறம் நீங்க மட்டும் ஏன் எங்க கூட எங்களுக்கு மட்டும் தான பரிகாரம் நாங்க பாத்துக்குறோம், நீங்க நாம வந்த கார்ல மலைக்கு போங்க நானும் தேவியும் படி ஏறி வர்றோம்"
"அதான் நாம எதுக்கு... சேலை கட்டிட்டு முடியவே முடியாது. அவங்க தனியா வரட்டும் நாம கார்ல போ" என்று ராம்க்கு ஒத்து ஊதினாள், ரேஷ்மா.
விநாயகம் முழித்துபடி, "தனியா விடுறதா சித்தப்பா என்ன உப்புகண்டம் போட்டுருவாரு" அவனுக்கு தேவியின் அப்பா, சரவணன் பற்றி கவலை.
"எங்களுக்கு கல்யாணம் இப்ப… இப்ப கூட உங்க சித்தப்பா ஆல்சோ என் சின்ன தாய்மாமா அவரு பொண்ண என் கூட தனியா விடமாட்டாரா, சொல்லுங்க மச்சான்" என்று ராம் கேட்டவுடன் எல்லோரும் பக்கென்று சிரித்தனர், தேவியை தவிர, அவள் முகம் வெட்கம் பூசியது. அந்த முகத்தை தான் ராம் கேட்டவுடன் திரும்பி பார்த்தான். அவன் பார்த்ததும், 'என்ன இப்படி கேட்க விட்டாய்' என்பது போல் அவள் புருவம் உயர்த்த, 'அவன் இதில் என்ன இருக்கிறது' என்ற நிலையில் புன்னகை செய்தான்.
"உங்க ஆளு விவரமா ரூட் போட்டு குடுக்குறாரு தேவி இதுதான் டைம் நீ கேக்க நினச்சத கேட்டுரு" என்று தேவியின் காதோடு கிசுகிசுத்தாள். ரேஷ்மா.
அதுவும் சரிதான் கல்யாண பேச்சு எடுத்த நாளில் இருந்து, ஒரு வார்த்தை கூட இருவராலும் பேசிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு கேட்க முடியாத நிலை, அவனுக்கோ கட்டுபாடு போல, இந்தா இப்போது வெளிப்படையாக கேட்டுவிட்டானே.. இப்போது 1 மணி நேரத்தில் திருமணம் முடிந்துவிடும், அதற்குள்ளாவது இருவரும் சகஜமாக பேசி பழகத்தொடங்க வேண்டும். அதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள், தேவி.
"சரிணா, சாரி கட்டி நடக்க முடியாதுன்னு சொல்றாங்க இல்ல, நீ அவங்கள் கூட்டிட்டி வா. நான் கீர்த்திய கூட்டிட்டு போறேன், அவ சுடிதார் தான போட்டு இருக்கா"
"சரி நான் அவ கூட போறேன்" என்று கீர்த்தி சொல்ல, விநாயகம் அரை மனதாக சம்மதித்து விட்டு மற்ற இரு பெண்களையும் கூட்டி கொண்டு கிளம்பினான்.
அவர்கள் சென்றதும் தேவி படி அருகில் சென்று முதல் படியில் சந்தன குங்கும பொட்டு வைத்தாள், பக்கத்தில் கீர்த்தி குங்கும கிண்ணத்துடன் நிற்க "அத கொடுங்க அத நான் பாத்துக்கிறேன்" என்று ராம் கீர்த்தியிடம் கேட்க தேவியும் கீழே குனிந்தபடி மென்புன்னகை செய்தாள்.
கீர்த்தியும் அவன் கையில் தந்துவிட்டு அவர்களிலிருந்து கொஞ்சம் பின் தங்கி நடக்க, தேவி நிமிராமலே அடுத்தடுத்த படிக்கு வேகமாக பொட்டு வைத்துக் கொண்டு ஏறினாள். ராமின் கையிலிருந்து சந்தனத்தையும் குங்குமத்தையும் மாற்றி மாற்றி வாங்கனாலும், அவனை ஏறிட்டு பார்க்கவில்லை, பார்த்தால் வேலை கெட்டு விடுமே தாமதமானால் அப்பா கோவம் கொள்வார் என்கிற எண்ணம்தான் இதற்கு காரணம். அவனும் அதை புரிந்து வேட்டி தட்டினாலும் அவளுடன் வேகமாக நடந்தான்.
