ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 35- கார்கால தேர்வுகள்

கார்காலத்தேர்வுகள்
ஆசிரியர்: ஆதுரியாழ்
நாயகன்: ஜெயமன்
நாயகி: ஜூவானந்தி
நல்ல இலங்கை தமிழில் நம் அங்கம் பக்கம் வீட்டில் நடப்பது போன்ற எதார்த்தமான முறையில் சிறுவயதில் இருந்தே உருவான காதல் கதை.....
ஜெயமன் இவ்வளவு நல்லவனாக இருக்க வேண்டாம் நீ வைத்தியம் இல்லை உன் காதலின்❤️❤️❤️❤️ புனிதமே உன் காதலை உன்னிடம் சேர்ப்பித்து வைத்து விட்டது....❤️❤️❤️❤️

ஜூவா. உன் பார்வையில் நீ எடுத்த முடிவு மிகவும் சரியே . உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய கூடாதுனு உன் காதலை🧡🧡🧡🧡 நீ வெளிப்படுத்திக்காம இருந்துட்ட...
சீதேவி உனக்கு இந்த பெயர் வச்சவன் அரை போதை நாயாதான் இருப்பான்... ரவீந்திரன் நல்ல கணவனாக வரும் நீ இல்லை நல்ல அப்பனாவும் ஜூவாவுக்கும் இல்லை ஓடிப்போன தர்ஷனுக்கும் இல்லை காலம் போன கடைசியில் புள்ளை🤦🤦🤦🤦🤦🤦
அதிபர்சிவக்குமாரும் ஜெயஜோதி அம்மாவும் மூன்று ஆண்பிள்ளைகள் திவாகர்,சுதாகரன், ஜெயமன் பெற்றும் பெண்பிள்ளை போல் ஜோதியை பார்த்து கொண்டது ஜூவாதான் அதை யோசிச்சு பார்த்திருக்கலாம் அதிபர் நீங்க எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்க ஜூவாவுக்கு உதவி பண்ணிட்டு மருமகள்னு வரும்போது ஜாதி பார்த்து உங்கள் நல்ல குணத்தை கீழ் இறக்கிட்டிங்க...

இவ்வளவு பிரச்சினையிலும் கவர்மென்ட் வேலை வாங்குறது அதுவும் நுவரெலியாவில் முதல் பிரதேச செயலாளர் பதவி வாங்குறது ஜுவாவோட மன உறுதியை காட்டுது... நண்பர்கள் ருசைக், சீலன், கோகிலா,அஸ்மி எல்லா கதாபாத்திரங்களும் அருமை...சுஜீவ ஜெயக்கொடி நீங்கள் விரும்பும் பொண்ணை விட உங்களை விரும்பும் பொண்ணை கட்டுனா உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும் தத்துவங்க🧘🧘🧘🧘🧘 கடைசியில் ராஜூவே லாவண்யாவை கல்யாணம் பண்ணது சூப்பர் காலத்தை மட்டும் தான் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி மத்ததெல்லாம் சூப்பர் பாஸ்ட் தான் ❤️❤️❤️.
எல்லா கேரக்டர்சும் சரியான முறையில் கொண்டு சென்று உள்ளீர்கள்... இந்த ட்ரிபிள் ஜே பேமிலி அருமை .
🧡J-jeyaman.J-jeevanthi.J-jeniya🧡
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 🥰 🥰 🥰
 
Last edited:
ஜீவானந்தினி (J) யின்💙 பயணம் ❤ அடைமழையும் சாரல் மழையினூடே இவளின் பயணம் இலக்கை அடைந்ததா? என்பதே கதை ❤ அதுவும் படிக்க படிக்க தெவிட்டாத இலங்கை தமிழில் 😍😍


எத்தனை தடைகள் வந்தாலும் தன் இலக்கை அடையாமல் காட்டாற்று வெள்ளம் ஓய்ந்ததில்லை❤ அதுபோலவே ஜீவானந்தி 💙


எத்தகைய கடுமையான சூழ்நிலையும் அவள் கையாளும் விதமும் அதை கடந்து வரும் துணிவும் பிரம்பிக்க வைக்கிறாள் 😲😲


