அகம் கொய்த காவலனே
தேன்குழலி நம் கதையின் நாயகி. மாறன் குழலி அண்ணா. அண்ணா தங்கை அவ்வளவு பாசமா இருக்காங்க. தேனுவோட உலகமே மாறன் தான்.
தேனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணுறான் மாறன்.ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலையால செய்யாத கொலை பழி விழுந்து தலை மறைவாகிடுறான். இது தெரியாமல் தேனு அண்ணன் தன்னோட கல்யாணத்துக்கு வருவான்னு காத்துக்கிட்டு இருக்கா.
விக்ரம் பிரதாப் நம் நாயகன். போலீஸ் ஆபீஸர் மாறனை தேடி வரான். மாறன் கிடைக்காமல் குழலியை தூக்கிட்டு போய் அவன் வீட்ல வைச்சுக்குறான்.
அவளை அம்புட்டு பயமுடுத்துறான். ஒரு கட்டத்துல பயபுள்ள அவ மேல லவ்ல விழுந்துடுறான். மாறன் மேல தப்பு இல்லனு தெரிஞ்சு அவனை எப்படி கொலை கேசுல இருந்து விடுவிக்கிறான்.
குழலி விக்ரம் லவ் என்னாச்சு அப்படினு அழகா கதையை கொண்டு போய் இருக்காங்க. மாறன் தங்கச்சிக்கு ஒரு பாசமான அண்ணன். ஆனால் அவ மனசை புரிஞ்சுக்காமல் விக்ரமை தப்பா புரிஞ்சுகிட்டு அவங்கள பிரிச்சு குழலியை கஷ்டம் படுத்திட்டான்.
அது மட்டும் தான் பிடிக்கல


செய்யாத தப்புக்கு தலை மறைவாகி தங்கச்சிக்காக உருகுறது அவனோட பாசம் அவ்வளவு பிடிச்சது.
விக்ரம் மாஸ் ஹீரோ



முதல்ல குழலி மேல கோவபட்டு கத்துறது அப்புறம் அவ மேல லவ் வந்து உருகுறது அவ வீட்டுக்கு போனதும் கோவபடுறதும் அவளுக்காக அடிபட்டு இருக்குறதுனு மனசுல நின்னுட்டான்



குழலி மாறன் மேல அவ்வளவு பாசமான தங்கச்சி. அவனுக்காக விக்ரமை விட்டுட்டு போகும் போது மட்டும் அவ மேல அவ்வளவு கோபம் வந்துச்சு. ஆனால் கடைசியில் விக்ரம் மேல எம்புட்டு பாசம்னு காட்டிட்டா



சந்தோஷ் பார்வதி இவங்க ஜோடி நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு.
விக்ரம் சந்தோஷ் பிரண்ட்ஷிப் நல்லா இருந்துச்சு.
கடைசியில் பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைச்சது சூப்பர்


தாமரை மாறன் ஜோடியும் நல்லா இருந்துச்சு.
ஸ்டோரி படிக்க விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு



வாழ்த்துக்கள்