40வது படியை தொடும் போது தேவியின் முதுகு வலிக்க தொடங்கிவிட்டது. உடனே அவள் நிமிர அவன் சட்டென அவள் முதுகை தடவி விட்டு, "எதுக்கு இவ்வளவு அவசரம், நிமிர கூட இல்லாம செய்யனுமா" அவன் சொல்ல அவள் விழி விரித்து அவனையும் பார்க்க அவர்கள் பின்னே வந்த கீர்த்தியையும் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது.
"சுத்தி, யாரும் வரல உன் பரண்டும் ரொம்ப நேரமா ஒரே இடத்துல நின்னு போன்ல பேசிட்டு இருக்காங்க" அவன் பேச அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.
"பேசவே மாட்டியா? மாமா உன் வாய கம் போட்டு ஒட்டிட்டாங்களா?" அவன் குறும்பு சிரிப்போடு கேட்க அவளும் புருவம் தூக்கி சிரித்துவிட்டு, பேசக்கூடாதுன்னு இல்ல… மனசுல முருகா முருகா ன்னு சொல்லிகிட்டு இருக்கேன் என்று அவள் செய்கையிலே சொன்னாள்.
அவன் அவளை விழி சுருக்கி பார்த்து, "உனக்கு ஜாதகத்து மேல அவ்வளவு நம்பிக்கையா நம்ம லைப்ப நினச்சு பயப்புடுறியா?" அவன் குரலில் ஒரு ஏமாற்றும் இருப்பது அவளுக்கு புரிந்தது. இப்போது அதற்கு அவள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
"எனக்கு அது எல்லாம் பிரச்சனையில்லை, ஆனா எனக்கு முருகன் இஷ்டதெய்வம் அதான் எப்பவும் இப்படி மனசுல சொல்லுவேன். இது மெடிட்டேக்ஷன் பண்ற மாதிரி"
அவன் உடனே ஏளன புன்னகையோடே, “யார் இந்த இரண்டு பொண்டாட்டிகாரரா இஷ்ட உன் தெய்வம் மகிழ்ச்சி… சிறப்பு” என்று சொல்லிக் கொண்டே அவன் அடுத்த படிக்கும் பொட்டு வைக்க தொடங்கினான். தேவி பட பட என்று அவனோடு நடந்து “அப்பாவுக்கு பாடம் எடுத்த நம்ம கடவுள் முருகன் என் முதல் ஹீரோ” என்று சொன்னாள்.
அவன் நிமிர்ந்து, “இந்த கதை எல்லாம் நம்பறியா?” என்று சிரித்து விட்டு வேலையை தொடர்ந்தான். அவளுக்கு முகம் சுருங்கினாலும் ஏதோ ஒன்று தோன்ற வேகமாக சென்று அவன் முன்னே படியில் அமர்ந்தாள்.
அவனோ என்ன என்பது போல தலையை ஆட்ட, அவளோ விழி சுருக்கி யோசிப்பது போல செய்கை செய்து, “ அப்போ அவருக்கு ரெண்டு பொண்டாட்டிங்கறது கூட கதை தானோ… அது கதை அப்படின்னா இதுவும் தானே” என்று கேட்டாள் அப்பாவி போல்.
அவன் ஒரு நொடி தினறியே விட்டான், பின் பெருமூச்சுடன், "முருகா…" என்று சொல்லி அவளை கூர்ந்து பார்த்தான். அவள் எழுந்து அவன் அருகில் வந்து, "அப்படித்தான் முருகா முருகா சொல்லிகிட்டே பொட்டு வைங்க இல்லன்னா நானே செஞ்சிக்குறேன்"
"ஆஹான்… வாய் இல்லாதவங்களுக்கு ஒரு நாள் குரல் குடுக்குறது தப்பில்ல… நானே பொட்டு வைக்கிறேன்"
அவள் அதை கேட்டு முறைத்துக் கொண்டு "முருகா" என்று அவனுக்கு உடன்பட்டாள்.
