திரை 1
நள்ளிரவு வேளை, கடற்கரை ஓரம், இடையில் கருப்பு நிற ஜீன்ஸ் மட்டும் அணிந்திருந்தவனின் கட்டுடல் செதுக்கிய தசைக்கோலங்களுடன் காட்சியளிக்க நீருக்குள்ளிருந்து எழுந்து நின்றான் அவன்.
கடல் நீர் அவன் தேக்கு தேகத்தில் வழுக்கி கொண்டு இறங்க மீந்திருந்த நீர் துளிகள் வைரமென மின்னி அழகன் அவன் கட்டுடலை மேலும் வசிகரமாக்கிக்கொண்டிருந்தன. ஈரக்கேசத்தை கரங்களால் பின்னால் கோதிவிட்டவனின் விழிகளில் வக்ரமும் வன்மமும் நிறைந்திருக்க அவை இரையை தேடும் வேங்கையாய் அலைப்பாய்ந்தன.
அவன் கரங்களில் பெண்ணொருத்தியின் துப்பட்டா சிக்கியிருக்க நீருக்குள் அவளை தான் துரத்திக்கொண்டிருந்தான் அவன். அவனிடமிருந்து தப்பி ஓடிய பெண்ணவள் ஒரு கட்டத்தில் அவன் கையில் சிக்கிக்கொள்ள அவளை பின்னிருந்து இழுத்து அணைத்திருந்தான்.
அவனிடமிருந்து விடுபட போராடியவள் திமிறியதில் இருவரும் மீண்டும் நீருக்குள் விழுந்துவிட நீருக்கடியில் அவளுடன் உருண்டு பிரண்டு சமாளித்துக்கொண்டு மேலெழுந்தவனின் கையில் சிக்கிய அவளின் ஆடையை ஆக்ரோஷமாக பற்றி இழுத்திருந்தான்.
அவன் இழுத்த இழுப்பில் அவள் அணிந்திருந்த பருத்தி ஆடை பாதி கிழிந்து அவன் கையோடு வந்திருந்தது. பாவம், ஏற்கனவே அவனின் அடாவடியில் பயந்திருந்த பெண்ணவளுக்கு அவனின் இச்செய்கையில் இருதயமே நின்றுவிட்டது.
முயன்று வரவழைத்த குரலில் "ப்ளீஸ் என்னை, விட்டுடு. என்னை ஒன்னும் பண்ணிடாத" என்று கையால் முடிந்த மட்டும் தன்னை மறைத்துக்கொண்டாள்.
நீருக்குள் நடப்பது கால்களில் பாரமேற்றியிருக்க வடிந்துவிட்ட சக்தியில் மிச்சமிருந்ததை திரட்டி அவனிடமிருந்து ஒவ்வொரு அடியாக பின்னால் வைத்து விலகி போக முயன்றவள் " என் வாழ்க்கையை கெடுத்திடாத ப்ளீஸ். எனக்கு நாளைக்கு கல்யாணம்" என்று கெஞ்சினாள்.
கண்களில் கண்ணீர் வழிய அவள் மன்றாடியதை பார்த்திருந்தால் அந்தப் பேயும் கூட இறங்கியிருக்கும். ஆனால், அரக்கன் அவனுக்கு துளியும் கருணையில்லை.
அவளை பார்த்து ஏளன புன்னகை ஒன்று சிந்தியவன் "இதை எல்லாம் உன் அண்ணன் என் விஷயத்துல தலையிடுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்" என்றபடி அவளின் முடியை கொத்தாக பற்றியிழுத்தவன் அவள் இதழ்களை குறிவைத்திருந்தான்.
ஆக்ரோஷமாக அவளின் இதழ்களை தீண்ட அவன் சென்றநேரம் "கட்"' என்ற குரல்.
குரல் கேட்ட அடுத்த நொடி அவன் விலகப் பார்க்க அந்த பெண் அவனை விட்டால் தானே. அவள் கரங்கள் அவன் மேனியில் மெல்ல ஊர்ந்து அவன் திண்ணிய மார்பில் படர்ந்தன. விழிகள் இரண்டையும் மூடி அவனது இதழ் தீண்டலை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
அவளின் உடல்மொழி மாற்றத்தை கண்டு சலிப்பாக தலையை ஆட்டிகொண்டவனின் இதழ்களில் ஏளன புன்னகை ஒன்று தோன்ற "கட் சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு" என்றான்.
"தெரியும். ஆனால், இந்த சான்ஸ் எல்லாம் மறுபடியும் கிடைக்காது" என்றாள் விழிகளை திறக்காமல் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அவளை அலட்சியமாக பார்த்தவன் "கெட் லாஸ்ட்" என்று சொல்லிவிட்டு நகர போக அவளின் பிடி மேலும் இறுகியது. விழிகளை திறந்து அவனை பார்த்தாள். அவள் பார்வையில் ஒரு ஆணவம்.
"இன்டாஸ்ட்ரியில் நம்பர் ஒன் ஹீரோயின் சார் நான். என் கைக்கு முத்தம் கொடுக்கவே நீ நான்னு போட்டி போடுறாங்க. பட், நான் உங்களுக்கு லிப்லாக் பண்ணேவே ரெடியா இருக்கேன். கசக்குதா என்ன?" என்றாள்.
அவள் பேச்சில் அழுத்தமிருந்தாலும் குரல் மெதுவாக தான் ஒலித்தது. அடுத்தவர் காதில் விழுந்தால் அவள் அல்லவா அடுத்தப்பேச்சு பொருளாகிவிடுவாள். நாட்டில் முக்கியமான செய்திகளை விட பிரபலங்களின் கிசுகிசுக்கள் தானே நல்ல விலை போகின்றன.
''அடிச்சு பல்ல கில்ல பேத்துட போறேன். தள்ளிப் போடி" என்று அவனும் அவள் நலன் கருதி அடுத்தவர் காதில் விழாமல் சிரித்தபடியே சொல்ல "என்ன சார் இமேஜ் போயிடும்ன்னு பயப்படுறீங்களா? சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு பீல் பண்ணாதீங்க சார். அப்டர் ஆல் வில்லன் தானே நீங்க" என்றாள் நக்கலாக.
அவள் பேச்சு அவனின் ஈகோவை அசைத்துப்பார்த்திருக்க அவனின் விழியில் கூர்மை கூடிய நேரம் "கட்...கட்..." என்று மீண்டும் கத்தியிருந்தான் அந்த படத்தின் இயக்குனர் தேவ்.
அவன் கத்தியதை காதிலேயே வாங்காமல் அவர்கள் இருவரும் அசையாமல் அப்படியே நின்றிருக்க கடுப்பானவனோ "இங்க படமெடுக்க வந்ததுக்கு என்னைத்தான் செருப்பால அடிச்சிக்கணும். என்ன கன்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து" என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி தன்னை சுற்றி பார்க்க அங்கிருந்த மற்றவர்களும் வாயில் எச்சிலொழுக அவ்விருவரையும் தான் பார்த்துக்கொண்டிருந்தனர். அவனின் துணை இயக்குனர்கள் உட்பட.
அவர்களை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்த தேவ் "டேய் என்னடா அங்க...கட் சொல்லி இவ்வளவு நேரமாச்சு இன்னும் அப்படியே நிக்குறாங்க போய் என்னனு பார்த்து தோலை" என்று கையிலிருந்த மைக்கை அருகே நின்றிருந்த துணை இயக்குனரின் மீது வீசி எறிந்திருந்தான்.
அவன் அவர்களை நோக்கி ஓட மற்றொருவனோ "அதுக்கு தான் இவரை வில்லனா போடாதீங்கன்னு அப்போவே சொன்னேன் சார். இப்போ பாருங்க ஹீரோயின் அவர் மேல பசை போட்ட போல ஓட்டிட்டு நிக்குது" என்றான்.
அவனை முறைத்து பார்த்த தேவ் " இந்த ரோமென்ஸை எல்லாம் அந்தம்மாவை ஹீரோ கூட பண்ண சொல்லு மேன். ஹீரோ கூட சீன் வச்சா கெமிஸ்ட்ரி வரலன்னாலும் பரவால்ல பயலாஜி, பிஸிக்ஸுன்னு ஒரு எழவும் வர மாட்டேங்குது. இங்க மட்டும் ரொமென்ஸா கொட்டுது. இந்த லட்சணத்துல இந்தம்மா தான் பெஸ்ட் ஹீரோயின் ஒஃப் தி இயர் ஆம். எல்லாம் என் கெரகம்" என்று நொந்துக்கொண்டான்.
"ம்..கூம்..அந்த பொண்ணை குத்தம் சொல்லி என்ன இருக்கு. அவர் ஹீரோவை விட சூப்பரா இருக்காரே. நானா இருந்தா கூட அவரை பார்த்து தான் ஜொள்ளுவேன்" என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து அவன் சத்தமாகவே புலம்பிக்கொள்ள "அடிச்சுக்கொல்ல போறேன் பாரு உன்னை" என்று முறைத்தான் தேவ்.
'ஆத்தாடி, மைண்டு வாய்சுன்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமோ.இனி வச்சு செய்வானே' என்று விழிகளை பிதுக்கி தனக்குள் நொந்துகொண்டு அந்த துணை இயக்குனன் ‘’ஏன் சார் நாம ஏன் இவரையே ஹீரோவா போடக்கூடாது" என்று சமாளிக்க முயன்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ''அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை" என்று ஒரு குரல் கேட்டது.
அதுவேறு யாருமல்ல அவர்கள் இதுவரையில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அந்த வில்லனின் மேனேஜர் தான்.
அவன் பதிலில் அவனை ஒரு சேர திரும்பி பார்த்த இருவரும் "ஏன்?" என்று கோரஸாக கேட்க " அவருக்கு ஹீரோனாலே பிடிக்காது சார். ஹி இஸ் எ வில்லன். ரீல்லையும் சரி ரியல்லையும் சரி" என்க அவர்களின் மூவரின் பார்வையும் இப்போது அந்த வில்லனில் தான் பதிந்தன.
சரியாக அவர்களின் பார்வை அவன் மீது படிந்த அந்நேரம் அவனுடன் ஒட்டிக்கொண்டு நின்ற பெண்ணவளை ஒரே தள்ளாக உதறி தள்ளியிருந்தான் அவன்.
அவன் தள்ளிய வேகத்தில் அவள் மீண்டும் தண்ணீருக்குள் விழுந்திருக்க நீருக்குள் கிடந்த சிற்பி ஒன்று அவள் கையை குத்தி கிழித்திருந்தது.
குருதி வழிய எழுந்து நின்ற பெண்ணவளுக்கு வலியில் உயிர்போக அதில் உப்பு நீர் வேறு காயத்தில் பட்டு எரிச்சல் கொடுத்து இம்சித்ததில் அழுதே விட்டாள்.
"ஆத்தாடி, நிஜமா வில்லன் தான் போல. ஹீரோயின் கையில ரத்தம் வருது சார்…”என்றவன் “மெடிக்..." என்று அவள் காயத்திற்கு மருந்திடுவதற்காக ஆட்களை அழைக்க "ஷட் அப் மேன்” என்று அவனை தடுத்திருந்தான் தேவ்.
“ரோல் கேமரா. இது ரியலா இருக்கு. அப்படியே ஷூட் பண்ணிடு, யூஸாகும். டயலாக்ஸ் எல்லாம் டப்பிங்ல பார்த்துக்கலாம்" என்றபடி எழுந்து சென்றுவிட்டான்.
அந்த படத்தின் இயக்குனர் அவனுக்கு அவனின் காரியம் முக்கியம் என்றதில் அவன் சொல்லியபடி அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தவைகளை படமாக்க தொடங்கியிருந்தனர் அந்த படக் குழுவினர்.
வலி பொறுக்காமல் அழுதுகொண்டு நின்ற பெண்ணவளுக்கு எல்லோரும் பார்க்க அவன் அவளை உதறி தள்ளியது அவமானமாகிவிட "ஹேய், ஒரு பொண்ண எப்படி ஹாண்டில் பண்ணனும்னு கூட தெரியாதா? இப்படி தான் காட்டுமிராண்டி போல நடந்துபியா. என்னவோ முன்ன பின்ன பொண்ணுங்களை கிஸ் பண்ணதே இல்லாத உத்தமன் மாதிரி சீன் போடுற" என்று இருக்கும் இடம் மறந்து கத்தியிருந்தாள்.
அவள் சினத்தில் சுற்றம் மறந்தாலும் அவன் மறக்கவில்லை. மிகவும் அமைதியாக அவளை நெருங்கி நின்றான். மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவன் பார்வையின் கூர்மை தாக்க பயத்தில் ஒரு அடி விலகி நின்றவளை அழுத்தமாக பார்த்தவன் "என் பெட்டுக்கு எந்த பொண்ணு வரணும் வரக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணுவேன். வரேன்னு சொல்லுற எல்லாத்துக்கும் ஓகே சொன்னா உனக்கும் எனக்கும் என்ன வித்யாசம்" என்றான்.
அவனின் பேச்சின் அர்த்தம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருக்க கண்களை அழுந்த மூடித்திறந்துகொண்டாள் அவள்.
"அப்டர் ஆல் வில்லன் தானேன்னு சொன்னால்ல...யூ வில் சீ, மீரா" என்று அவள் நெற்றியின் மீது ஒற்றை விரலை வைத்து அவன் தள்ளியிருக்க தடுமாறிய பெண்ணவள் மீண்டும் பொத்தென்று நீருக்குள்ளேயே விழுந்திருந்தாள்.
சுற்றியிருந்தவர்களுக்கு மீரா கத்தியதிலேயே அங்கு நடந்துக்கொண்டிருந்தது குத்து மதிப்பாக புரிந்துவிட அனைவரின் இதழ்களிலும் கேலி புன்னகை.
தன்னை சுற்றி பார்த்த பெண்ணவளுக்கு அவமானமாகிவிட "யூ இடியட்" என்று கத்தியபடி நீரின் பரப்பில் கையால் ஓங்கி அடித்திருந்தாள். அதில் அந்தக் கடல் நீர் மீண்டும் அவள் முகத்திலேயே தெறித்தது தான் மிச்சம்.
அவளை பார்த்து சலிப்பாக தலையாட்டிக்கொண்டே அவன் கடலுக்குள்ளிருந்து வெளியில் வர அவனுக்கு துவட்டுவதற்கு துண்டுடன் ஓடி வந்தான் அவனின் அசிஸ்டென்ட்.
ஒற்றை கையை நீட்டி அவனிடமிருந்து துண்டை வாங்கியவன் தலையை துவட்டிக்கொண்டே நடக்க அவன் சாதாரணமாக நடந்து சென்றதே பார்ப்போர் கண்ணுக்கு வெகு தோரணையாக தான் தெரிந்தது. குறிப்பாக அங்கிருந்த மற்ற பெண்களின் பார்வை அவன் மீது ரசனையாக படிந்தது.
அதில் மேக் அப் போடும் பெண்ணொருத்தியோ "வாட் எ மேன்" என்று பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ள "தூரத்திலிருந்து பாக்குறதோட நிறுத்திக்கோ. பக்கத்துல போயிடாத அப்புறம் பார்வையாலேயே எரிச்சிடுவார்" என்றாள் இன்னொருத்தி.
"என்னடி அவரை பத்தி என்னென்னவோ ரூமெர்ஸ் எல்லாம் கேள்வி பட்டேன். அதுல சிலது என்னவோ அவர் பொம்பளை பொருக்கி ரேஞ்சுக்கு இருந்துச்சு. நீங்க என்னவோ அவரை மகாத்மா ரேஞ்சுக்கு பேசுறீங்க" என்றாள் அந்த கூட்டத்திலிருந்த இன்னொரு பெண்.
"அது என்னவோ உண்மை தான். ஆனால், பொண்ணுங்களே வான்டெட்டா போய் அவரை அப்ரோச் பண்ணாலும் வந்த வரை லாபமுன்னு எடுக்குற ஆள் இல்லையாம். அவரா நினைச்சா மட்டும் தான் மத்த மேட்டர் எல்லாம். ஆனால், நினைச்சிட்டா கிடைக்குற வரைக்கும் விட மாட்டாராம்" என்றாள் முந்தையவள்.
"ஆத்தி, ரொம்ப ஆபத்தானவர் போல" என்று ஒருத்தி சொல்ல "பின்ன வில்லன்னா சும்மாவா" என்று அவர்களுக்குள்ளாக பேசிச் சிரித்துக்கொண்டனர்.
அவர்கள் பேசியது அவன் காதில் விழுந்ததில் அவன் இதற்கடையில் மர்ம புன்னகை ஒன்று தோன்ற எதையும் கண்டுகொள்ளாமல் அவன் கேரவேனிற்குள் சென்று கதைவடைத்துக்கொண்டான்.
அவன் அமர், அமரன்.
தற்பொழுது சினிமா துறையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வில்லன் அவன் . அவனின் ஆறடி உயரமும், அசாத்திய நடிப்பும், அசாதாரண திறமையும் அவனை மற்ற நடிகர்களுக்கு மத்தியில் தனித்து நிறுத்தியிருந்தது என்றால் அவனின் ஆளுமையும் தோரணையும் அழகும் கதாநாயர்களை விட அதிகம் விரும்பக் கூடிய வில்லனாக உருமாற்றியிருந்தது. இப்பொழுது நடிக்கும் முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லன் என்றால் அது அவன் தான்.
ஆனால், தொழில் வட்டாரத்தில் அவன் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி தான் என்று பேச்சு. அதற்கு ஏற்றாற்போல் அவனை பற்றி வாரம் ஒரு கிசுகிசு வருவது வெகு இயல்பான ஒன்று. ஆனால், எதுவும் நல்ல செய்தி கிடையாது. பெரும்பாலும் மூர்க்கன், பெண் பித்தன், திமிர் பிடித்தவன் என்று வெவ்வேறு தலைப்புகளில் பல செய்திகள்.
அவனும் அப்படி தான். அதிக கோபம் வரும். யாருக்கும் பணிந்து போக மாட்டான். யார் என்ன என்றும் பார்க்க மாட்டான். பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அறைந்தார் போல் நடந்துக்கொள்வான். அப்படி பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் அவனுக்கு தகராறும் நடந்திருக்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவனின் பங்களாவிற்கு நடிகைகள் முதல் மாடல்கள் உட்பட பல பெண்களின் விஜயமிருப்பதாக சில பத்திரிகையாளர்கள் புகைப்படத்துடன் வெளியிட்ட பரபரப்பான செய்திகளும் ஏராளம். அதில் சில பெண்கள் பதினெட்டு வயதிற்கும் குறைவானவர்கள் என்னும் வதந்தியும் உண்டு.
இவை எல்லாமும் தாண்டி அவன் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் வேலை என்று வந்துவிட்டால் அவனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரே டேக்கில் காட்சிகளை கச்சிதமாய் நடித்துக்கொடுக்க கூடிய வல்லவன். அதோடு அவன் திறமைக்கும், நடிப்பிற்கும், அழகிற்கும் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். சினிமா துறையினை சார்ந்த சிலரிடம் அவன் காட்டும் இந்த கோப முகம் அவனது ரசிகர்களிடம் ஒரு போதும் வெளிப்பட்டதேயில்லை. ரசிகர்களை பொறுத்த மட்டில் அவன் அவர்கள் மனதை கவர்ந்த கள்வன் தான்.
இப்போதும் கூட பாலிவுட் படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததில் நாளை அங்கே ஷூட்டிங் இருக்க இன்று அவன் மும்பைக்கு பயணப்படயிருந்தான். இன்றைய திகதியில் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் வில்லனாயிற்றே அவன்.
ஈர உடையை மாற்றி அவன் வெளியே வந்த நேரம் அவனின் கார் தயாராக இருந்தது. அதில் ஏறிக்கொண்டவன் இருக்கையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொள்ள அவனின் காரும் புறப்பட்டது.
நள்ளிரவு வேளை, கடற்கரை ஓரம், இடையில் கருப்பு நிற ஜீன்ஸ் மட்டும் அணிந்திருந்தவனின் கட்டுடல் செதுக்கிய தசைக்கோலங்களுடன் காட்சியளிக்க நீருக்குள்ளிருந்து எழுந்து நின்றான் அவன்.
கடல் நீர் அவன் தேக்கு தேகத்தில் வழுக்கி கொண்டு இறங்க மீந்திருந்த நீர் துளிகள் வைரமென மின்னி அழகன் அவன் கட்டுடலை மேலும் வசிகரமாக்கிக்கொண்டிருந்தன. ஈரக்கேசத்தை கரங்களால் பின்னால் கோதிவிட்டவனின் விழிகளில் வக்ரமும் வன்மமும் நிறைந்திருக்க அவை இரையை தேடும் வேங்கையாய் அலைப்பாய்ந்தன.
அவன் கரங்களில் பெண்ணொருத்தியின் துப்பட்டா சிக்கியிருக்க நீருக்குள் அவளை தான் துரத்திக்கொண்டிருந்தான் அவன். அவனிடமிருந்து தப்பி ஓடிய பெண்ணவள் ஒரு கட்டத்தில் அவன் கையில் சிக்கிக்கொள்ள அவளை பின்னிருந்து இழுத்து அணைத்திருந்தான்.
அவனிடமிருந்து விடுபட போராடியவள் திமிறியதில் இருவரும் மீண்டும் நீருக்குள் விழுந்துவிட நீருக்கடியில் அவளுடன் உருண்டு பிரண்டு சமாளித்துக்கொண்டு மேலெழுந்தவனின் கையில் சிக்கிய அவளின் ஆடையை ஆக்ரோஷமாக பற்றி இழுத்திருந்தான்.
அவன் இழுத்த இழுப்பில் அவள் அணிந்திருந்த பருத்தி ஆடை பாதி கிழிந்து அவன் கையோடு வந்திருந்தது. பாவம், ஏற்கனவே அவனின் அடாவடியில் பயந்திருந்த பெண்ணவளுக்கு அவனின் இச்செய்கையில் இருதயமே நின்றுவிட்டது.
முயன்று வரவழைத்த குரலில் "ப்ளீஸ் என்னை, விட்டுடு. என்னை ஒன்னும் பண்ணிடாத" என்று கையால் முடிந்த மட்டும் தன்னை மறைத்துக்கொண்டாள்.
நீருக்குள் நடப்பது கால்களில் பாரமேற்றியிருக்க வடிந்துவிட்ட சக்தியில் மிச்சமிருந்ததை திரட்டி அவனிடமிருந்து ஒவ்வொரு அடியாக பின்னால் வைத்து விலகி போக முயன்றவள் " என் வாழ்க்கையை கெடுத்திடாத ப்ளீஸ். எனக்கு நாளைக்கு கல்யாணம்" என்று கெஞ்சினாள்.
கண்களில் கண்ணீர் வழிய அவள் மன்றாடியதை பார்த்திருந்தால் அந்தப் பேயும் கூட இறங்கியிருக்கும். ஆனால், அரக்கன் அவனுக்கு துளியும் கருணையில்லை.
அவளை பார்த்து ஏளன புன்னகை ஒன்று சிந்தியவன் "இதை எல்லாம் உன் அண்ணன் என் விஷயத்துல தலையிடுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்" என்றபடி அவளின் முடியை கொத்தாக பற்றியிழுத்தவன் அவள் இதழ்களை குறிவைத்திருந்தான்.
ஆக்ரோஷமாக அவளின் இதழ்களை தீண்ட அவன் சென்றநேரம் "கட்"' என்ற குரல்.
குரல் கேட்ட அடுத்த நொடி அவன் விலகப் பார்க்க அந்த பெண் அவனை விட்டால் தானே. அவள் கரங்கள் அவன் மேனியில் மெல்ல ஊர்ந்து அவன் திண்ணிய மார்பில் படர்ந்தன. விழிகள் இரண்டையும் மூடி அவனது இதழ் தீண்டலை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
அவளின் உடல்மொழி மாற்றத்தை கண்டு சலிப்பாக தலையை ஆட்டிகொண்டவனின் இதழ்களில் ஏளன புன்னகை ஒன்று தோன்ற "கட் சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு" என்றான்.
"தெரியும். ஆனால், இந்த சான்ஸ் எல்லாம் மறுபடியும் கிடைக்காது" என்றாள் விழிகளை திறக்காமல் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அவளை அலட்சியமாக பார்த்தவன் "கெட் லாஸ்ட்" என்று சொல்லிவிட்டு நகர போக அவளின் பிடி மேலும் இறுகியது. விழிகளை திறந்து அவனை பார்த்தாள். அவள் பார்வையில் ஒரு ஆணவம்.
"இன்டாஸ்ட்ரியில் நம்பர் ஒன் ஹீரோயின் சார் நான். என் கைக்கு முத்தம் கொடுக்கவே நீ நான்னு போட்டி போடுறாங்க. பட், நான் உங்களுக்கு லிப்லாக் பண்ணேவே ரெடியா இருக்கேன். கசக்குதா என்ன?" என்றாள்.
