ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 12- உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

pommu

Administrator
Staff member
APV 12- உயிர் வாங்கிடும் மோகினி நீயடி
 
#உயிர்_வாங்கிடும்_மோகினி_நீயடி #விமர்சனம்

நாயகன்: சஞ்சய் குமார்

நாயகி: வசுந்தரா

பெற்ற தாயாலேயும் கூடப்பொறந்த சகோதரிகளாலேயும் நிறத்தால தள்ளி வைக்கப்படுற நாயகி வசுந்தராவை விரும்பி கல்யாணம் பண்ணி காதலை கொட்டி குடுக்கிற நாயகன் சஞ்சய். அவளுக்கு அம்மாக்கிட்ட இருந்து கெடைக்காத தாய்ப்பாசத்தை அள்ளி குடுக்கும் மாமியார், அன்பை பொழியும் தகப்பன், இன்னொரு தகப்பனாவே மாறுன மாமனார் முத்தான ஒரு பிள்ளை இப்படி சந்தோஷமா போயிக்கிட்டிருக்கிற வசு வாழ்க்கைல சஞ்சயோட வேலைமாற்றத்தால மாமியார், மாமனார் விட்டு பிரிஞ்சு போக வேண்டிய சூழல். அங்கே சஞ்சுவோட வேலைப்பளுவால அவனால முன்ன மாதிரி காதலை காமிக்க முடியாத நிலை. வசுவோட உடல்நிலையிலேயும், மனநிலையிலேயும் ஏற்படுற மாற்றம். அதனால கட்டின கணவன்கிட்ட கூட பகிர முடியாத சில விஷயங்களை எதிர் கொள்ற வசு அதை எப்படி கடக்குறா. அதுக்கு சஞ்சு உதவினானா? இதுதான் கதை.❤️❤️❤️

கோகிலா மாதிரி பெத்த பிள்ளைங்களுக்கிடையிலேயே வித்தியாசம் பாக்குறவங்க இருக்கத்தான் செய்றாங்க. வசுமதி, வசந்தி இந்த ரெண்டு சகோதரிகளும் வசுவை ஒரு மனுஷியாக்கூட மதிக்காம நடக்குறத பாக்கும் போது மனுஷ ஜென்மங்களா இதுங்கன்னு தோணுது நமக்கு. அதிலேயும் வசுவை விரும்பி வர்ற சஞ்சு குடும்பத்துக்கிட்ட என்னவெல்லாமோ பேசி அந்த கல்யாணத்தை நிறுத்த பாக்கும் போது அவ்வளவு கோபம் வருது. வசு வேண்டாம் ஆனா அவளோட பணம் வேணும்னு அம்மா கூடப் பொறந்தவங்கன்னு எல்லாரும் நெருக்கும் போது அவ சஞ்சுக்கு தெரியாம பண்ற விஷயங்களால வசு மேல வர்ற எரிச்சலை தவிர்க்க முடியல. ரகு ஒரு நல்ல தந்தையா எல்லா விதத்திலேயும் துணை நிக்குறாரு மகளுக்கு. வசுமதியோட கணவனும் நியாயத்தை பேசும் கதாபாத்திரம் 👍👍👍

சஞ்சுயோட பெற்றோர் அனுபமா - பிரபு மருத்துவர்கள். வசதி இருக்கிறவங்க. ஆனாலும் கண்ணியமானவங்க.பாசம் நிறைஞ்சவங்க.அதிலேயும் அனு வசுவை பொண்ணு பாக்க போகும் போது அவளுக்கு ஆதரவா பேசி அவளோட அம்மா, சகோதரிகளோட வாயை அடைச்ச விதம் அருமை. அனு-சஞ்சு பாசம், அனு-வசு உறவுநிலை எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. பிரபு பாவம் மருத்துவரா இருந்தாலும் மனைவி மகனுக்கு தலையாட்டுறதிலேயே அவங்க மேல அவரு வைச்சிருக்கிற பாசம் கண்கூடா தெரியுது. 🥰🥰