"நல்லாத்தான் முறைக்குற… அப்படியே சத்தமா சொல்லிட்டு வா…" என்று சிரித்தான்.
கொஞ்சம் தூரம் சென்றிருப்பர், ராம் ஒவ்வொரு படி ஏறும் போதும் வேட்டியுடன் போராடிக் கொண்டிருந்தான். தேவியின் வாய் அவன் கட்டளைப்படி முருகனை சத்தமாக கூப்பிட்டாலும், அவன் போராட்டத்தில் பொறுமை இழந்து, "atha மடிச்சுதான் கட்டலாம்ல… அது கூடவே போராடி லேட் ஆக போகுது அப்பறம் அப்பா என்ன தான் திட்டுவாங்க" அவள் சொல்லி முடிக்க, இப்போது முறைப்பது அவன் முறையாக இருந்தது.
"உங்கப்பா புராணம் போதும்… நான் என்ன வேணும்னா பண்றேன் வேட்டிய மடிச்சு கட்டி எனக்கு பழக்கமில்லை அண்ட் கட்டுனா பின்னாடி வர்றவங்களுக்கு uneasy ஆ இருக்கும் அதான் பாக்குறேன்" என்றதும் இருவரும் பின்னால் திரும்பி பார்த்தனர்.
அங்கே கீர்த்தி ஒரு ஆணுடன் மலையின் அடர்த்தியான மரங்களினூடே அவன் கையை பற்றிக் கொண்டு மறைந்தாள். இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.
"கீர்த்…." என்று கத்த தொடங்கிய தேவியின் குரல் அப்படியே எதோ சிந்தனையில் அடங்கியது.
"வாட் இஸ் ஷீ டூயிங்?... அவன் யார்ன்னு உனக்கு தெரியுமா?" தேவியை பார்த்து கேட்டான், ராம்.
"அவ ஆளு… ஸ்… மீன்ஸ் அவ லவ்வர்… டீனேஜ் ல இருந்து… வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சி… ஒத்துக்கல… பிரிஞ்சிட்டாங்கன்னு நினைச்சோம் ஏண்ணா அவ அது பத்தி பேசியே வருஷம் ஆயிடுச்சு… ஆனா இப்போ பார்த்தா இது பிளான் போல இருக்கு" அவள் தயங்கி தயங்கி சொல்ல, அவனோ, "என்ன கொடுமை சரவணன் இது" என்று அவளை பார்த்து கேட்க அவள் சிரித்தே விட்டாள்.
"சிரிக்குற… நாம என்ன நிலைமைல இருக்கோம். அவங்க அப்பா வந்து என் பொண்ணு எங்கன்னு உன்கிட்ட தான் கேப்பாரு"
"கேட்டா… தலைசுத்துது நான் பஸ்ல வீட்டுக்கு போறேன்னு என்கிட்ட சொல்லிட்டு பொய்ட்டான்னு சொல்லிருவேன்… நீங்களும் அப்படியே சொல்லுங்க நீங்க சொன்னா நம்புவாங்க"
தேவியை விசித்திரமாக விழி சுருக்கி தாடை இறங்க பார்த்தான், அவளோ, "ஏன் என்ன அப்படி பாக்குறீங்க"
"இல்ல… ஒரு நிமிஷத்துல எவ்வளவு பெரிய பொய்ய சாதாரணமா கோர்வையா சொல்லிட்ட… நீ சொல்ற விதத்துல போலீஸ் கூட நம்பும். ஆனா என் கவலை அத பத்தி இல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல நீ மிஸஸ் தேவிகா ஶ்ரீராம் ஆகிடுவ அப்பறம் என்கிட்ட என்னன்ன சொல்லி என் தலைய உருட்ட போறியோன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"
அவன் சொல்லி முடிக்க அவள் வாய் திறந்து கொண்டது, 'ஆகா… நம்மள கண்டுகிட்டானே… இவன் அறிவாளிதான்… நம்ம பருப்பு இவங்கிட்ட வேகாதோ… இப்படி இருந்தா நாங்க எப்படி உருட்டி பொழைக்குறது' இப்போது அவள் கவலை கொள்ள தொடங்க, அங்கு அவர்களை நோக்கி மேலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவனுடன் புகைப்படக்காரர்கள் சேர்ந்து இறங்க, 'அடுத்து என்ன' என்பது போல ராமும் தேவியும் திரும்பினார்கள்.