சீதேவியின் கொடுமையில் இருந்து தப்பித்த அவளின் சமயோசித புத்தி, பிரச்சனையில் தேங்கி நிற்காமல் அடுத்து என்ன என்று சிந்திக்கும் திறன், இடம் பொருள் ஏவல் அறிந்து நடத்தல், ஆளுமை, விடாமுயற்சி, செய்நன்றிமறவாமை, காதல் இருந்தும் அதை வெளிக்காட்டமல் நன்றிகாக மறைத்தல் இப்படி இன்னும் பல பல நல்ல குணாதிசயங்களே ஜீவானந்தி 💙
இவளில் ஜெயமன் மட்டுமல்ல நானும் காதல் வயப்பட்டேன் 😍😍


காதல் இல்லாத பயணம் சுவாரஸ்யமற்றது 😍 அவளை காதல் மழையில் நனைய வைக்கவே வருகிறான் ஜெயமன் (J) 💙அவளை மட்டுமல்ல நம்மையும் சேர்த்தே 😍😍


ஓயாது காதல் வசனங்கள் பேசி அவள் பின் சுற்றாமல் அவளுக்கான காத்திருப்பிலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் செய்யும் சிறு சிறு சில்மிஷங்களாகட்டும் 🤣🤣, ஜீவா எப்போது விட்டு சென்றாலும் பறிதவித்து நின்றதாகட்டும் ,எந்த சூழ்நிலையிலும் அவளுக்கும் அவளின் முடிவுக்கும் துணையாய் நின்றதாகட்டும், ஜெ ❤ மனதில் நிற்கிறான்.


அதிபர் வெளியில் நல்லவர் நேர்மையானவர் ஆனால் சந்தர்ப்பம் அவரின் உண்மை நிறத்தை காட்டி கொடுத்துவிடுகிறது 😥 இந்த சமூகத்தில் உள்ள சில அழுக்கு மனிதர்களின் பிம்பம் இவர்.


டீச்சர் நல்ல தாய் ❤ டீச்சர் அதிபர் புரிதலும் அன்யோன்யமும் அருமை ❤ டீச்சரும் அதிபரும் ஜீவாவிடம் காட்டும் அன்புமும் அக்கறையும் அதற்க்கு பிரதியாய் ஜீவாவின் நடத்தையும் சிறப்பு 👏👏 ராஜு லாவண்யா இணை நல்லா இருக்கு ❤


ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகா வடிவமைச்சிருக்கீங்க ❤ சுவாரஸ்யமான கதை ❤


இலங்கை தமிழில் வார்த்தைகளை நல்லா கோர்த்து அழகான நிறைவான படைப்பா இருந்தது❤ JJ மனசை நிறைக்கறாங்க❤


கதையை எனக்கு மிகவும் பிடித்தது❤💙


கார்கால தேர்வு (J❤J) முழு விழுக்காடு எடுத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
கார்கால தேர்வுகள்
ஜெயமன் ♥️ ஜீவானந்தி
தன் குறிக்கோளுக்காக தனியாக போராடும் ஜெயமனின் நந்தி, அவளின் விலகளின் காரணம் காரணம் தெரியாமலே அவனின் அவளுக்கான பல வருட காத்திருப்பு ♥️ மனதில் காதலிருந்தும் அவன் பெற்றவர் மனமறிந்து ஒவ்வொரு தடவையும் தன் மனமுடைந்து அவன் மனமுடைத்து பிரிந்து செல்லும் அவள் காதலும் அழகு ♥️ இலட்சியம் அடைந்து, அவன் கொடுத்த தோடு, JJ பென்டன் அணிந்து அவனிடம் மனம் திறப்பதும் அழகு,
அவர்களின் காத்திருப்பின் பரிசாக ஜெயனி அழகோ அழகு , மழையோடு ஒரு பயணம்.. J ♥️J
 
கார்கால தேர்வுகள் விமர்சனம்

இலங்கை தமிழுடன் கூடிய காதல் கதை...❤️

நாயகி ஜீவானந்ததி அரசாங்க‌ அதிகாரியாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் தனியாளாய் தன் கனவிற்காக போராடுபவள்..அவளுக்கு உதவி புரிபவர்களாக அவளின் பள்ளிக்கால அதிபர் சிவக்குமார் மற்றும் அவரின் மனைவி ஜோதி .. இவர்களின் மகன் ஜெயமன் ஜீவானந்திக்காக தன் காதலை மனதில் கொண்டு காத்திருக்கிறான் ...மனம் நிறைய காதல் இருந்தும் அதை மறைக்கும் ஜீவானந்தி...காரணம்??? ஜீவானந்தியின் இலட்சியம் நிறைவேறியதா ? ஜெயமனின் காதல் வென்றதா ? விடை கதையில்....❤️

