ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 6- மன்னவன் மயங்கும் மலரவள்

மன்னவன் மயங்கும் மலரவள்...குருசேத்திரன் ஒரு சரியான சைக்கோ தொழிலதிபர் அவங்க அம்மா மணியம்மையை கூட இருந்தே பார்த்து கொள்ள நர்ஸாக நாயகன் வீட்டிற்கு நாயகி செம்பருத்தி வருகிறார்.... நாயகி மீது ஏதோ ஒரு உணர்வு நாயகனுக்கு ஏற்ப்பட்டு அதிரடியாக திருமணம் செய்து கொள்கிறார்...

நாயகி திருமணம் ஆனப்பின்பே நாயகனின் நோக்கம் தெரிந்து அவனை விலக்கி வைத்து திருமணத்திற்க்கான காரணத்தை கேட்டு ஆராய்கிறார்... அதற்கு முதலே நாயகன் செம்பா மேல் அளவில்லா காதலில் விழ அந்த காதலை வைத்து குருவை செம்பா என்ன செய்கிறாய் என்பதே கதை....செஞ்சா சொல்வதை எல்லாம் குரு செய்வது மனதிற்க்கு குளுகுளு உணர்வு மணியம்மை செம்பா காமினேஷன் மாமியார் மருமகள் இப்படி தான் இருக்கனும்....கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 💐
 
#மன்னவன்_மயங்கும்_மலரவள்
#கௌரிஸ்ரிவ்யூ

ஆன்டி ஹீரோ கதை…ஆன எனக்கு தெரிஞ்சது ஆன்டி ஹீரோயின் தான் 🤣🤣🤣🤣🤣🤣

குரு, தன் அம்மாவை பார்த்துக்க நர்ஸ் தேடரான்…அவன் ப்ரெண்ட் சுப்ரியாவை கொண்டு…..

அவளும் அவ ஹாஸ்பிடலுக்கு வரும் நர்சை எல்லாம் விரட்டி விடறான்…..

ஒரு ஒரு காரணம் சொல்லி…..

அதுக்கு முக்கிய காரணம், அவன் அம்மாவை பார்த்துக்க வரவங்க எல்லாம் அவனையும் சேர்த்து பார்க்க…காண்டு ஆகிட்டான் 🤭🤭🤭🤭

செம்பா அவன் அம்மாவை பார்த்துக்க வர….

விரும்பியே அவளை பார்த்து கல்யாணமும் பண்ணிறான்….

ஆன செம்பாக்கு?????

குரு…இவனுக்கு ஏதோ disorder இருக்குன்னு சொல்லி இருக்கீங்க….அதுக்கு ஏதோ முன்னா நடந்த பாதிப்பா இருக்குனு சொல்லி இருக்கீங்க ரைட்டர்…

பட் அது எல்லாம் ஏதும் சொல்லவே இல்லையே?????

செம்பா நர்சா இருந்தும் அந்த disorder la இருந்து ஏன் குணப்படுத்த நினைக்கல??????

அவனோட பிரெண்ட் சுப்ரியா போட்ட effort கூட இவ செய்யலையே….ஏன்?????

அப்பறம் அவ பெரியப்பா குடும்பத்தோட என்ன பகை?????

செம்பா…ஆரம்பத்தில் இவ கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சது….ஆன உண்மை தெரிஞ்சதும் இவளோட செயல்கள்?????

கேட்டவா ஒழுங்கா கேட்டு போய் இருக்கலாம்…..

அவனை கால் பிடிக்க வைக்கிறதும், beg பண்ண வைக்கிறதும் தானா??????

அதை விட…மணி அம்மா இவளை என்ன பண்ணாங்க????

அவங்க வெகுளியா இருக்காங்க…அவங்களையும் மேடம்னு கூப்பிட்டு கஷ்டபடுத்திரா….

அதை அவங்களும் பெரிசா எடுத்துக்கலா….

திவ்யன் சரி இல்லைனு சொன்னான் குரு…அதையும் ஒரு வார்த்தை அவ அம்மா சொன்னதும் அப்படியே விட்டுட்டா….

இவளோ தான் தங்கச்சி மேல பாசமா????

ம்ச்….கடைசில இவ கேரக்டர் எனக்கு பிடிக்கவே இல்ல….

மணி அம்மா….சோ ஸ்வீட் இவங்க….

மேல சொன்னதுக்கு எல்லாம் இன்னும் விளக்கம் கொடுத்து….இன்னும் அவங்க காதலை அழுத்தமா பதிவு செய்து இருக்கலாம் ரைட்டர்….

போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
AP Verses
APV6
"மன்னவன் மயங்கும் மலரவள்"
பிரதன்ய குழலி அவர்களின் எழுத்தில்
ஆன்டி ஹீரோ கதைதான்.
குருசேத்ரன்.. உயரத்தில் இருக்கும் பிசினஸ்மேன். அம்மாவின் மீது அதிகப்படியான பாசம் கொண்டு உள்ளவன். அவர் உடல் நிலையை பேணுவதில் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக இருக்கிறான். அதுவே அவரின் அம்மாவிற்கு அவனின் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது ஆனாலும் கோபத்தை தாண்டி அன்பும் அதிக அளவில் இருக்கிறது.. இவரைப் பார்த்துக் கொள்ள இவர்கள் வீட்டுக்கு நர்சாக வருகிறாள் செம்பருத்தி. ஐந்து அக்கா தங்கை ஒரு தம்பி என இவளின் குடும்பம் பெரிது. வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சனைக்காக இவர்கள் வீட்டிற்கு முழு நேர நர்சாக வேலைக்கு வருகிறாள்.
மணியம்மையை பார்த்துக் கொள்ள வரும் செம்பருத்தி மீது அவருக்கு பாசம் ஏற்படுகிறது அது அவரின் மகன் குருவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. நாட்கள் போகப்போக கோபத்தை தாண்டி அவள் மேல் பிடித்த மேற்பட திருமணம் செய்து கொள்கிறான் செம்பருத்தியை.. ஆனால் அவன் திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது கதையில்.
குருவின் தோழியாக டாக்டர் சுப்ரியா பாவம் அவனிடம் மாட்டிக் கொண்டு பாடுபடுகிறாள் 😀
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰🌹
Good luck 🥰❤️

Please read this amazing book on AP Verses. Click on the link to read the book -
 
Mannavan mayangum malaraval🪻
Such an amazing story😍❤️.....Guru and semba semaaaaa🤍💎.....sikiram ah story mudinjuteyy nu iruku🥹 but really very close to my heart ❤️.....keep rocking sissyyy 🫂.....All the best 😘🥳
 
Top