by கிருத்திகா கிருஷ்ணன் (touchscreen writer)
அத்தியாயம் 1
காலை கதிரவன் அந்த மலையின் நடுவில் வீட்டிருக்கும் முருகப் பெருமானின் கோவிலின் எழில் அழகை உலகிற்கு காட்டிக் கொண்டிருந்த வேளையில் நம் நாயகன் ராமும் நாயகி தேவியும் அந்த மலைப்பின் அடிவாரத்தில் மணக்கோலத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் சில இளசுகளும் இருந்தனர்.
தேவி கணமில்லா பச்சைவண்ண பட்டுடுத்தி மிகை இல்லா அலங்காரத்தோடும் அபரணத்தோடும் ஒப்பனையோடும் மிளிர்ந்தாள்.
அவளை நெருங்கி நின்ற தேவியின் தாய்மாமன் மகள் ரேஷ்மா, "இன்னைக்கும் ஏண்டி சிம்பிளா மேக்அப்
போட்டு இருக்க, உனக்கு மேரேஜ் பைத்தியம்" கேட்டாள். இதையே வேறு விதமாக கேட்டாள் தேவியின் தோழி, கீர்த்தி
"இப்படி இருந்தா என்ன. மை கல்யாணம் மை ஸ்டைல்… அப்புறம் என் ஜாதகத்துலையும் ராம் ஜாதகத்துலையும், ஏக பிரச்சனை இருக்காம், அதனால நாங்க முருகன் கிட்ட ஒவ்வொரு படியா ஏறி அதுக்கு குங்குமம் வச்சி எங்க வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு வேண்டிகிட்டு, தாலி கட்டிக்கணும் சொல்லிருக்காங்க, நான் ஹெவி சாரி கட்டி, மேக்அப், ஹெர் ஸ்டைல் எல்லாம் போட்டு இந்த 100 படிய ஏற முடியுமா. சிம்பிள் இஸ் மை ஸ்டைல், எனக்கு இதான் பிடிச்சுருக்கு நீ ஏதாவது பேசி முட் அவுட் பண்ணாத ரேஷ்" தேவி நீளமாக விளக்கினாள். தன்னை ஒரு முறை போனில் சரிபார்த்துக் கொண்டாள்.
"இவகிட்ட எல்லாம் பேச முடியுமாங்க. தான் புடிச்ச முயலுக்கு மூனுகால்ன்னு நிப்பா அவகிட்ட ஆமாம் சாமி போட்டு போய்க்கிட்டே இருக்கனும். ஆனாலும் சிம்பிளா இருந்தாலும் நல்லாதான் இருக்கா விடுங்க" என்று சொல்லி முடித்தாள், தேவியின் சின்ன அத்தை மகளும் ராமின் சித்தி மகளுமான, சுஜா.
இத்தனை நேரம் ராமும் தேவியின் பெரியப்பா மகன் வினாயகத்திடம் தீவிரமாக பேசிக் கொண்டுதான் இருந்தான்.
"எல்லாரும் படியேறிதான் வரணும்ன்னு இல்லல்ல… மத்த எல்லாரும் கார் அண்ட் வேன்ல மலைக்கு வந்துடுவாங்கதானே அப்பறம் நீங்க மட்டும் ஏன் எங்க கூட எங்களுக்கு மட்டும் தான பரிகாரம் நாங்க பாத்துக்குறோம், நீங்க நாம வந்த கார்ல மலைக்கு போங்க நானும் தேவியும் படி ஏறி வர்றோம்"
"அதான் நாம எதுக்கு... சேலை கட்டிட்டு முடியவே முடியாது. அவங்க தனியா வரட்டும் நாம கார்ல போ" என்று ராம்க்கு ஒத்து ஊதினாள், ரேஷ்மா.
