அருண் சூர்யா அவனை சுற்றி அவனுக்காகதான் இந்த மொத்த கதையும்
அருணுக்கு திருமணம் நிச்சயம் செய்யுகிற பெண்கள் எல்லாம் இறந்து போயிடுறாங்க. ஏன் அப்படி? இது எதார்த்தமா நடக்குதா இல்லை யாராவது செய்யும் சதியா?
மங்கம்மா பேய் ஓட்டுற அரிவை பெண். அவளுக்கும் அருணுக்கும் திருமணம் ஏற்பாடாகிறது. இந்த திருமணமாவது நடக்குமா? மங்கா அருணை மீட்டெடுத்தாளா? என்பதே கதை ❤
சீலன் அருணின் தம்பி. அவனின் கதாபாத்திரம் அருமை நல்லா சிரிக்க வெச்சுட்டா எப்படியோ கடைசி வரைக்கும் கற்பை காப்பாத்திட்டே சீலன் மங்கா சீலன் கோம்போ அருமை
மஹா மாயா கொஞ்சம் பயம்காட்டுறா
சத்திரியனுக்கும் அவனுக்கும் இப்படி ஒரு முடிவு எதிர்ப்பார்க்கலை.
அருண் மங்கா காதல் நல்லா இருக்கு ❤
கதையின் போக்கும் காட்சி அமைப்பும் நல்லா இருந்தது❤ கதையின் பிற்ப்பாதி விறுவிறுப்பாக சிறப்பாக இருந்தது ❤
முக்கியமான காட்சியின் போது அச்சோ அடுத்து என்னனு படிச்சுட்டு இருந்தா எளிமையான வசனம் மூலமா பக்குனு சிரிக்க வச்சிடுறீங்க
ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லீருக்கலாமோனு தோணிச்சு உதாரணத்திற்கு மாயா ஆவியா மனுஷியானே புரியல மற்றும் சீலன் போட்ட கட்டு மாயாக்கு தெரியும் ஆனால் அருணுக்கு தெரியாதே அப்பறம் ஏன் அவன் தன் மனைவியை நெருங்கல. இந்த சின்ன இடர்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பான கதையா அமைந்திருக்கும் ❤❤
கதையின் தலைப்பு வித்தியாசமா நல்லா இருக்கு ❤ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அம்மம்மா பொண்ணா இவ.
பேய்கதையில்லிங்கோ பேயையே ஓடவைக்கிற நம்ம ராணி மங்காவோட கதை..
நல்ல கலகலப்பான கதையை புல் எண்டர்டெயின்மெண்ட் ஓட ரைட்டர் கொடுத்து இருக்காங்க..
சங்கரலிங்கம் அவரோட பையன அருணுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுறதுக்கு சில நாட்கள் முன்னாடியே அவன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுங்க எல்லாரும் மர்மமான முறையில் இறந்து போறாங்க அவங்க ஏன் இறந்து போறாங்க என்று தெரிஞ்சுக்க மாயமந்திரம் பண்ற நம்ம காளிதேவி அதிரூப அடங்கி மங்காக்கிட்ட போய் பூஜை பண்ணி விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டாங்களா என்பதை நல்ல நகைச்சுவை கலந்து த்ரில்லர் சினிமா பார்த்த ஃபீல்ல ரைட்டர் கொண்டு போயிருக்காங்க....
நம்ம மங்கா பேயோட்டும் சீன்செம்ம அருணோட தம்பி சீலன் மங்கா காம்பினேஷன் அடி தூள் மஹாமாயா , சத்ரியன் இவங்க பூர்வ ஜென்மத்திலும் திருந்தலை அதையே இப்பவும் செய்றது திருத்த மாட்டிங்க டா டேய்யயயயயமந்திரக்கட்டு போட்டது அருணுக்கு தெரியாமலும் அவன் மக்காவை ஏன் நெருங்கலை அருண் மங்கா லவ்வினாங்களா என்பதே கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இது ஒரு ஹாரர் ஸ்டோரிங்க .. ஆரம்பத்துல அப்படி தான் இருந்தது..ஆனா அடுத்த வரில இதுல பேய் மட்டும் இல்ல நல்ல காமெடியான கதையாவும் இருக்கும்னு தோணுன கதை..சோ ஹாரர் வித் ஜாலியான ஸ்டோரி
அருண் சூர்யா நம்ம நாயகன் .. அவங்க ஊரோட பெரிய குடும்பம் சங்கரலிங்கத்தோடபையன்
இவனுக்கு கல்யாணம்
பண்ணறதுக்காக நிச்சயம் பண்ணுற பொண்ணுங்க சரியா கல்யாணம் முன்னாடி இறந்துபோயிடுறாங்க..எதனால் இப்படி நடக்குது ? யார் இதற்கு காரணம் ? சூர்யாவின் பிரச்சினை தீர்ந்ததா ? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்..
நம்ம நாயகி மங்கம்மா ஒரு பேய் ஓட்டுற பொண்ணு..அட சினிமால வர்ர மாதிரி சாதாரண பேய் ஓட்டுற பொண்ணு இல்லேங்க..உண்மையாளுமே மாந்திரீகம் சக்தி தெரிஞ்ச பொண்ணு..அவங்க ஊரோட நடமாடும் காளி தெய்வம் .. இவளுக்கும் அருண் சூர்யாக்கும் திருமண ஏற்பாடு நடக்குது ..இப்படி நடக்க என்ன காரணம்ன்றத பூஜை பண்ணி கண்டுபிடிக்கிறா மங்கம்மா..
அப்போதான் தெரியுது இதுக்கெல்லாம் காரணம் மஹா மாயாதான்..மஹா மாயா யாரு ? மஹாமாயா இதெல்லாம் ஏன் பண்ணுறா ? அவளுக்கும் அருணுக்கும் என்ன பந்தம்? மங்கம்மா ஏன் அருண் சூர்யாவ காப்பாத்த நினைக்கிறான்னு பார்க்கும்போது தான் அருணுக்கும் மங்கம்மாவுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்றது தெரிய வருது.... ஆனால் அவங்க கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறா மஹா மாயா..மஹா மாயாவை மீறி எப்படி இவங்க கல்யாணம் நடந்ததுன்றத ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க கதைல..கலிவரதன் மங்கா நட்பும் நல்லா இருந்தது..
மங்கா சூர்யா காதல் ஈசத்துவம் பெற நினைக்குற மஹாவோட அப்பா சத்திரியன்.அருணை அடைய நினைக்கும் மஹாமாயா ..பூர்வ ஜென்ம சீலனின் மந்திர கட்டுன்னு பூர்வ ஜென்ம கதை நல்லா இருந்தது படிக்க..
மஹா மாயா சீன்ஸ கொஞ்சம் பயமா இருந்தது..இவளும் இவஅப்பாவும் ரொம்ப மோசம்..இவங்க பண்ணுறதுக்கு பெயர் துரோகம்..இயற்கைக்கு எதிரான விசயத்தை மஹாமாயா செய்ய நினைச்சா முடியுமா ? நம்ப மங்கம்மா அதை செய்ய விட்டுருவாளா? யாருகிட்ட மங்காகிட்டயேவான்னு அப்பப்பா அதெல்லாம் படிக்க செம்ம பயங்கரமா இருந்தது.. இறுதியில் மஹாவின் முடிவு ..
சீலன் அருணோட தம்பி ..இவன் கேரக்டர் யப்பா டேய் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா இவனுக்கும் மங்கம்மாவுக்கும் இடையில் நடக்குற கான்வோ லாம் செம்ம சிரிப்பு.. நல்லா பேசிட்டு இருப்பான் சுடுகாட்டுல தாரிணிய பார்த்ததும் பிளாப் ஆயிடுவான்நல்ல வேளைப்பா கடைசி வரை உன் கற்ப தாரிணி கிட்ட இருந்து காப்பாத்திட்ட ..
சீலன் ஒருபக்கம் சிரிப்பு காட்ட நம்ம மங்கம்மா சொல்லுறதெல்லாம் செய்ற குட்டிச் சாத்தான் இதுவும் நல்லா இருந்தது படிக்க
கதை ஆரம்பத்துல இருந்து இறுதிவரை நல்ல விறுவிறுப்பாக அமானுஷ்யங்கள் நிறைஞ்சதா இருந்தது..ஒரு பேய் படம் பார்த்த மாதிரி பீல் ..மங்கம்மா நம்ப அருந்ததிக்கே டப் கொடுப்பா போல..
மஹாமாயா ஆன்மா வா இல்ல மனிதரானு மட்டும் சரியா தெரியல அத கொஞ்சம் சரியா சொல்லி இருக்கலாம் ரைட்டர்..
மொத்தத்துல நல்ல திரில்லிங்கான கதை.. கதையின் போக்கும் படி மாயமந்திரகாரியான நம்ப மங்கம்மா அம்மம்மா பொண்ணா இவ!!!