ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 9-நீயே நீயென்று என் கனா

நீயே நீயேன்று என் கனா- அபய் ஒரு கிரிக்கெட் வீரர் அவருக்கு இந்தியா அளவில் கிரிக்கெட் ப்ளேயராக விளையாட வேண்டும் என்பது சிறு வயது முதலான இலட்சியம் அவர் இந்தியாவிற்க்காக விளையாடும் போது எதிர்பாராத விதமாக அவரின் ஒரு கண்பார்வை குறைய கையில் நடுக்கமும் ஏற்ப்பட்டு விளையாட முடியாத நிலையில் மிகவும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகிறார்.... பெற்றோர் அவரை தேற்றி கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் அங்கு அவரின் சிறு வயது காதல் ஆரத்யாவை பார்க்கிறார்.. தியா அபயிடம் பயிற்ச்சி பெற்று அபியின் கனவை நனவாக்கினாலா என்பதே கதை .... குடும்ப சூழலில் காதல்+ கிரிக்கெட் கலந்து ஆசிரியர் கதையை நகர்த்திச் செல்லும் விதம் அருமை வாழ்த்துக்கள் 💐 ❤️ ❤️ 🧡
 
#நீயே_நீயென்று_என்_கனா_விமர்சனம்

அபய் அதிரூபன் கிரிக்கெட்டில் சாதிக்கனும்னு கனவோட தன் உறவுகளையும் ஊரையும் விட்டு வந்துட்டாங்க.

கனவை நோக்கின பயணம் அவ்வளவு இலகுவாக இருந்துட்டா அப்பறம் என்ன சுவாரஸ்யம் இருக்கும் கதையிலையும் சரி வாழ்க்கையிலும் சரி . கனவு பயணத்தில் காலம் தந்த பெரிய அடியை வலியை கடக்க முடியாம போராடும் அபய்க்கு எல்லாமுமா வருகிறாள் ஆராதியா ❤ அபயின் கனவு ஆராதியாவின் வழியில் நிஜமானதா? அப்படி என்ன வலி அவனுக்கு? பிரிந்த உறவுகள் எல்லாம் ஒன்றினணந்தார்களா? என்பதே கதை ❤

வேங்கடம் , அபய் ஆராதியாவின் தாத்தா அவர் படிப்பிற்கு முக்கியதுவம் தருபவர். அவரால் அபயின் கிரிக்கெட் மீதான கனவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்கான காரணம் சற்றும் நான் எதிர்ப்பார்க்காதது 😲😲 அவரின் நிலையில் இருந்து அவர் சொல்வதும் சரி தானேனு தோனுது ஆனாலும் பொசுக்கு பொசுக்குனு
அடிக்கறது தான் பிடிக்கல 😰😰

நெப்போலியன் ❤ அபய் அப்பா மகன் பாசம் வேற லெவல்னா. வேங்கடம் ❤ நெப்போலியன் அப்பா மகன் பாசம் அது அதுக்கும் மேல 😍😍

கூட்டு குடும்பமா அனைவரையும் பார்க்க அழகா இருக்கு ❤ எல்லாரும் மீசை மேல வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் பயமும் அருமை ❤

ஆரா சரியான அராத்து 😍😍 she stole my heart ❤ ஆராவின் பேச்சு 🤣🤣🤣அருமை, தியா பிரகாஷ் நட்பு, மீசைகான பயம், அவளின் அவனவனுக்கான காதலும் கனவும்❤, அதை வார்த்தைகளில் சொன்னது, நாட்டுக்காக விளையாண்ட அந்த தருணம் இப்படி எல்லாமே ரொம்ப பிடித்தது 💙🤍
இவளின் மொத்த உலகமும் அபய்யால் இயங்குது ❤❤❤ பொருத்தமான வசனம் 👏👏

அபய் காதல் வந்தா போய் காதலிகிட்ட சொல்லனும் இவன் அம்மா அப்பாகிட்ட சொல்லுறான் 😅 ஆனால் அந்த தருணங்கள் எல்லாம் செம க்யூட்🥰🥰 மீசைகிட்ட பேசி அவருக்கு அவருடைய தப்பை உணர்த்துனப்போ மனசுல உட்காந்துட்டாரு இந்த வாத்தி, வாத்தியா கோச்சா மகனா எல்லாமே அருமை ❤ எப்போ கல்யாணம் பண்ணிக்க கேட்டாலும் "இப்போ சொல்லனும்னு தோணல "😜 எப்பவும் இந்த வசனத்தை நான் மறக்க மாட்டேன்.