சஞ்சு-வசு காதல் ரொம்ப அழகா இருந்தது. சஞ்சு வசுவை புரிஞ்சுக்கிட்டதிலேயும், அவ பொறந்த குடும்பத்துக்கிட்ட இருந்து அவளை மீட்டெடுத்திலேயும், எந்த இடத்திலேயும் அவளை விட்டுக் குடுக்காம இருந்ததிலேயும் கணவனா ஜெயிச்சுட்டான். அவ அவனுக்கு தெரியாம செஞ்ச விஷயத்தையும் நேரடியா மனைவியை விட்டுக்குடுக்காம அவன் டீல் பண்ணினது செம.அவனோட வேலைப்பளுவால இல் வாழ்க்கைல சில இடங்கள்ல சறுக்கினாலும் அந்த சறுக்கலை அவன் சரி செய்த விதம் அருமை. இந்த இடத்தில ஒரு அம்மா, மாமியாரா இல்லாம முழுமையான மருத்துவரா தம்பதிகளுக்கு அறிவுரை சொன்ன அனுவுக்கு ஹேட்ஸ் ஆஃப்.அனு வர்ணன் தாய் எந்த நிறம் இல்லைனு அவ பொறந்த குடும்பத்தில இருந்து ஒதுக்கப்பட்டாளோ அந்த நிறத்தில பொறந்து அவ குடும்பத்துக்கு அவ மேல ஒரு பற்றைக் கொண்டு வந்த சின்னக் கண்ணன்.😍😍😍

வசு மேல மொதல்ல இருந்தே பரிதாபம் நமக்கு. சஞ்சுவோட அவளுக்கு கல்யாணம் முடியவும் அப்பாடா இனி அவ சந்தோஷமா இருப்பான்னு நினைக்கும் போதே சஞ்சுவுக்கு தெரியாம அவ பண்ற விஷயங்கள் நமக்கு கோபத்தை ஏற்படுத்துது. கொண்டவன் துணை இருக்கு அப்புறமும் இவ ஏன் வாயைத் தொறந்து மறுப்பு சொல்ல மாட்டேங்குறான்னு எரிச்சலை உண்டாக்கிடுறா. தனியா போனதுக்கு அப்புறம் அவளோட ஆசை, உணர்வு இதை எல்லாம் கணவன்கிட்ட சொல்ல முடியாம மாமியார் கிட்ட அரைகுறையா சொல்லி அதுவும் திருப்தி இல்லாம பள்ளிக்கால தோழி இப்போதைய கொலீக் கவல் ப்ரீத் அவக்கிட்ட சொல்லி விவாகரத்தான கவல் சொன்ன உபாயத்தைக் கேட்டதும் ஒரு நிமிஷம் அவ சொல்ற மாதிரி பண்ணிடுவாளோ வசுன்னு மனசுக்குள்ள ஒரு ஜெர்க். ஆனா அவ அதை ஏத்துக்காம கவலோட பிரச்சனைக்கும் சேர்த்து ஒரு தீர்வு சொன்னது நல்லா இருந்தது. 👌👌👌

கடைசியா சண்டை போடாம சஞ்சுவோட தவறை அவனுக்கே சுட்டிக்காட்டி ரெண்டு பேருக்குமே திருப்தியான ஒரு வாழ்கைகையை வாழ வழி செஞ்ச வசுக்கு ஒரு சல்யூட். 🫡🫡சஞ்சு கடைசியா உயிர் வாங்கும் மோகினிக்கு குடுத்த விளக்கம் தூள்.😂😂😂😂