விநாயகம் முழித்துபடி, "தனியா விடுறதா சித்தப்பா என்ன உப்புகண்டம் போட்டுருவாரு" அவனுக்கு தேவியின் அப்பா, சரவணன் பற்றி கவலை.
"எங்களுக்கு கல்யாணம் இப்ப… இப்ப கூட உங்க சித்தப்பா ஆல்சோ என் சின்ன தாய்மாமா அவரு பொண்ண என் கூட தனியா விடமாட்டாரா, சொல்லுங்க மச்சான்" என்று ராம் கேட்டவுடன் எல்லோரும் பக்கென்று சிரித்தனர், தேவியை தவிர, அவள் முகம் வெட்கம் பூசியது. அந்த முகத்தை தான் ராம் கேட்டவுடன் திரும்பி பார்த்தான். அவன் பார்த்ததும், 'என்ன இப்படி கேட்க விட்டாய்' என்பது போல் அவள் புருவம் உயர்த்த, 'அவன் இதில் என்ன இருக்கிறது' என்ற நிலையில் புன்னகை செய்தான்.
"உங்க ஆளு விவரமா ரூட் போட்டு குடுக்குறாரு தேவி இதுதான் டைம் நீ கேக்க நினச்சத கேட்டுரு" என்று தேவியின் காதோடு கிசுகிசுத்தாள். ரேஷ்மா.
அதுவும் சரிதான் கல்யாண பேச்சு எடுத்த நாளில் இருந்து, ஒரு வார்த்தை கூட இருவராலும் பேசிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு கேட்க முடியாத நிலை, அவனுக்கோ கட்டுபாடு போல, இந்தா இப்போது வெளிப்படையாக கேட்டுவிட்டானே.. இப்போது 1 மணி நேரத்தில் திருமணம் முடிந்துவிடும், அதற்குள்ளாவது இருவரும் சகஜமாக பேசி பழகத்தொடங்க வேண்டும். அதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள், தேவி.
"சரிணா, சாரி கட்டி நடக்க முடியாதுன்னு சொல்றாங்க இல்ல, நீ அவங்கள் கூட்டிட்டி வா. நான் கீர்த்திய கூட்டிட்டு போறேன், அவ சுடிதார் தான போட்டு இருக்கா"
"சரி நான் அவ கூட போறேன்" என்று கீர்த்தி சொல்ல, விநாயகம் அரை மனதாக சம்மதித்து விட்டு மற்ற இரு பெண்களையும் கூட்டி கொண்டு கிளம்பினான்.
அவர்கள் சென்றதும் தேவி படி அருகில் சென்று முதல் படியில் சந்தன குங்கும பொட்டு வைத்தாள், பக்கத்தில் கீர்த்தி குங்கும கிண்ணத்துடன் நிற்க "அத கொடுங்க அத நான் பாத்துக்கிறேன்" என்று ராம் கீர்த்தியிடம் கேட்க தேவியும் கீழே குனிந்தபடி மென்புன்னகை செய்தாள்.
கீர்த்தியும் அவன் கையில் தந்துவிட்டு அவர்களிலிருந்து கொஞ்சம் பின் தங்கி நடக்க, தேவி நிமிராமலே அடுத்தடுத்த படிக்கு வேகமாக பொட்டு வைத்துக் கொண்டு ஏறினாள். ராமின் கையிலிருந்து சந்தனத்தையும் குங்குமத்தையும் மாற்றி மாற்றி வாங்கனாலும், அவனை ஏறிட்டு பார்க்கவில்லை, பார்த்தால் வேலை கெட்டு விடுமே தாமதமானால் அப்பா கோவம் கொள்வார் என்கிற எண்ணம்தான் இதற்கு காரணம். அவனும் அதை புரிந்து வேட்டி தட்டினாலும் அவளுடன் வேகமாக நடந்தான்.