அவள் பேச்சில் அழுத்தமிருந்தாலும் குரல் மெதுவாக தான் ஒலித்தது. அடுத்தவர் காதில் விழுந்தால் அவள் அல்லவா அடுத்தப்பேச்சு பொருளாகிவிடுவாள். நாட்டில் முக்கியமான செய்திகளை விட பிரபலங்களின் கிசுகிசுக்கள் தானே நல்ல விலை போகின்றன.
''அடிச்சு பல்ல கில்ல பேத்துட போறேன். தள்ளிப் போடி" என்று அவனும் அவள் நலன் கருதி அடுத்தவர் காதில் விழாமல் சிரித்தபடியே சொல்ல "என்ன சார் இமேஜ் போயிடும்ன்னு பயப்படுறீங்களா? சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு பீல் பண்ணாதீங்க சார். அப்டர் ஆல் வில்லன் தானே நீங்க" என்றாள் நக்கலாக.
அவள் பேச்சு அவனின் ஈகோவை அசைத்துப்பார்த்திருக்க அவனின் விழியில் கூர்மை கூடிய நேரம் "கட்...கட்..." என்று மீண்டும் கத்தியிருந்தான் அந்த படத்தின் இயக்குனர் தேவ்.
அவன் கத்தியதை காதிலேயே வாங்காமல் அவர்கள் இருவரும் அசையாமல் அப்படியே நின்றிருக்க கடுப்பானவனோ "இங்க படமெடுக்க வந்ததுக்கு என்னைத்தான் செருப்பால அடிச்சிக்கணும். என்ன கன்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து" என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி தன்னை சுற்றி பார்க்க அங்கிருந்த மற்றவர்களும் வாயில் எச்சிலொழுக அவ்விருவரையும் தான் பார்த்துக்கொண்டிருந்தனர். அவனின் துணை இயக்குனர்கள் உட்பட.
அவர்களை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்த தேவ் "டேய் என்னடா அங்க...கட் சொல்லி இவ்வளவு நேரமாச்சு இன்னும் அப்படியே நிக்குறாங்க போய் என்னனு பார்த்து தோலை" என்று கையிலிருந்த மைக்கை அருகே நின்றிருந்த துணை இயக்குனரின் மீது வீசி எறிந்திருந்தான்.
அவன் அவர்களை நோக்கி ஓட மற்றொருவனோ "அதுக்கு தான் இவரை வில்லனா போடாதீங்கன்னு அப்போவே சொன்னேன் சார். இப்போ பாருங்க ஹீரோயின் அவர் மேல பசை போட்ட போல ஓட்டிட்டு நிக்குது" என்றான்.
அவனை முறைத்து பார்த்த தேவ் " இந்த ரோமென்ஸை எல்லாம் அந்தம்மாவை ஹீரோ கூட பண்ண சொல்லு மேன். ஹீரோ கூட சீன் வச்சா கெமிஸ்ட்ரி வரலன்னாலும் பரவால்ல பயலாஜி, பிஸிக்ஸுன்னு ஒரு எழவும் வர மாட்டேங்குது. இங்க மட்டும் ரொமென்ஸா கொட்டுது. இந்த லட்சணத்துல இந்தம்மா தான் பெஸ்ட் ஹீரோயின் ஒஃப் தி இயர் ஆம். எல்லாம் என் கெரகம்" என்று நொந்துக்கொண்டான்.
"ம்..கூம்..அந்த பொண்ணை குத்தம் சொல்லி என்ன இருக்கு. அவர் ஹீரோவை விட சூப்பரா இருக்காரே. நானா இருந்தா கூட அவரை பார்த்து தான் ஜொள்ளுவேன்" என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து அவன் சத்தமாகவே புலம்பிக்கொள்ள "அடிச்சுக்கொல்ல போறேன் பாரு உன்னை" என்று முறைத்தான் தேவ்.
'ஆத்தாடி, மைண்டு வாய்சுன்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமோ.இனி வச்சு செய்வானே' என்று விழிகளை பிதுக்கி தனக்குள் நொந்துகொண்டு அந்த துணை இயக்குனன் ‘’ஏன் சார் நாம ஏன் இவரையே ஹீரோவா போடக்கூடாது" என்று சமாளிக்க முயன்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ''அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை" என்று ஒரு குரல் கேட்டது.
அதுவேறு யாருமல்ல அவர்கள் இதுவரையில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அந்த வில்லனின் மேனேஜர் தான்.
அவன் பதிலில் அவனை ஒரு சேர திரும்பி பார்த்த இருவரும் "ஏன்?" என்று கோரஸாக கேட்க " அவருக்கு ஹீரோனாலே பிடிக்காது சார். ஹி இஸ் எ வில்லன். ரீல்லையும் சரி ரியல்லையும் சரி" என்க அவர்களின் மூவரின் பார்வையும் இப்போது அந்த வில்லனில் தான் பதிந்தன.
சரியாக அவர்களின் பார்வை அவன் மீது படிந்த அந்நேரம் அவனுடன் ஒட்டிக்கொண்டு நின்ற பெண்ணவளை ஒரே தள்ளாக உதறி தள்ளியிருந்தான் அவன்.
அவன் தள்ளிய வேகத்தில் அவள் மீண்டும் தண்ணீருக்குள் விழுந்திருக்க நீருக்குள் கிடந்த சிற்பி ஒன்று அவள் கையை குத்தி கிழித்திருந்தது.
குருதி வழிய எழுந்து நின்ற பெண்ணவளுக்கு வலியில் உயிர்போக அதில் உப்பு நீர் வேறு காயத்தில் பட்டு எரிச்சல் கொடுத்து இம்சித்ததில் அழுதே விட்டாள்.
"ஆத்தாடி, நிஜமா வில்லன் தான் போல. ஹீரோயின் கையில ரத்தம் வருது சார்…”என்றவன் “மெடிக்..." என்று அவள் காயத்திற்கு மருந்திடுவதற்காக ஆட்களை அழைக்க "ஷட் அப் மேன்” என்று அவனை தடுத்திருந்தான் தேவ்.
“ரோல் கேமரா. இது ரியலா இருக்கு. அப்படியே ஷூட் பண்ணிடு, யூஸாகும். டயலாக்ஸ் எல்லாம் டப்பிங்ல பார்த்துக்கலாம்" என்றபடி எழுந்து சென்றுவிட்டான்.
அந்த படத்தின் இயக்குனர் அவனுக்கு அவனின் காரியம் முக்கியம் என்றதில் அவன் சொல்லியபடி அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தவைகளை படமாக்க தொடங்கியிருந்தனர் அந்த படக் குழுவினர்.
வலி பொறுக்காமல் அழுதுகொண்டு நின்ற பெண்ணவளுக்கு எல்லோரும் பார்க்க அவன் அவளை உதறி தள்ளியது அவமானமாகிவிட "ஹேய், ஒரு பொண்ண எப்படி ஹாண்டில் பண்ணனும்னு கூட தெரியாதா? இப்படி தான் காட்டுமிராண்டி போல நடந்துபியா. என்னவோ முன்ன பின்ன பொண்ணுங்களை கிஸ் பண்ணதே இல்லாத உத்தமன் மாதிரி சீன் போடுற" என்று இருக்கும் இடம் மறந்து கத்தியிருந்தாள்.
அவள் சினத்தில் சுற்றம் மறந்தாலும் அவன் மறக்கவில்லை. மிகவும் அமைதியாக அவளை நெருங்கி நின்றான். மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவன் பார்வையின் கூர்மை தாக்க பயத்தில் ஒரு அடி விலகி நின்றவளை அழுத்தமாக பார்த்தவன் "என் பெட்டுக்கு எந்த பொண்ணு வரணும் வரக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணுவேன். வரேன்னு சொல்லுற எல்லாத்துக்கும் ஓகே சொன்னா உனக்கும் எனக்கும் என்ன வித்யாசம்" என்றான்.
அவனின் பேச்சின் அர்த்தம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருக்க கண்களை அழுந்த மூடித்திறந்துகொண்டாள் அவள்.
"அப்டர் ஆல் வில்லன் தானேன்னு சொன்னால்ல...யூ வில் சீ, மீரா" என்று அவள் நெற்றியின் மீது ஒற்றை விரலை வைத்து அவன் தள்ளியிருக்க தடுமாறிய பெண்ணவள் மீண்டும் பொத்தென்று நீருக்குள்ளேயே விழுந்திருந்தாள்.
சுற்றியிருந்தவர்களுக்கு மீரா கத்தியதிலேயே அங்கு நடந்துக்கொண்டிருந்தது குத்து மதிப்பாக புரிந்துவிட அனைவரின் இதழ்களிலும் கேலி புன்னகை.
தன்னை சுற்றி பார்த்த பெண்ணவளுக்கு அவமானமாகிவிட "யூ இடியட்" என்று கத்தியபடி நீரின் பரப்பில் கையால் ஓங்கி அடித்திருந்தாள். அதில் அந்தக் கடல் நீர் மீண்டும் அவள் முகத்திலேயே தெறித்தது தான் மிச்சம்.
அவளை பார்த்து சலிப்பாக தலையாட்டிக்கொண்டே அவன் கடலுக்குள்ளிருந்து வெளியில் வர அவனுக்கு துவட்டுவதற்கு துண்டுடன் ஓடி வந்தான் அவனின் அசிஸ்டென்ட்.
ஒற்றை கையை நீட்டி அவனிடமிருந்து துண்டை வாங்கியவன் தலையை துவட்டிக்கொண்டே நடக்க அவன் சாதாரணமாக நடந்து சென்றதே பார்ப்போர் கண்ணுக்கு வெகு தோரணையாக தான் தெரிந்தது. குறிப்பாக அங்கிருந்த மற்ற பெண்களின் பார்வை அவன் மீது ரசனையாக படிந்தது.
அதில் மேக் அப் போடும் பெண்ணொருத்தியோ "வாட் எ மேன்" என்று பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ள "தூரத்திலிருந்து பாக்குறதோட நிறுத்திக்கோ. பக்கத்துல போயிடாத அப்புறம் பார்வையாலேயே எரிச்சிடுவார்" என்றாள் இன்னொருத்தி.