வசு மூலமா பெரும்பான்மை பெண்களோட பிரச்சனையை சுட்டிக் காமிச்சதுக்கு ரைட்டருக்கு ஹேட்ஸ் ஆஃப். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காதல் மட்டுமில்ல திருப்தியான தாம்பத்யமும் அவசியம்.கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே அதில ஒரு திருப்தி இருக்கணும் ஆனா பெரும்பான்மை ஆண்கள் அவங்க சந்தோஷம், திருப்தின்னு பாத்துக்கிட்டு போயிடுறாங்க.மனைவியை பத்தி யோசிக்கிறதேயில்ல. இதைப்பத்தி கணவன் கிட்ட கூட பேச முடியாத பெண்கள் ஏனோதானோன்னு வாழ்க்கை வாழுறாங்க. அதில சிலர் விதியேன்னு சகிச்சுக்கிட்டு வாழுறாங்க. சிலர் அதை வேற இடத்தில தேடுறாங்க. இப்போ திருமணம் தாண்டிய உறவுகளுக்கு இது கூட ஒரு காரணமா இருக்கு. பெண்கள் இதை பத்தி பேசவே முடியாது. கேட்டா பெண்கள்னா ஆசைகளை அடக்கணும். குழந்தை குட்டின்னு ஆன பிறகு இதையெல்லாம் எதிர்பாக்கக்கூடாதுன்னு அடக்கிடுது சமுதாயம். ஆணைப் போல பெண்ணும் ரெத்தமும், சதையும், உணர்வுகளும் கொண்ட மனுஷப்பிறவிதான். அதை ஒத்துக்கிறதில்ல இந்த சமுதாயம்.கணவன்கிட்ட கூட பெண்கள் சொல்லத் தயங்குற விஷயங்களை ரொம்ப தெவிட்டாம விரசம் இல்லாம சொல்லி அதுக்கான தீர்வையும் சொல்லியிருக்கீங்க ரைட்டரே. சூப்பர். போட்டியில் வெற்றி. பெற வாழ்த்துக்கள்.❤️❤️❤️❤️
 
உயிர் வாங்கிடும் மோகினி நீயடி- நம்ம நாயகி வசுந்தரா அவங்க பாட்டியோட சாயல்ல நிறம் இடம் கம்மியா பொறந்ததுனால பெத்து தாய் சகோரிகளால சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்படுா ..... வீட்டிலேயே இருக்கு பிடிக்காம ஒரு பிளேஸ்கூலுக்கு வேலைக்கு போறா.... அந்த ஸ்கூலுக்கு எதிர் வீட்ல தான் நம்ம ஹீரோ சஞ்சய் இருக்காரு அவருக்கு எதிர்பாராத ஒரு ஆக்சிடன்ட்னால வீட்ல இருக்காரு அந்த நேரத்துல வசுந்தராவை பார்க்க நேரிடுது... வசுந்தராவோட ஆர்ப்பாட்டமும் இல்லாத அழகு அவரை ஈர்த்திடுது.... அவங்க பெற்றோர்களால பொண்ணு கேட்டு கல்யாணம் நிச்சயம் பண்றாங்க.. கல்யாணத்துல உங்க சகோதரிகளுக்கு விருப்பமில்லை இவ்வளவு வசதியான ஆடம்பரமான வாழ்க்கை நம்ம தங்கச்சி போய் வாழணுமா அப்படி என்ற பொறாமையில இருக்காங்க... கல்யாணம்... நல்லபடியா நடந்ததா கல்யாணத்துக்கு அப்புறம் அவங்களுக்கான வாழ்க்கை எப்படி இருந்தது அப்படிங்கிறது தான் கதை... அனுபமா அம்மா டாக்டரா இருக்காங்க இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஒவ்வொரு பொண்ணும் கொடுத்து வச்சிருக்கணும் ஏன் அப்படின்னா அவங்க மருமகளுக்கு அவ்ளோ பெரிய சப்போர்ட்டா இருக்காங்க வசுந்தராவுக்கு 30 வயசுக்கு மேல பெண்களுக்கு வர எல்லா உணர்வுகள் உணர்ச்சி பூர்வமான பிரச்சனைகள் தான் வருது அது வந்து ஒரு அம்மா மாதிரி அனுபவமா அம்மா புரிஞ்சி அவளுக்கான பிரச்சனைகளை எப்படி பையன் கிட்ட எடுத்துக் கூறி சரி படுத்துறாங்கன்றதை அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர்... பெண்களுக்கு ஏற்படுற நிறைய பிரச்சனைகளை நம்ம வெளியில சொல்ல அசிங்கப்படுற சில விஷயங்கள கரெக்டா வித்தியாசமான முறையில வெளிப்படுத்தி இருக்காங்க எழுத்தாளர் இந்த கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐❤️❤️❤️🥰🥰🥰
 
