ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 28- என் மரணமும் உனக்காக

என் மரணமும் உனக்காக கதை விமர்சனம்:::: நம்ம நாயகி குழலி ஒரு டாக்டர் அவங்க அடாப்ஸி பண்ணுன ஒரு ஆண் சடலம் மறுநாள் அவங்களை கல்யாணம் செய்யப்போர மாப்பிள்ளையாக வரார்... நம்ம ஹூரோயினுக்கு சும்மா அல்லுவிட்ருது அவர் ஒரு ஆன்மா அப்படின்னு நம்ம ஹூரோயினுக்கு நிஜ உருவில் காட்டிக்கிறார்... இந்த ஆன்மாவான சத்ரியன் குழலியை ஏன் தேடி வர்றார் குழலிக்கும் ஆன்மாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இப்படியும் ட்விஸ்ட் வைப்போம்ல அப்படி வச்சு நம்மை சுத்தல்ல விடறார் ரைட்டர்...
பரிதி மந்திரம் தெரிந்தவர் அவர் குழிக்கு உதவ வருகிறார்.. மந்திரவாதி சூனியன்னு மொத்த அமானுஷ்ய தந்தையும் கொண்டு வந்து த்ரில்லர்+ரொமான்ஸ்னு செம்ம சூப்பர்...பரிதி குழலி மேல லவ்வாகிடறார்
குழலியோட நண்பர்களுக்கும் சத்ரியன் ஆன்மா ஏன் தெரிகிறது நல்ல ஆன்மாக்கள் தீயஆன்மாக்கள் எல்லாம் என்ன செய்கின்றன... நீலம் ஹைவேசில் நடக்கும் மர்மம் என்ன
பெண்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் நடக்கும் காரணம் என்ன
ஒரு ஆன்மாவாக மாறிய பின்பும் தன் காதலியை காப்பாற்ற முயற்சிக்கும் சத்ரியன் மனதில் நீங்காத இடம் பெற்று உள்ளான்❤️❤️❤️❤️❤️ மர்மத்தை வெளிக்கொணர நாயகன் எடுக்கும் முயற்சிகள் என்ன என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤️ 🧡 🧡 🧡
 
Last edited:
#என்_மரணமும்_உனக்காக_விமர்சனம்

ஃபேன்டசி கதை 🤩

குழலி மருத்துவர் இவளை சுத்திதான் கதை நகருது ❤ குழலி சத்ரியன் உடலுக்கு பிரேத பரிசோதனை பண்ணுறாங்க முதல் நாள் இரவு . அடுத்த நாள் சத்ரியனே அவளை பெண் பார்க்க வருவது திக் திக் திகில் 🫣👻👻 காட்சி அமைப்பு.

சத்ரியன் யாரு குழலியை தேடி ஏன் வருகிறார்? குழலிக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாத்த பாரி வருகிறார். பாரி யாரு? குழலிக்கும் பாரிக்கும் என்ன சம்பந்தம்? சத்ரியனை யாரு கொலை செய்கிறார்கள்? இப்படி பல கேள்விக்கான பதிலை சுவாரஸ்யமா குடுத்திருக்காங்க 😍

பாரி மாயாஜால விந்தைகாரன். அவனின் சக்தி அவன் அதை உபயோகிக்கும் முறையெல்லாம் நல்ல கற்பனை 👏👏

லியா, குழலி மற்றும் வேதா நட்பு நல்லா இருக்கு 🙂 சத்ரியனின் காதல் அழகு 😍 பாரி குழலியிடம் செய்யும் குட்டி குட்டி சில்மிசங்கள் நல்லா இருக்கு 😅😅

நீலம் ஹைவேஸ் சம்பவங்கள் எல்லாம் கொடுமை 😡😡 விதுரும் அவன் நண்பர்களும் ச்சீ 🥵🤬🤬 திட்ட வார்த்தையே இல்லாத ஜென்மங்கள்.

லியா மற்றும் விதுர் லிங்க் சற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

பாரிக்கு எப்படி சக்தி கிடைத்ததுனு சொன்னப்போல விதுரின் சக்தி பற்றியும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம். ஒரு ஆறு அடுக்கு கட்டிடத்தை இதுக்காகவே கட்டி வெச்சுருப்பாங்களா என்ன??? 😧😧😧 பெண்ணாலதான் சாபம்னு சொல்லுறாங்க ஆனால் யாரு சாபம் கொடுத்தா? ஏன்? காரணக்காரியங்களை சரியா விளக்கி இருக்கலாம். அதை தவிர்த்து நல்ல சுவரஸ்யமான கதை❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
#என்_மரணமும்_உனக்காக….
#கௌரிஸ்ரிவ்யூ…..

ஃபேண்டஸி+ஹாரர்+கிரைம்+திரில்லர்+சஸ்பென்ஸ்+டுவிஸ்ட்+லவ் & கொஞ்சம் போல ரொமான்ஸ்……

இது எல்லாம் ஒரே கதையில்🤩🤩🤩🤩🤩🤩….

குழலியும், லியாவும் pathologist ஆ இருக்காங்க…..

ஒரு நாள் வந்த டெட் பாடியை பார்த்து லியா மயங்கி விழ…..

குழலி தான் அதை அட்டாப்சி செயற….

அந்த அட்டாப்சி செய்ய பாடியே அடுத்த நாள் அவளை பெண் பார்க்க மாப்பிள்ளையா வந்தா????

எல்லாருக்கும் மாப்பிள்ளையாய் தெரியும் சத்ரியன்…..

அவளுக்கும் மட்டும் தன் உண்மை உருவத்தை காட்ட…..

பயந்து அலற…..சத்ரியன் ஆன்மாவும் அவளை விடாம வெச்சி செய்து…..

குழலி ஓட ப்ரெண்ட்ஸ் லியா & வேதாவும் அவளை நம்ப….

சத்ரியன் அவங்களுக்கும் அவனோட ரூபதை காட்ட…..

ஒன்னும் செய்ய இயலா நிலை…..

பேய் ஓட தான் வாழ்க்கையா அப்படினு அவளே பயந்து இருக்க…..

அவளை காப்பாத்த வரான்….மந்திரவாதி பாரி😁😁😁😁….

ஆன்மா, பேய் போதாதுனு இப்ப மந்திரவாதி 🤣🤣🤣🤣🤣…..

அப்பறம் வருவான் சூனியக்காரன்🤭🤭🤭🤭🤭….

சத்ரியன் ஏன் குழலியை பயம் காட்டாரான்?????

பாரி வந்து ஏன் குழலியை காக்கணும்?????

இதுக்கெல்லாம் காரணமான சூனியக்காரன் யார்?????

இது தான் மீதி கதை🥰🥰🥰🥰🥰…..

கதை அடுத்து என்ன என்ன….அப்படினு விறுவிறுனு நகருது 🤩🤩🤩🤩🤩…..

பக்கா என்டர்டெயின்மென்ட் கதை🫰🫰🫰🫰🫰🫰..

சத்ரியன் ஒரு பக்கம் பயம் காட்ட…..

பாரி ஒரு பக்கம் மாயாஜாலம் காட்ட…..

சூனியக்காரன் எல்லாருக்கும் சூனியம் வைக்க….

கதை சரியான அல்டி🔥🔥🔥🔥🔥🔥……

கதையை narate பண்ணின விதம்…..அதனோட காட்சி எப்படி இருக்கும்னு imagine பண்ணி பார்த்தவே செம்மையா இருக்கு 🤩🤩🤩🤩🤩……

கதை ரொம்ப ரொம்ப பிடிச்சது எனக்கு❤️❤️❤️❤️❤️

போட்டியி
ல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
 
என் மரணமும் உனக்காக !!

இந்த கதையின் நாயகி குழலி ..இவ ஒரு pathologist .இவ போஸ்ட்மார்ட்டம் பண்ண இளைஞன் சத்ரியனே அடுத்தநாள் இவள பொண்ணு பார்க்க வர்ரான்..எல்லாருடைய கண்களுக்கும் மனிதனா தெரியுறவன் இவளுடைய கண்களுக்கு மட்டும் ஆன்மாவா தெரியுறான்.. அவனை பார்த்து இவ பயப்படுறா இவளை ஏன் அவன் தேடிவரனும் ? இவளுடைய பிரச்சினைகளுக்கு உதவி செய்றான் பாரி ? பாரி யார்? குழலிக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு ? சத்ரியனின் கொலைக்கான காரணம் என்ன ? இதற்கான விடைகளை கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்..

குழலியும் அவ பிரெண்ட்ஸ் லியா அன்ட் வேதாவுடைய சீன்ஸ் நல்ல காமெடியா இருந்துச்சு 🤭🤭🤭 அதுவும் அந்த பூஜை ரூம் கான்வோ லாம் சிரிப்புதான்..இவங்க மூணு பேரோட நட்பும் சூப்பர்..ஆனாலும் குழலி அட்டாப்ஸி பண்ணுன சத்ரியனே அடுத்தநாள் பொண்ணு பார்க்க வர்ரான். சும்மா அல்லுவிடுது பாருங்க நம்ம குழலிக்கு..அதுவும் அவன் அவனுடைய உண்மையான தோற்றத்தை அவளுக்கு மட்டுமே காட்டுறான்.. ஆரம்பத்தில அவளை பயமுறுத்தினவன் அவகிட்ட உதவி கேட்டுதான் வர்றான்..இவங்க கான்வோ நல்லா இருந்தது..குழலியின் கடந்தகால வாழ்க்கை ரொம்ப கஷ்டம்ப்பா😒

பாரி - மாயா வித்தைகள் தெரிஞ்சவன்..குழலியுடைய பிரச்சினைக்காக அவளுக்கு உதவி பண்ண வர்ரான்...இருக்கு இங்க பேய் இருக்குன்ற கதையா நெறயா பேய் ஆன்மாக்கள்னு நல்லா இருந்தது படிக்க.. பாரி கிட்ட குழலி வாயடிக்கிறதுலாம் நல்லா இருந்தது.ஆனா இவனுடைய மந்திர வித்தைகள் அதை அவன் உபயோகப்படுத்தும் விதம்னு எல்லாமே சூப்பர்.. இவனின் குழலி மீதான காதலும் அருமை ❤️❤️

சத்ரியன் - ஒரு ஆன்மாவாலயும் இவ்ளோ காதலிக்க முடியுமானு தோணிச்சு.. அன்புக்கு உருவம் தேவையில்லைனு நிரூபிச்சிட்டான்.. ஆரம்பத்துல குழலியை பயம் காட்டினாலும் பின்னாடி அவளுக்கு சப்போர்ட்டா இருந்தான்..இவன் ஸ்டோரி படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது..இவனுக்கு இப்படி ஒரு முடிவு வந்து இருக்க வேண்டாம்னு ரொம்ப பீல் ஆச்சுப்பா 😒பாரியுடைய காதலிக்கு எந்த விதத்திலும் சலிச்சது இல்லே இவனுடைய காதலும்.. இறுதியில் குழலியை விட்டு பிரியும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது 😒

விதுர் - இவனும் இவன் ப்ரெண்ட்ஸூம் ச்சே மனித மிருகங்கள்.. எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இருக்க மாதிரி , பாரி தன் மந்திர வித்தைகளை எப்படி நல்ல விதமாக பயன்படுத்தினானோ அதுக்கு எதிர்பதமா தீய காரியங்களுக்கு அதை பயன்படுத்தினான் விதுர்.அந்த நீலம் ஹைவேஸ் பார்ட்தான் படிக்க ரொம்ப வருத்தமா இருந்தது...இவனுங்க பொண்ணுங்களே படுத்திய கஷ்டத்திற்கு சரியான முடிவாக அமைந்தது இவங்க முடிவு...👏

ஆனால் லியாவுக்கும் விதுர்க்கும் காதல் எதிர்பாராதது.. எல்லா தப்பும் பண்ணுவானாம் விதுர் ஆனால் லியாமேல காதலாம்..இது காதலே இல்லை.. நல்லவேளை லியாவுக்கு அந்த நினைவேயை அழிச்சுட்டான் பாரி..👏

காதல் என்பது எல்லாருக்குமே பொதுவானது..அது மனிதனோ இல்லை ஆன்மாவோ யாராக இருந்தாலும் சரியே.. மனிதனான பாரியின் காதலுக்கு நிகரானது ஆன்மாவான சத்ரியனின் காதல்...அதை ஆசிரியர் சிறப்பாக சொல்லி இருக்காங்க ..!!

ஆனால் பாரிக்கு சின்ன வயசுல மந்திர சக்தி கிடைச்சதுன்னு சொன்ன ஆசிரியர் விதுர்க்கு எப்படி இப்படி மந்திர சக்தி கிடைச்சதுன்னு கொஞ்சம் சொல்லி இருக்கலாம்..

கதை நகர்வும் சரி , கதையில் வரும் நபர்களின் கோபம் பயம் வருத்தம் அன்பு காதல் என எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தது...!!

ஒரு நல்ல பேன்டஸி ஹாரர் கதை..இமேஜினேசன் லாம் நல்லா இருந்தது..!!

ஆசிரியர் வெற்றி பெற
வாழ்த்துக்கள்!!
 
Last edited:
Top