ஜீவானந்தி தன்னம்பிக்கை கொண்டு விடாது போராடி முயலும் பெண்..டாக்டராக வேண்டிய பெண் குடும்ப சூழலால் டிகிரி மட்டும் படிக்க அரசாங்க அதிகாரியாக வேண்டிய அவளின் போராட்டம் நமக்கும் ஒரு உதாரணம் தான்..முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க பல தடைகள் தாண்டி இறுதியில் தன் இலட்சியத்தை அடைந்த விதம் நம்மை வியப்பூட்டுகிறது...எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதை துணிவு கொண்டு கடந்த விதம் அருமை...👏

தன் காதலை எதற்காக‌ மறைத்தாள் என்றதற்கு அவள் கொடுத்த விளக்கம் அவளின் இடத்திலிருந்து சரியாகப்பட்டாலும் ஜெயமனின் இடத்திலிருந்து பார்த்தால் கஷ்டம் தான்😒..

காதலில் காத்திருப்பது கூட சுகம்னு சொல்லுவாங்க ஆனால் காதலின் காத்திருப்பு கஷ்டமாகிப்போனது ஜெயமனுக்கு...எதற்காக விலகிப்போகிறாள் என்று புரியாமல் அவளுக்காக காலம் கடந்தும் காத்திருந்த ஜெயமன் டீன் ஏஜ் காதல் போல அவள் பின்னோடு அழையாமல் அவளுக்காக எல்லா நேரத்திலும் உதவி செய்தும் அவள் அனுமதியளித்தும் தன் காதலை அவன் கௌரவப் படுத்திய விதம் அழகு..❤️ அவள் விட்டுச்சென்றாலும் இறுதிவரை தன் காதலுக்காக காத்திருந்த ஜெயமனின் காதல் வெகு சிறப்பு ❣️

சிவக்குமார் அதிபர் ஜீவாவுக்காக எல்லா உதவிகளையும் பண்ணுனார்.. அவளையும் தன்‌பிள்ளைபோலவே நினைச்சார்..ஆனால் அவளை மருமகளாக்க சொன்ன போது அவரின் உண்மை குணம் வெளிப்பட்டது..வெளியில் நல்லவராக இருந்தாலும் உள்ளே சாதிவெறி பிடிச்சவர்தான்..இதனாலேயே அவர்மேல் இருந்த மதிப்பு குறைந்தது..ஆனால் அவரின் மனைவி ஜோதிநல்ல தாய் ..டீச்சர் மற்றும் ஜீவாவின் பிணைப்பு ரொம்ப அருமை...அவளுக்கா எல்லா சூழ்நிலைகளிலும் உறுதுணையாக நின்னாங்க ஜோதி டீச்சர்..

ராஜூ நல்ல கலகலப்பான பேர்வழி..ராஜூ லாவண்யா ஜீவா நட்பு சூப்பர்...

சீதேவி சித்தி பேரு சீதேவி ஆனால் இத வேற பேர் சொல்லி தான் திட்டனும்..😬இதுக்கு வேற பேரு வச்சு இருக்கலாம்😒😒இது ஜீவானநந்திய பண்ணுற கொடுமைலாம் பார்த்தா நம்மலே இதை போட்டுத்தள்ளிடலானு தோணுச்சு..ஆனால் சீதேவியின் எல்லா கஷ்டத்துக்கும் ஜீவானந்தி சரியான பதிலடி கொடுத்தா .. ரவீந்திரன் சரியான தகப்பனும் இல்லை ஜீவாவுக்கும் சரி தர்ஷனுக்கும் சரி..


கார்காலத்தில் சாரல் மழையினூடே இவர்கள் காதலும் நம்மை மென்மையாக வருடிக்கொண்டே சென்றது...இலட்சியத்திற்காக ஜீவானந்தியும்(J) அவளின் காதலுக்காக ஜெயமனும் (J) இவர்களின் காதலின் காத்திருப்பின் பரிசாக ஜெயனியும் (J ) கிடைத்தது அழகு...


இந்த கதையின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் நல்லா இருந்தது... ஆரம்பத்தில் ஜீவாவை மருமகளா ஏற்க விரும்பாத அதிபர் காலமாற்றத்தில் அவளை மருமகளாக ஏற்றுக்கொண்ட விதம் 👍 👍
ஆரம்பம் முதல் இறுதி வரை தெவிட்டாத காதல் கதை...!!

கார்க்கால தேர்வுகளின் ஜெயமனும் ஜீவானந்தியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!
 
Top