40வது படியை தொடும் போது தேவியின் முதுகு வலிக்க தொடங்கிவிட்டது. உடனே அவள் நிமிர அவன் சட்டென அவள் முதுகை தடவி விட்டு, "எதுக்கு இவ்வளவு அவசரம், நிமிர கூட இல்லாம செய்யனுமா" அவன் சொல்ல அவள் விழி விரித்து அவனையும் பார்க்க அவர்கள் பின்னே வந்த கீர்த்தியையும் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது.
"சுத்தி, யாரும் வரல உன் பரண்டும் ரொம்ப நேரமா ஒரே இடத்துல நின்னு போன்ல பேசிட்டு இருக்காங்க" அவன் பேச அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.
"பேசவே மாட்டியா? மாமா உன் வாய கம் போட்டு ஒட்டிட்டாங்களா?" அவன் குறும்பு சிரிப்போடு கேட்க அவளும் புருவம் தூக்கி சிரித்துவிட்டு, பேசக்கூடாதுன்னு இல்ல… மனசுல முருகா முருகா ன்னு சொல்லிகிட்டு இருக்கேன் என்று அவள் செய்கையிலே சொன்னாள்.
அவன் அவளை விழி சுருக்கி பார்த்து, "உனக்கு ஜாதகத்து மேல அவ்வளவு நம்பிக்கையா நம்ம லைப்ப நினச்சு பயப்புடுறியா?" அவன் குரலில் ஒரு ஏமாற்றும் இருப்பது அவளுக்கு புரிந்தது. இப்போது அதற்கு அவள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
"எனக்கு அது எல்லாம் பிரச்சனையில்லை, ஆனா எனக்கு முருகன் இஷ்டதெய்வம் அதான் எப்பவும் இப்படி மனசுல சொல்லுவேன். இது மெடிட்டேக்ஷன் பண்ற மாதிரி"
அவன் உடனே ஏளன புன்னகையோடே, “யார் இந்த இரண்டு பொண்டாட்டிகாரரா இஷ்ட உன் தெய்வம் மகிழ்ச்சி… சிறப்பு” என்று சொல்லிக் கொண்டே அவன் அடுத்த படிக்கும் பொட்டு வைக்க தொடங்கினான். தேவி பட பட என்று அவனோடு நடந்து “அப்பாவுக்கு பாடம் எடுத்த நம்ம கடவுள் முருகன் என் முதல் ஹீரோ” என்று சொன்னாள்.
அவன் நிமிர்ந்து, “இந்த கதை எல்லாம் நம்பறியா?” என்று சிரித்து விட்டு வேலையை தொடர்ந்தான். அவளுக்கு முகம் சுருங்கினாலும் ஏதோ ஒன்று தோன்ற வேகமாக சென்று அவன் முன்னே படியில் அமர்ந்தாள்.
அவனோ என்ன என்பது போல தலையை ஆட்ட, அவளோ விழி சுருக்கி யோசிப்பது போல செய்கை செய்து, “ அப்போ அவருக்கு ரெண்டு பொண்டாட்டிங்கறது கூட கதை தானோ… அது கதை அப்படின்னா இதுவும் தானே” என்று கேட்டாள் அப்பாவி போல்.
அவன் ஒரு நொடி தினறியே விட்டான், பின் பெருமூச்சுடன், "முருகா…" என்று சொல்லி அவளை கூர்ந்து பார்த்தான். அவள் எழுந்து அவன் அருகில் வந்து, "அப்படித்தான் முருகா முருகா சொல்லிகிட்டே பொட்டு வைங்க இல்லன்னா நானே செஞ்சிக்குறேன்"
"ஆஹான்… வாய் இல்லாதவங்களுக்கு ஒரு நாள் குரல் குடுக்குறது தப்பில்ல… நானே பொட்டு வைக்கிறேன்"
அவள் அதை கேட்டு முறைத்துக் கொண்டு "முருகா" என்று அவனுக்கு உடன்பட்டாள்.
"நல்லாத்தான் முறைக்குற… அப்படியே சத்தமா சொல்லிட்டு வா…" என்று சிரித்தான்.