#உயிர்_வாங்கிடும்_மோகினி_நீயடி_விமர்சனம்

வசுந்தரா என்ற பெண்ணை மையப்படுத்தின கதை❤

நிறத்தை காரணமா வெச்சு தன் தாய் மற்றும் உடன்பிறப்புகளே வசுந்திராவை ஒதுக்கீடுறாங்க. அவளின் தந்தை ரகு மட்டுமே அவளின் துணை❤ நல்ல தந்தை ❤

வசுந்தரா தன் சொந்த வீட்டுலேயே வேலைக்காரியா இருக்குறா 😓 என்ன ஒன்னு எல்லாரும் சம்பளம் வாங்கிட்டு வேலை பார்ப்பாங்க ஆனால் இங்க இவள் சம்பாதிக்கிறதும் வீட்டுக்கு கொடுத்துட்டு வீட்டு வேலையும் பார்க்கிறா. ரொம்பவே பாவமா இருந்தது பார்க்க 😞😞

வசுந்தரா அம்மா அடடா அம்மானா இப்படில்ல இருக்கனும் 😡😡 கல்யாணம் ஆனதுக்கு அப்பறமும் விடுல வசுந்தராகிட்ட பணம் புடுங்கறதே குறியா இருக்காங்க 🤬 வசுமதி வசந்தி இரண்டும் சுத்த மோசம். என்ன பண்ணாலும் திருத்த முடியாத ஜென்மங்கள் அம்மாவும் அக்காவும்.

வசுந்தராவின் பயந்த சுபாவம் புரியுது. அவளுக்காக அவதானே பேசனும் அது செய்யமா இருக்கிறது எரிச்சல் வந்தது சில இடங்களில் 😨

வசுந்தரா சஞ்சய் திருமணத்திற்கு பிறகு ஒரு திருப்புமுனை எதிர்ப்பார்த்தேன்.
எதிர்ப்பார்த்தது வீண்ணாகல ❤❤

யாரும் வெளியிடங்களில் பேச தயங்குற களத்தை எடுத்து அதை சரியா எந்த முகசுழிப்பும் இல்லாமல் படிக்க கூடிய வகையில் தந்ததற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏

இந்த காலகட்டத்தில் பல விவாகரத்துக்கள் இதை காரணமா வெச்சுதான் நடக்குது. ஆண்ணும் பெண்ணும் சமம்னு சொல்லுறோம் அது எல்லா விஷயத்திலும் தானே❣️❣️ முக்கியமா பெண்கள் தன் கணவனிடம் தன் தேவையை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லனும் அதில் எந்த தப்பும் இல்லை. இது இயற்கையா எல்லாருக்கும் இருக்கும் உணர்வுதான்னு சொன்னது எல்லாமே அருமை 👏👏👏

நிச்சயம் இந்த கதையை படிக்கறவங்களுக்கு கணவன் மனைவி உறவை பற்றி நல்ல புரிதல் வரும்னு நம்புறேன்❤


அனுபமா நல்ல அம்மாவா மாமியாரா மனசுல நிக்கிறாங்க❤ ஒரு மருத்துவராவும் பெண்ணாவும் வசுந்திரவின் உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு அதை தன் மகன்கிட்ட கொண்டு சேர்த்த விதம் அருமை 😍😍😍

கவல் கொஞ்ச நேரமே வந்தாலும் நல்ல இருக்கு அவளின் வருகை இந்த கதையில் ❤

சஞ்சய் ஒரு பெண்ணை பார்த்தோம் கல்யாணம் பண்ணோம் குழந்தை பொறந்தாச்சு அவளுக்கு மாதம் செலவுக்கு காசு கொடுக்குறோம் இதுக்கு மேல என்ன 😧😧 அப்படினு கேக்கும் போது மூஞ்சிலயே குத்தலாம்னு கோவம் வந்தது 😡 ஆனால் அவன் தவறை சொன்னா அதை அவன் திருத்திக்கிட்ட விதம் மற்றும் இறுதியா அவளுக்காக அவளின் இடத்தில் இருந்து யோச்சது நல்லா இருக்கு ❤❤ நல்ல கணவன் ❤

கடைசி வரை நம்ம கூட வரும் உறவு கணவன் மனைவி உறவு. அவங்களுக்கான நேரம் ஒதுக்கி எந்த தயக்கமும் இல்லாமல் மனம் விட்டு பேசி புரிஞ்சுகிட்டாலே இல்வாழ்க்கை சிறக்கும்னு சொல்லுறாங்க இந்த மோகினி ❤❤

கதை களம் அதை சொன்ன விதம் ரொம்ப பிடிச்சது ❤ நல்ல கதை ❤ எனக்கு ரொம்ப பிடிச்சது ❤❤ சமூகத்துக்கு தேவையான கதையும் கூட ❤

மோகினி அனைவர் மனதிலும் இடம் பெற்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#உயிர்_வாங்கிடும்_மோகினி_நீயடி
#கௌரிஸ்ரிவ்யூ

தனக்கு பிறந்த பெண் பிள்ளைகளில் ஒருத்தி மட்டும் நிறம் கம்மியாகவும், ஜாடையில் மாமியார் போலவே இருக்கும் மகளை பிடிக்கல….

அந்த பிடிக்காத தனம் எவ்வளானா….சொந்த மகள் வாழ்க்கை என்ன ஆனா என்ன அப்படிகர எண்ணம் வரும் வரை…..

இப்படி சொந்த தாயால் வீட்டிலேயே வேலைக்காரி போல இருக்கும் வசுந்தராவை….

விரும்பி மணக்க கேட்கிறான் சஞ்சய்…..

இவங்க வாழ்க்கையும், பெண்கள் சட்டுனு கேட்க…இல்ல சொல்ல தயங்கர விஷயத்தை விரசம் இல்லாம சொல்லி இருக்காங்க ரைட்டர் 👏👏👏👏👏👏

வசு….ஒரு பக்கம் பாவமா இருந்தாலும்….சில சமயம் கோவமா தான் வருது…

என்ன இப்படி ஒரு ஏமாளினு….

பாவமா இருக்கறது….சொந்த வீட்டில், சொந்த தாயே ஒதுக்கும் போது அவளும் என்ன செய்ய முடியும்?????

ஏமாளியா இருக்கறது….பெத்த பெண் எப்படி போன என்ன, எவளோ வேலை பார்த்தா என்ன…ஆன அவ கிட்ட இருக்கற பணம் மட்டும் வேணுமா?அவ அம்மாவுக்கும் கூட பிறந்தவர்களுக்கும்????...

ஆன வேலை ஒரு பெண்ணுக்கு எவளோ தைரியம் தருதுனு நல்ல சொல்லி இருக்கீங்க 🤩 🤩 🤩 🤩 🤩

சஞ்சய்……ஆரம்பத்தில் இவன் காதல் ரொம்பவே நல்லா இருந்தது…..

வருடங்கள் ஓட இவன் காதல் குறைந்தது என்னவோ உண்மை தான்….

வேலை டென்ஷன் இப்படி பலது இருந்தாலும்…. தம் துணையோட நேரம் செலவு செய்யணும் தானே?????

அதை இவன் தவற விட…..அம்மா கிட்ட இருந்து கிடைக்குது அறிவுரை…..

அனு….சஞ்சய் அம்மா அப்படிகரத்தை விட வசு மாமியார்….இது தான் இவங்களுக்கு நல்லா இருக்கு….அவளோ ஏன் அவளோட அம்மாவே தான் இவங்க…..

வசுக்கு அம்மா கிட்ட கிடைக்காத அன்பு, அரவணைப்பு எல்லாம் அனு கிட்ட இருந்து தான் கிடைக்குது…..சோ ஸ்வீட் மாமியார்…..

கதை ரொம்பவே நல்லா இருந்தது ரைட்டர்…..

தாரணி, வசு குடும்பம் பத்தி எல்லாம் ஒரு முடிவுக்கு வரவே இல்லையே…..அங்க கொஞ்சம் fullfillness கிடைக்காத பீல்…..

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
Top