அவ்வளோ காதல் ஆரா மேல ❤ அந்த காதலும் அவளின் கனவும் தான் நின்னுப்போன அவன் உலகத்தை இயங்க வச்சிருக்கு, வலிகளை கடக்க வெச்சிருக்கு ஆனால் அவனால எப்படி அதை வெளிப்படுத்தாம இருக்க முடிஞ்சுதுனு இன்னும் பிரம்மிப்பா இருக்கு ❤
இப்படி அவன் காதலை உள்ளையே அடைக்கி வைச்சு பாரம் தாங்காமல் ஒருநாள் அவன் அதை பெரிசா வெளிப்படுத்துவானு நான் எதிர்ப்பார்த்தேன் ஆனால் நான் நினைச்ச மாதிரி அது நடக்கல அது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் 😞


அபய் ஆரா திருமண நிகழ்வு எல்லாமே அழகு முக்கியமா அபய் கேட்ட பெர்பிஷனும் அவளின் பதிலும் 😍

மூன்று முடிச்சு போடும் போதும் அவனின் உறுதிமொழியும் அருமை 👏👏

விளையாட்டு சார்ந்த படம் பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் உணர்வுகளை கதை மூலமாகவும் அழகா கடத்தீட்டீங்க ❤

அவளவனுக்கான அவளின் கனவும்
அவனவளுக்கான அவனின் கனவும்
பல தடைகளையும் வலிகளையும் கடந்து
நினைவானது போல்
போட்டியில் வெற்றி காணும் உங்கள் கனவும் நினைவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍
 
நீயே நீயென்று என் கனா

அழகான கூட்டு குடும்பம். அதுல ஒரு அங்கம் நெப்போலியன் அவரோட ஆசை கனவு கிரிக்கெட் அதுல தோல்வி அடையுறாரு. அதுல அவரோட படிப்பை தொலைச்சு குடிச்சு ரொம்பவே விரக்தி அடையுறாரு.

அதுல இருந்து அவரோட அப்பா வேங்கடம் வெளிய கொண்டு வராரு. அதுனால அவருக்கு கிரிக்கெட் மேல அவ்வளவு வெறுப்பு கோபம் யாரையும் விளையாட விடவே மாட்டிங்குறாரு.

அவரோட பேரன் அபய் கிரிக்கெட் மேல அவ்வளவு வெறியா இருக்கான். அதுனால நெப்போலியன் அப்பாவை எதிர்த்து வெளிய போய் விளையாட வைக்குறாரு.அபி கிரிக்கெட்ல ஜெய்ச்சானானு கதையில் பார்க்கலாம்.

நம்ம ஹீரோயின் ஆராத்யா அபயோட அத்தை பொண்ணு வேங்கடம் குடும்பத்துல இருந்து கிரிக்கெட் போராடுறா. ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால அபயால விளையாட முடியல. ஆரா அபய் கனவை நிறைவேற்ற அவ கிரிக்கெட் விளையாட போராடுறா. அபய் கூட சேர்த்து ஆரா அவங்க கனவை எப்படி நிறைவேற்றுறாங்கனு அழகா சொல்லி இருக்காங்க. 🫶🫶🫶

ஆரா மீசை கூட போராடுறது. எல்லாரையும் வம்பு இழுக்குறது அபய்காக உருகுறதுனு நச்சுனு மனசுல நின்னுட்டா.