கொஞ்சம் தூரம் சென்றிருப்பர், ராம் ஒவ்வொரு படி ஏறும் போதும் வேட்டியுடன் போராடிக் கொண்டிருந்தான். தேவியின் வாய் அவன் கட்டளைப்படி முருகனை சத்தமாக கூப்பிட்டாலும், அவன் போராட்டத்தில் பொறுமை இழந்து, "atha மடிச்சுதான் கட்டலாம்ல… அது கூடவே போராடி லேட் ஆக போகுது அப்பறம் அப்பா என்ன தான் திட்டுவாங்க" அவள் சொல்லி முடிக்க, இப்போது முறைப்பது அவன் முறையாக இருந்தது.
"உங்கப்பா புராணம் போதும்… நான் என்ன வேணும்னா பண்றேன் வேட்டிய மடிச்சு கட்டி எனக்கு பழக்கமில்லை அண்ட் கட்டுனா பின்னாடி வர்றவங்களுக்கு uneasy ஆ இருக்கும் அதான் பாக்குறேன்" என்றதும் இருவரும் பின்னால் திரும்பி பார்த்தனர்.
அங்கே கீர்த்தி ஒரு ஆணுடன் மலையின் அடர்த்தியான மரங்களினூடே அவன் கையை பற்றிக் கொண்டு மறைந்தாள். இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.
"கீர்த்…." என்று கத்த தொடங்கிய தேவியின் குரல் அப்படியே எதோ சிந்தனையில் அடங்கியது.
"வாட் இஸ் ஷீ டூயிங்?... அவன் யார்ன்னு உனக்கு தெரியுமா?" தேவியை பார்த்து கேட்டான், ராம்.
"அவ ஆளு… ஸ்… மீன்ஸ் அவ லவ்வர்… டீனேஜ் ல இருந்து… வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சி… ஒத்துக்கல… பிரிஞ்சிட்டாங்கன்னு நினைச்சோம் ஏண்ணா அவ அது பத்தி பேசியே வருஷம் ஆயிடுச்சு… ஆனா இப்போ பார்த்தா இது பிளான் போல இருக்கு" அவள் தயங்கி தயங்கி சொல்ல, அவனோ, "என்ன கொடுமை சரவணன் இது" என்று அவளை பார்த்து கேட்க அவள் சிரித்தே விட்டாள்.
"சிரிக்குற… நாம என்ன நிலைமைல இருக்கோம். அவங்க அப்பா வந்து என் பொண்ணு எங்கன்னு உன்கிட்ட தான் கேப்பாரு"
"கேட்டா… தலைசுத்துது நான் பஸ்ல வீட்டுக்கு போறேன்னு என்கிட்ட சொல்லிட்டு பொய்ட்டான்னு சொல்லிருவேன்… நீங்களும் அப்படியே சொல்லுங்க நீங்க சொன்னா நம்புவாங்க"
தேவியை விசித்திரமாக விழி சுருக்கி தாடை இறங்க பார்த்தான், அவளோ, "ஏன் என்ன அப்படி பாக்குறீங்க"
"இல்ல… ஒரு நிமிஷத்துல எவ்வளவு பெரிய பொய்ய சாதாரணமா கோர்வையா சொல்லிட்ட… நீ சொல்ற விதத்துல போலீஸ் கூட நம்பும். ஆனா என் கவலை அத பத்தி இல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல நீ மிஸஸ் தேவிகா ஶ்ரீராம் ஆகிடுவ அப்பறம் என்கிட்ட என்னன்ன சொல்லி என் தலைய உருட்ட போறியோன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"
அவன் சொல்லி முடிக்க அவள் வாய் திறந்து கொண்டது, 'ஆகா… நம்மள கண்டுகிட்டானே… இவன் அறிவாளிதான்… நம்ம பருப்பு இவங்கிட்ட வேகாதோ… இப்படி இருந்தா நாங்க எப்படி உருட்டி பொழைக்குறது' இப்போது அவள் கவலை கொள்ள தொடங்க, அங்கு அவர்களை நோக்கி மேலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவனுடன் புகைப்படக்காரர்கள் சேர்ந்து இறங்க, 'அடுத்து என்ன' என்பது போல ராமும் தேவியும் திரும்பினார்கள்.
Last edited: