ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 17- பொய் பூசாத நேசங்களே

பொய் பூசாத நேசங்களே!


இது ஒரு மாஸானா ஹீரோயின் கதை..அதாவது ஆன்ட்டி ஹீரோயின் கதை.

நாயகி தேனிலா ரொம்ப டாமினேடிங் கேரக்டர்...டாமினேட்டா இருந்தாலும் அவ எடுக்குற முடிவுகள் அவளோட நிர்வாக திறமைலாம் சூப்பர்..பல போட்டிகள் இருக்கும் இடத்துல இவள மாதிரி தான் கெத்தா இருக்கனும் ..இப்படி கெத்தா இருக்க நாயகிதான் நம்ம நாயகனை காப்பாத்துறா ... நாயகன் நம்ம தேனிலா கிட்டதான் வேலை பார்க்கிறான் ..தேனிலாவுக்கும் நாயகனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ..கவிதனுக்காக அவ தன்னை மாத்தி கிட்ட விதம் நல்லா இருந்துச்சு..கொஞ்சமா மாத்தி கிட்டா ஆனாலும் வெளில காட்டிக்கல ...அவங்க ரெண்டு பேரோட பாண்ட் நல்லா வொர்க் அவுட் ஆச்சு..அவ கவிதன் பேமிலிய ட்ரீட் பண்ண விதம் அருமை...அவங்கள எல்லாம் இப்படிதான் நடத்தனும்..அதுலாம் படிக்க நிறைவா இருந்தது...கவிதன் தனியா தொழில் தொடங்க ட்ரை பண்ணும் போது அவ செஞ்ச உதவினு எல்லாமே சூப்பர்..கடைசிவரை கவிதனுக்காக நின்னதும் சூப்பர்..


நாயகன் - கவிதன்..நல்ல அறிவாளி நல்ல உழைப்பாளி ஆனா குடும்பத்து மேல ரொம்ப பாசம் வச்சிறுக்கவன்..ஆனா அவனோட பாசத்துக்கு தகுதி இல்லாதவங்க அவன் குடும்பத்து ஆளுங்க..அவனோட பணத்த மட்டுமே பாக்குற சுயநல குடும்பம்.. ஒட்டுண்ணிகள் எல்லாருமே..இவனுக்கு குடும்பத்த பத்தி தெரிஞ்சாலும் பாசத்துனால விட்டுகுடுக்காம இருக்கான்..ஆனாலும் அவனுக்கு கிடைச்சது என்னவோ அவமதிப்பும் ஏமாற்றமும் தான்.. அந்த டைம்ல இவன நாலு சாத்து சாத்தலாமானு இருந்துச்சு... பாசம் இருக்கலாம் ஆனாலும் இந்த அளவு ஏமாளியா இருக்க கூடாது... ஆனாலும் தேனிலா அவன விட்டு கொடுக்கல..அவன் பேமிலிய அதிரடியாக எல்லாத்தையும் அவங்களுக்கு புரிய வச்சா ‌‌..இவங்களுங்குலாம் இப்படி தான் புரிய வைக்கனும்..இல்லைனா கடைசில வர திருந்தாதுங்க..

ஆனாலும் தேனிலா மேல பாசம் இருந்தாலும் கோபத்துல தப்பா புரிஞ்சி கிட்டு அவள திட்டிட்டான் 😒அத தேனிலா விளக்குன விதம் நல்லா இருக்கு..


தான் ஆண் அப்படிங்கிற அகம்பாவம் இல்லாம தன் மனைவி கிட்டயே தொழில் சூட்சுமங்களை கேக்குற கவிதன் .👍👍👍



மித்ரன் - ஆனந்தி -- மித்ரன் தேனிலாவோட அண்ணண் ..அண்ணணா இருந்தாலும் அவன் தங்கை முடிவுக்கு‌கட்டுபடுற அண்ணணா இருக்கான்...தங்கைக்கு வலுசேர்க்கும் அண்ணண்.. இவன் மனைவி ஆனந்தி..இவங்க ரெண்டு‌பேரோட பார்ட் நல்லா இருக்கு..குட் சப்போர்ட்டர்ஸ் ரெண்டு பேரும்..



கவிதன் குடும்பம் - சரியான காசு‌ பிடுங்கி குடும்பம்..கவிதன ஒரு மனுசனாகூட மதிக்காத குடும்பம்..அவன் பணம்‌மட்டும் வேனும்..ஆனா அவனுக்குன்னு பாசம் காட்ட யாரும் இல்ல அவங்க மாமாவ தவிர.. அவர் தான் அந்த குடும்பத்துலயே கொஞ்சம் நல்ல மனுசன்....கவிதன் அண்ணண் தம்பிலாம் நல்ல அண்ணண் காசுல வீட்ட‌ வளக்குற குடும்பம்...அவன் மாமா பொண்ணு தேன்மொழி கூட அப்படித்தான்.. கவிதன் நல்லா சம்பாதிக்கிறான்னு அவன கல்யாணம் பண்ண நினைச்சு‌அவன் மனசுல ஆசை வந்துச்சு..ஆனா அவனுக்கு வேலை போயிடுச்சு தெரிஞ்சு அவன் தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டா..ஆனா இதுங்க எல்லாரையும் தேனிலா மிரட்டி ட்ரீட் பண்ண விதம் அடிதூள்..அப்படி பண்ணலனா கடைசிவரை அதுங்க கவிதனோட உழைப்பை தான் சாப்பிட்டு இருக்குங்க.... கடைசில எல்லாருமே திருந்தினாலும் தேனிலா மேல பயம் இரூக்க தான் செஞ்சது...


கவிதன் நண்பன் பிரபு- இவன் கேரக்டர் ஒரு நல்ல நட்புக்கு மரியாதை கொடுத்ததா இருந்தது.. கவிதனுக்கு சிலதுகள புரிய வச்ச விதம்னு..



தேனிலா ரொம்ப ரக்கர்ட் கேர்ளா இருந்தாலும் அவள புரிஞ்சி கிட்ட கவிதன் அவள அவளாவே ஏத்துக்கிட்டான்...மனைவியை சார்ந்து இருப்பதை கீழாகவும் நினைக்காம அவளோட வெற்றிகளை பெருமையாதான் நினைச்சான்...அந்த குணத்துக்காக தான் தேனிலா அவன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டது... அதேபோல கவிதனுக்காக‌தன்னை மாத்தி கிட்ட தேனிலாவும் சரி..இரண்டு பேரும் நம்மள ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க...!!!





ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!
 
#பொய்_பூசாத_நேசங்களே_விமர்சனம்

நல்லா மாஸ் ஹீரோ , சாஃப்ட் ஹீரோயின் இப்படியே படிச்சு பழகி போன எனக்கு அதிரடி நாயகி❤மென்மையான நாயகன் படிக்க ரொம்பவே நல்லா இருந்தது 😍😍

கதையின் நாயகி -தேன்நிலா பெயரில் மட்டும்தான் இனிமையிருக்கும் மற்றபடி பேச்சு செயல் எல்லாமே அதிரடி அமர்களம் தான் 😍

தேன்நிலாவின் ஆளுமையிலும் காதலிலும் அசந்து போய்டேன் ❤ நிலா மித்ரன் பாண்டிங் மற்றும் புரிதலும் ரொம்ப நல்லா இருக்கு ❤ ஆண் பெண் பேதம் இல்லாமல் இரு பிள்ளைகளையும் ஒரே போல வளர்த்த நிலா அப்பா அம்மாக்கு என் பாராட்டுக்கள்👏 தேன்நிலா கதிரவனை பழிவாங்குனது கொஞ்சம் பயமா தான் இருந்தது 🫣🫣. என்ன ஒரு வில்லத்தனம் 😶‍🌫️😶‍🌫️

விதுரகவிதன் கதையின் நாயகன் ❤ மிகவும் நல்லவன் மென்மையானவன் ❤ அம்மா அப்பா தம்பிகள் தங்கைகள்னு மொத்த குடும்பமும் அவன் காசுல வாழ்ந்துட்டு அவனையே ஏமாற்றுவது கொடுமை 😓😓 விதுவின் குடும்பத்தை மொத்தமா சுத்தமா பிடிக்கல 🥵🥵

விது ரொம்பவும் ஏமாளியா இருந்தது எரிச்சல் வந்தது 🤨🤨 அவன் காசையும் வாங்கிட்டு அவனுக்கு மரியாதையே தராதது கஷ்டமா இருந்தது இன்னும் அந்த ஆதங்கம் மனசுவிட்டு போகவில்லை 😕😕

விதுவின் தாய்மாமா மற்றும் பிரபு இரண்டு பேரும் நல்ல கதாபாத்திரங்கள் ❤

கதையில் வரும் எல்லா கதாபாத்திர அமைப்பும் அதை கடைசிவரை அழகா அப்படியே கொண்டு போனதும் நல்லா இருந்தது. முக்கியமா நிலா விது totally two extremely opposite characterisation 👏

ஆரம்பத்தில் நிலா விதுவை சுயநலத்திற்காக தானே திருமணம் பண்ண போகிறாள் பாவம் விது😞 பிரபுவை தவிர யாரும் அவனுக்கு உண்மையானவங்களா இல்லையேனு தோனுச்சு ஆனால் விதுகாக அவள் ஒவ்வொன்றும் பண்ண போது அவளின் காதலை உணரக்கூடியதா இருந்தது❤ முக்கியமா விதுவின் குடும்பத்தை கையாண்ட விதம் அருமை 👏👏👏

புதுசா திருமணமான பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை ஆண்களும் எதிர்க்கொண்டா எப்படி இருக்கும்னு ரொம்பவே அழகா காட்டீட்டீங்க 😍😍 விதுக்கு நான் ஒரு ஆண் அப்படிங்கற ஈகோ எங்கயும் அவனுக்கு வராதது மற்றும் மனைவிக்கு அவன் கொடுத்த மதிப்பும் மரியாதையும் காதலும் சிறப்பு ❤

மொத்தத்தில் இது ஒரு அழகான கதை ❤எனக்கு கதையை பிடிச்சிருக்கு❤

அனைத்து வாசகர்களிடமும் பொய் பூசாத நேசங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#பொய்_பூசாத_நேசங்களே….
#கௌரிஸ்ரிவ்யூ….

ஆன்டி ஹீரோயின் கதை🤩🤩🤩🤩🤩

ஆன்டி ஹீரோ எப்படி ஹீரோயின் மேல உள்ள காதலுக்காக கொஞ்சம் விட்டு கொடுத்து, அவளுக்காகவே எல்லாம் செய்து காதலிப்பானோ….

அது இங்க அப்படியே உல்டா 🥰🥰🥰🥰🥰….

அதுவும் நல்லா இருக்கு 🫰🫰🫰🫰🫰….

கவிதன்….பெரிய குடும்பத்தில் பிறந்த தலை மகன்…..பெரிய குடும்பம்னா….எண்ணிக்கையில்…..

ரெண்டு சகோதரிகள், ரெண்டு சகோதரர்கள் கூட பிறந்தவன் பொறுப்பு எப்படி இருக்கும்?????

தந்தைக்கும் சரியான வருமானம் இல்ல…..

அப்படி இருக்கும் போது…..படிப்பு மட்டுமே வாழ்க்கை தரத்தை உயர்த்தும்னு தாரக மந்திரத்தை கொண்டு நல்லா படிச்சி மேல வரான்…..

குடும்பத்தையும் ஒரு அளவுக்கு நல்ல நிலைக்கே கொண்டு வந்தரான்…..

சகோதரிகளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம், படிக்கும் போதே காதல் செய்து கல்யாணம் பண்ணின தம்பி, இன்னும் படிக்கும் தம்பி & பெற்றோர்….

இப்படி எல்லாரையும் தாங்கும் தூண் தான் கவிதன்…..

இந்நிலையில் அவன் வேலை போனால்????

தேனிலா…..பேரு மட்டும் தான் ஸ்வீட்….சரியான rugged கேர்ள் 🤩🤩🤩🤩🤩…..

பிசினஸில் உச்சம் தொட்டவள்…..இன்னும் அங்கேயே இருந்து எதிர்களை ஆட்டி வைப்பவள்…..

அவளின் பெண்மையை பத்தி பேசி….அவளின் ஜென்ம துரோகி ஆகிறான் கதிரவன்….

இவன் கம்பெனியில் தான் கவி வேலை பார்க்கிறான்….

கதிரை அடித்த அடியில்….கவிக்கும் வேலை போக….

தேனிலா கண்ணில் விழுகிறான் கவி…..

கண்ணில் விழுந்தவன் கருத்தில் நிறைய…..

கல்யாணமும் நடக்குது♥️♥️♥️♥️♥️…..

அடிப்படையிலேயே அதிகாரமும், நிமிர்வும் கொண்ட பெண் நிலா….. குடும்பதின் தலை மகன் ஆதலால் பொறுமையும், தான் என்ற ஆண் அகங்காரம் அற்றவன் கவி…..

இவங்க வாழ்க்கை இனி.??????

கதை ரொம்ப ரொம்ப பிடிச்சது எனக்கு…..

நிலாவின் காதல் 🫰🫰🫰🫰🫰

போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
பொய் பூசாத நேசங்களே

இது ஒரு ஆன்டி ஹீரோயின் அப்பாவி ஹீரோ பற்றிய ஸ்டோரி.

தேனிலா நம் கதையின் நாயகி. யாருக்கும் அடங்காதவள். காதல் கொண்டு நம் நாயகன் விதுரகவிதன் அவனோட அன்புக்கு மட்டும் எல்லாத்தையும் விட்டு கொடுக்குறா.

விது ஒரு அப்பாவி. அவனை அவன் வீட்ல யாருமே மதிக்க மாட்டிங்குறாங்க. ஆனால் அவனோட பணம் மட்டும் எல்லாருக்கும் தேவையா இருக்கு. தாமரை எல்லாம் என்ன அம்மாவோ 🤧🤧🤧🤧

எல்லாரையும் தேனிலா அடக்கி விதுவை எல்லார் முன்னாடியும் ஒரு உயரத்துக்கு கொண்டு வரது சூப்பரா இருந்துச்சு.

விது மாமாவை ரொம்பவே பிடிச்சுது. அவர் மட்டும் தான் அவனுக்கு full சப்போர்ட்.

விது அவளை சந்தேகம் படும் போது எல்லாம் அச்சோ செத்தான்னு தோணுச்சு.

ஆனால் பாவம் பார்த்து மன்னிச்சி விட்டுட்டா 🤭🤭🤭🤭

ஸ்டோரி படிக்க விறு விறுப்பா அருமையா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Top