அபய் ஆசை பட்ட கிரிக்கெட் விளையாட முடியாமல் போராடுறது ஆராகாக திரும்ப கிரிக்கெட்குள்ள வரது அவ்வளவு அழகா காட்டி இருக்கீங்க.

அபய் ஆரா லவ் அவ்வளவு சூப்பரா ரசிக்கும் படியா இருந்துச்சு.
ஸ்டோரி புல்லா கிரிக்கெட் பத்தி தான் அதை அவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க ரைட்டரே 👌👌👌
கடைசி பைனல் மேட்ச் நடக்குறது படிக்கும் போது லைவ்வா பீல் பண்ண முடிஞ்சுது.
வேங்கடம் பேமிலியோட போய் மேட்ச் பார்க்குறது சூப்பரா இருந்துச்சு.

ஸ்டோரி நல்லா படிக்க விறு விறுப்பா அருமையா இருந்துச்சு.
வாழ்த்துக்கள் 💐💐💐
 
நீயே நீயென்று என் கனா

இது முழுக்க முழுக்க கிரிக்கெட் பத்தின கதை!!

கிரிக்கெட்டில் சாதிக்கனும்னு நினைக்கிற நாயகன் அபய் அதிரூபன் கனவினை வெல்லும் நேரம் அவனது கனவு வலியாகிப்போனது..😒 வலி நிறைந்த கனவை நிறைவேற்ற அவனுக்காகவே வரும் அவனது அத்தை மகள் ஆராதனா ❤️ இருவரின் கனவும் ஒன்றாகிப்போனதில் கனவினை வென்று அவன் வலி நீக்கினாளா அவனது ஆரா? இருவரின் கனவும் காதலின் விடை இக்கதையில்....!!

நாயகன் அபய் அதிரூபன் .. கிரிக்கெட்டில் சாதிக்கனும்னு நினைக்கிறான்..அவனுக்கு எப்போதும் சப்போர்ட்டா இருக்கிற‌ அவனுடைய அப்பா- அம்மா நெப்போலியன் - ஜானகி ..இலட்சியத்தை நோக்கிய பயணம் கடினமானதுதான் ..அதை கடக்க சில வலிகளை தாங்கிதான் வேண்டும்.. அப்படி தன்னுடைய சொந்தங்களை விட்டு தன்னுடைய பையனுக்காக வந்து இருக்காங்க நெப்போலியன் ஜானகி..! ரொம்ப நல்ல அருமையான அப்பா அம்மா ❣️... இலட்சியத்தை நெருங்கும் நேரம் சிறு தவறினால் மிஸ் ஆகி விட , காலம் தரும் மிகப்பெரிய அடி இனி வாழ்நாளில் கிரிக்கெட் விளையாட முடியாது சூழல்.‌.காலத்தின் வலியுடன் நாயகனின் உணர்வு போராட்டம் படிக்கும் நமக்கு சோகமாகிப்போனது.அபய் ஆரா காதலும் அருமை 😒😒 இறுதியில் ஆராவின் வெற்றி அபய்யின் கனவு நம்மலே ஜெயிச்ச மாதிரி இருந்துச்சு!!!

வேங்கடம் குடும்பத்தின் மூத்தவர் .கிரிக்கெட்டின் மேல் வெறுப்பு உள்ள தாத்தா ..அபய்யின் கிரிக்கெட் கனவினை தகர்க்க முயலும் தாத்தா ..மகனின் கனவிற்காக தன்னோட அப்பாவையே விட்டு விலகும் மகன் நெப்போலியன்.. இவர்களின் பாசப்போராட்டம்லாம் படிக்க அவ்ளோ அழகா இருக்கு..தன்னோட மகன் நெப்போலியன் வாழ்க்கை கிரிக்கெட்டால் பாழாகிடுச்சுனு நினைக்கிறாரு மீசை வேங்கடம்..இதனால் கிரிக்கெட் மேல வெறுப்பு ஏற்படுது..தன் மகன் மாதிரி பேரன் ஆகிடகூடாதுனு நினைச்சாரு மனுசன்..ஆனா அந்த ஃப்ளாஷ்பேக் சீன்ல கோவமும் வருது அபய் அடிக்கற டைம்ல.. அதேநேரம் அவருடைய பக்கமிருக்கும் நியாயமும் புரியுது.அவர் பெற்ற வலியினால் இந்த கோபம்னு புரியுது..!!

ஆராதனா - அபய்யின் அத்தை பொண்ணு.. சரியான அராத்து.. வேங்கடத்துக்கு தெரியாம இவ மட்டும்தான் அவளுடைய குடும்பத்துல கிரிக்கெட் விளையாடுறா ..அதுக்கு காரணம் அவளுடைய மாமன் மகன் அபய்..இவளோட எல்லா சீன்ஸும் செம்ம 👍👍 அபய்யின்மேல் இவள் கொண்ட நேசமாகட்டும்..அபய்யின் கனவினை தன்கனவாகக்கொண்டு அதை நிறைவேற்ற போராடியதாகட்டும் அத்தனையும் மெய்சிலிர்க்க‌வைச்சது... கிரிக்கெட் மேல வெறுப்பா இருக்க குடும்பத்துல இருந்து இவ எப்படி தன் கனவினை நனைவாக்க போராடுறா எப்படி நனவாக்குறான்றத ஆசிரியர்சொல்லிய விதம் அருமை! பிரகாஷ் கூட இவ பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா😂அதே டைம் அபய் கிட்ட எப்போ எனக்கு ஓகே சொல்லுவன்னு கேக்குறதும்.
அதுக்கு அபய் இப்ப தோணலன்னு சொல்றதுலாம் செம்மயா இருந்தது..😉

தன்னால முடிறாதுன்ற விசயத்தை கூட அபய் ஆராவுக்காக மாத்திக்க முயற்சி செஞ்ச விதம், மனசு புல்லா லவ்வ வச்சுகிட்டு எங்க சொன்னா அவளுடைய கனவுல மிஸ் ஆகிடுவாலோனு அதை சொல்லாம மறைத்து வச்ச விதம்., அவளுக்காக தன்னோட தாத்தாகிட்ட ஆராவுக்காக பேசி அவருடையகிரிக்கெட் பத்தின தப்பான எண்ணத்தையும் போக்கிய விதமாகட்டும் எல்லாமே செம்ம சூப்பரா சொல்லிருக்காங்க..👍

நெப்போலியன் ஒரு நல்ல தந்தை..தன் பையனோட கனவுக்காக தன்னோட சொந்தத்தையே வேண்டாம்னு வந்துட்டாங்க..தந்தை மகன் பிணைப்பு படிக்க ரொம்ப அருமையா இருந்தது..!! குடும்பங்களின் பாசப்பிணைப்பு அருமை!

வேங்கடத்துக்கு மீசைனு வச்ச செல்ல பேரும் சூப்பர் பா!
கதை எங்கேயுமே தொய்வா போகவே இல்ல..ரொம்ப விறுவிறுப்பாக போச்சு..ஃபைனல் மேட்ச் படிக்கும்போது உண்மையாகவே மேட்ச் பார்த்த பீல் வந்துச்சு..அவ்வளவு அருமையா கதைய சொல்லிருக்காங்க ..ஒரு கிரிக்கெட் ரசிகரான எனக்கு இந்த கதை ரொம்பவே பிடிச்சது..!! ❣️

கதையின் கவிதைகளும் அருமையா இருந்தது..

அபய்யின் வலி எப்போதுமே மறக்கமுடியாது...ஆனால் தன்னவனுக்காக அவனின் கனவினை நனவாக்கிய ஆராவுக்கு அவன்தான் என்றும் அவளின் கனா !!!

இருவரின் கனவும் ஒன்றாய் நிறைவேறிய காதலின் கனவுப் பயணத்தில் ஆராவும் அபய்யும் வெற்றி பெற ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
 
Top