ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 1- வாக்கப்பட்டு வந்த வாசமலரே

ஹாய் நண்பர்களே


Pommu Novels அவர்களின் AP Verses contest AVP Writing excellence award போட்டிக் கதைகள்.
அம்மு இளையாள் அவர்கள் எழுதிய "வாக்கப்பட்டு வந்த வாசமலரே"
கந்தன்.. தெய்வானை.. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதலும்,திருமணமுமே கதை.


வீட்டினர் பெண் பார்த்து முடிவாகும் திருமணம். ஆனால் பெண் பார்க்க வந்த அன்றே இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் வீட்டில் பார்த்த அரேஞ்ச்டு மேரேஜ் ஆக இல்லாமல் அவர்களுக்கிடையில் காலம் காலமாக இருந்த காதலால் காதலித்து மணமுடித்தவர்கள் போன்று நிலை. பார்த்ததும் பிடித்து விட்டது இருவருக்கும். அதுவே மாப்பிள்ளையின் அன்னையான நளினிக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் கந்தனின் அக்காக்கள் இருவருக்கும் ஏனோ பெண்ணவளை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என நினைத்து தாயை மூளை சலவை செய்கிறார்கள். அவர்களின் பேச்சுக்கு சில நேரம் கட்டுப்பட்டாலும் தன் சுய அறிவையும் அவரின் நல்மனதாலும் சுதாரித்து மகனின் கோபத்திற்கும் அஞ்சி தன்னை சரி செய்து கொள்கிறார் நளினி.
கந்தனின் தந்தை எப்போதும் நியாயவாதியாக இருக்கிறார். அவரைப் போலவே அவரின் மாப்பிள்ளைகள் இருவரும் அதே நல்ல குணநலனுடன்.
திருமணம் கோலாகலமாக நடக்கிறது.
அதீதக் காதலுடன் பயணிக்கிறது இவர்களின் வாழ்வும். திடீரென சுனாமியாக இவர்கள் வாழ்வில் இரு பிரிவுகள் வருகிறது. ஒன்று கந்தனின் அன்னை நளினியால் மற்றொன்று அவனின் சகோதரிகளால்.
இதில் பெண் அவள் கணவனையும் சந்தேகிக்கிறாள். அவன் வேண்டாம் என முடிவெடுக்க. அவள் முடிவுக்கு கட்டுப்பட்டானா அல்லது வெகுண்டு எழுந்தானா என்பது கதையில்.


மனைவியை தேடி மாமனார் வீட்டிற்கு வரும் கந்தனுக்கும் தெய்வானையின் தந்தைக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் அருமை.. சீரியஸாக போய்க் கொண்டிருந்த கதைக்கு இடையில் நகைச்சுவையான காட்சி 😀🥰
சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
# வாக்கப்பட்டு வப்த வாசமலரே !

# அம்மு இளையாள்


திருமணம் வேண்டாம் என்றவனை கட்டாயப்டுத்தி பெண் பார்க்க அழைத்துசெல்ல …


பெண்ணை பார்த்துவிட்டு அவன் செய்யும் அலப்பறையில் இவனா திருமணத்தை தள்ளி போட்டவன் என நினைக்க வைததுவிடுகின்றான்.



மாப்பிள்ளை கந்தனின் அலப்பறையில் பெண்ணை பெற்றவர்கள் மகிழ, வழக்கம் போல தான், மாப்பிள்ளை பக்கம் கொஞ்சம் சைடாக சைட் வாங்க ஆரம்பித்துவிடுகிறது.



மகனின் அலப்பறையில் தாய் மனம் சுணங்கினாலும், மருமகள் தன் இயல்பான நல்குணங்களால் அவளை அறியாமலேயே மாமியாரின் சுணக்கங்களை தீர்த்துவிடுகிறாள்.




நாத்தனார்கள் வேலை இல்லாமாலா,அதுவும் கல்யாண கனவு காணும் தன் தம்பியை கண்ட பின்னால்…



இயல்பாய் தோன்றும்…பய உணர்வு…தெளிந்த ஓடையில் கசடை சேர்க்கிறது …ஆனாலும் இத்தனையும் தாண்டி திருமண வைபவத்தில் இருவரும் இணைகின்றனர்.


மாமியருடன் சின்ன சினன் பூசல்கள் ஏற்பட தான் செய்கிறது..


அதை ஒருவருக்கு துணையாய் நின்று கடக்கின்றனர்.



மாப்பிள்ளை மாமானார் உறவு வார்த்தையாடல்…நேர்த்தி

அவர்களின் புரிநதணர்வு நம் மனதில் இதமான உணர்வு


ஒருவரின் மேல் ஒருவருக்கு அபரிதமான பிணைப்பும்,நம்பிக்கையும் இருந்தும்‌,ஏனோ தன் மன்னவனை பிரிகிறாள் இந்த கந்தனின் காதல் கண்ணாட்டி. தெய்வயானை.


பிரிவுக்கான காரணம் என்ன…


பிடித்தமிருந்தும், பிடிப்பிருந்தும் விலகி செல்ல தூண்டியதன் பின்னனி தான் என்ன…




அவதூறுகள் எப்பொழுதும் அருவாள்களை விட கூர்மைமானது…வீசுவதற்கு முன் யோசிங்கள்…பூமாராங்காய் நம்மை பதம் பார்ததால் நாம் தாங்கவோமா என்று…!!


இதில் தாய் மகனுக்கிடையே சிறு சிறு உறசல்கள் இருந்தாலும் அவர்களிடைய இருக்கும் அந்த பாசத்தினை, அதனை தாண்டிய அவர்களின் அழகான பந்தம்…நிச்சயம் நகைச்சுவை கவிதையின் அழகுதான்.


கந்தனும் அவன் காதலியும் கைகோர்த்தபின், அவர்கள் காதல் தென்றலாய் எல்லோரையும் வருடி தான் செல்கிறது.



மொத்தத்தில் “வாக்கப்பட்டு வந்த வாசமலரில் ” , வீசும் வாசம்,உங்களையும் வசம் கொள்ள .. வாசித்து மகிழுங்கள்.
 
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
From midnight texts to mother-in-law troubles! This story of கந்தன் and தெய்வானை is a rollercoaster of emotions. It captures the soul of Indian marriages where love is great, but the family politics is even greater! A must-read for anyone who loves a realistic family drama❤️✨
 
Top