"என்னடி அவரை பத்தி என்னென்னவோ ரூமெர்ஸ் எல்லாம் கேள்வி பட்டேன். அதுல சிலது என்னவோ அவர் பொம்பளை பொருக்கி ரேஞ்சுக்கு இருந்துச்சு. நீங்க என்னவோ அவரை மகாத்மா ரேஞ்சுக்கு பேசுறீங்க" என்றாள் அந்த கூட்டத்திலிருந்த இன்னொரு பெண்.
"அது என்னவோ உண்மை தான். ஆனால், பொண்ணுங்களே வான்டெட்டா போய் அவரை அப்ரோச் பண்ணாலும் வந்த வரை லாபமுன்னு எடுக்குற ஆள் இல்லையாம். அவரா நினைச்சா மட்டும் தான் மத்த மேட்டர் எல்லாம். ஆனால், நினைச்சிட்டா கிடைக்குற வரைக்கும் விட மாட்டாராம்" என்றாள் முந்தையவள்.
"ஆத்தி, ரொம்ப ஆபத்தானவர் போல" என்று ஒருத்தி சொல்ல "பின்ன வில்லன்னா சும்மாவா" என்று அவர்களுக்குள்ளாக பேசிச் சிரித்துக்கொண்டனர்.
அவர்கள் பேசியது அவன் காதில் விழுந்ததில் அவன் இதற்கடையில் மர்ம புன்னகை ஒன்று தோன்ற எதையும் கண்டுகொள்ளாமல் அவன் கேரவேனிற்குள் சென்று கதைவடைத்துக்கொண்டான்.
அவன் அமர், அமரன்.
தற்பொழுது சினிமா துறையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வில்லன் அவன் . அவனின் ஆறடி உயரமும், அசாத்திய நடிப்பும், அசாதாரண திறமையும் அவனை மற்ற நடிகர்களுக்கு மத்தியில் தனித்து நிறுத்தியிருந்தது என்றால் அவனின் ஆளுமையும் தோரணையும் அழகும் கதாநாயர்களை விட அதிகம் விரும்பக் கூடிய வில்லனாக உருமாற்றியிருந்தது. இப்பொழுது நடிக்கும் முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லன் என்றால் அது அவன் தான்.
ஆனால், தொழில் வட்டாரத்தில் அவன் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி தான் என்று பேச்சு. அதற்கு ஏற்றாற்போல் அவனை பற்றி வாரம் ஒரு கிசுகிசு வருவது வெகு இயல்பான ஒன்று. ஆனால், எதுவும் நல்ல செய்தி கிடையாது. பெரும்பாலும் மூர்க்கன், பெண் பித்தன், திமிர் பிடித்தவன் என்று வெவ்வேறு தலைப்புகளில் பல செய்திகள்.
அவனும் அப்படி தான். அதிக கோபம் வரும். யாருக்கும் பணிந்து போக மாட்டான். யார் என்ன என்றும் பார்க்க மாட்டான். பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அறைந்தார் போல் நடந்துக்கொள்வான். அப்படி பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் அவனுக்கு தகராறும் நடந்திருக்கின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவனின் பங்களாவிற்கு நடிகைகள் முதல் மாடல்கள் உட்பட பல பெண்களின் விஜயமிருப்பதாக சில பத்திரிகையாளர்கள் புகைப்படத்துடன் வெளியிட்ட பரபரப்பான செய்திகளும் ஏராளம். அதில் சில பெண்கள் பதினெட்டு வயதிற்கும் குறைவானவர்கள் என்னும் வதந்தியும் உண்டு.
இவை எல்லாமும் தாண்டி அவன் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் வேலை என்று வந்துவிட்டால் அவனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரே டேக்கில் காட்சிகளை கச்சிதமாய் நடித்துக்கொடுக்க கூடிய வல்லவன். அதோடு அவன் திறமைக்கும், நடிப்பிற்கும், அழகிற்கும் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். சினிமா துறையினை சார்ந்த சிலரிடம் அவன் காட்டும் இந்த கோப முகம் அவனது ரசிகர்களிடம் ஒரு போதும் வெளிப்பட்டதேயில்லை. ரசிகர்களை பொறுத்த மட்டில் அவன் அவர்கள் மனதை கவர்ந்த கள்வன் தான்.
இப்போதும் கூட பாலிவுட் படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததில் நாளை அங்கே ஷூட்டிங் இருக்க இன்று அவன் மும்பைக்கு பயணப்படயிருந்தான். இன்றைய திகதியில் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் வில்லனாயிற்றே அவன்.
ஈர உடையை மாற்றி அவன் வெளியே வந்த நேரம் அவனின் கார் தயாராக இருந்தது. அதில் ஏறிக்கொண்டவன் இருக்கையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொள்ள அவனின் காரும் புறப்பட்டது.
தக் லைஃப்- Thug life கருத்து திரி
அருமை வாசகர்களே உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நான்🥰
aadvikapommunovels.com
Last edited: